Sunday, January 16, 2011

தெரிந்து கொள்வோம் !

* பெரூஸா என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் பால் , பதப்படுத்தப்பட்டு பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது .
* லாக்சர் எனப்படும் பூச்சிகளின் உடலில் இருந்து வெளிப்படும் பிசின்தான் அரக்கு எனப்படுகிறது .
* செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1640ல் கட்டப்பட்டது .
* இந்தியாவின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு 1911 ம் ஆண்டு மாற்றப்பட்டது .
* செல்போனை உருவாக்கியவர் -- மார்டின் கூப்பர் .
* ஈபிள் டவரை உருவாக்கியவர் -- அலெக்சாண்டர் ஈபிள் .
* ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் -- ஜோசப் ப்ரீஸ்ட்லி .
* முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951 -- 56 ஆம் ஆண்டுகளுக்குக்குரியது .
* பழங்கால இந்தியாவின் சிறந்த வானவியல் அறிஞர் -- ஆரியபட்டர் .
--- .தினத்தந்தி , இதழ் உதவி : N. G. கலியபெருமாள் . திருநள்ளாறு .

No comments: