Thursday, January 20, 2011

கால்ஷியம் கார்பைடு கற்கள் !

மாங்காய்களை குவியல் குவியலாக வைத்து , அதற்குள் சின்னத் துளையிட்ட பிளாஸ்டிக் கவர்களில் கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு போதுமானது .
மாம்பழம் மட்டுமல்லாது பப்பாளி , தக்காளி , வாழை என்று பலதையும் கல் போட்டு பழுக்க வைக்கிறார்கள் .எனவே , மாம்பழத்திலோ , பப்பாளியிலோ கரும் புள்ளிகள் இருந்தால் நிச்சயம் வாங்காதீர்கள் . கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட கெமிக்கல் .
--- வி. மணி, இராசிபுரம் . மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்

No comments: