Friday, January 7, 2011

ஜோக் கார்னர் !

* " தலைவா , கூப்பிட்டீங்களா ? "
" உன்னை மனுஷன் கூப்பிடுவானா ? "
" அதனாலதான் கேட்டேன் ! "
* " ஏண்டி இவ்வளவு லூசா ஜாக்கெட் போடுறே ! "
" அது எனக்குத் தெரியும் , உன் வேலையைப் பாருடி ! "
" ' அது' வும் எனக்குத் தெரியுதடி , அதான் சொன்னேன் . "
* " ஆபரேஷன் என்ன ஆச்சு ? "
" மயக்கம் தெளிஞ்ச உடனேதான் தெரியும் ."
" பேஷண்டுக்கு எப்ப மயக்கம் தெளியும் ? "
" மயக்கம் தெளியணுமுன்னு சொன்னது பாதி ஆபரேஷன்ல ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்த
டாக்டருக்கு ! ".
* " 1...11...111... இந்த மூணுக்கும் என்ன வித்தியாசம் ? "
" தெரியலையே... ! "
" 1 தனியா இருக்கு
11 ஜோடியா இருக்கு
111 குடும்பத்தோட இருக்கு ! "
* " மோகத்தை அடக்குவது எப்படி ? "
" அது முடியாமல்தானே சாமியார் ஆனேன் ! "
* " கடைசிச் சொட்டு இருக்கும்வரை விட மாட்டேன்னு தலைவர் பேசறாரே... உடம்புல இருக்குற ரத்தத்தைத்தானே
சொல்றாரு ?"
" நீ வேறப்பா ! பாட்டில்ல இருக்கிற சரக்கைச் சொல்றாரு ! ".
* " அந்த டாக்டர் பேரு என்ன ? "
" ' டக்கு'னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது....' சா'வுல ஆரம்பிக்குமே..."
* போலீஸ் : " ஏம்ப்பா....இது ' ஒன் வே'ங்கிறதை நீ கவனிக்கலையா ? "
நபர் : " கவனிச்சேன்....ஆனா , நீங்க இருக்கிறதைத்தான் கவனிக்கல சார் ! "

No comments: