Wednesday, January 5, 2011

க்ளூ !

* " கருவில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டம் விரல் நுனிகளுக்குச் சென்று , அதற்கு மேலே செல்ல முடியாமல் சுழனறு திரும்புவதால் ரேகைகள் உருவாகின்றன என்கிறார்கள் .உலகில் ஒருவரின் விரல் ரேகை இன்னொருவரைப் போல் இருக்காது . அது இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் சரி ! நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது . ஆனால் , எத்தனை வருடங்கள் ஆனாலும் கைரேகை கொஞ்சம்கூட மாறுவது இல்லை . எனவே , அதை ' கடவுள் கொடுத்த முத்திரை ' என்று விரல் ரேகை நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள் .
* விரல் நுனிகளில் நுண்ணிய சுரப்பிகள் அதிகம் . அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன . இந்த வியர்வைதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது .
* டைட்டானியம் டை ஆக்ஸைடு , ஜிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ப கலந்து , குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால் , அதில் படிந்திருக்கும் ரேகை ( வியர்வை ஈரம் ) ஒட்டிக் கொண்டுவிடும் . பிறகு , ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால் , ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும் .
* நியூட்டனின் முன்பு விழுந்த ஆப்பிள் அவருக்குக் கிடைத்த க்ளூ ! அதை உலகம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தது அவரது ஆய்வு மனப்பான்மை . இதன் விளைவே இன்று ரீஃபில் முதல் ராக்கெட் வரை சாத்தியப்படுத்துகிறது நியூட்டனின் விதிகள் . இதுபோலவே குளிக்கும்போது கிடைத்த க்ளூவை வைத்து ஆர்க்மிடிஸ் நீரைக்கொண்டு தங்கத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டு அறிந்தார் .
* 18 - ம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெனிட்டா என்ற சிறுமி தன் பெயரை மரத்தின் வேரில் கத்தியைக்கொண்டு செதுக்க முயற்சி செய்கிறாள் . அதனைக் கண்ட ஜெனிட்டாவின் அப்பா அவரே செதுக்கித்தருகிறார் . வெட்டப்பட்ட தன் பெயர் பனியால் மூடப்படுவது ஜெனிட்டாவுக்குப் பிடிக்கவில்லை . எனவே , பைபிளை எழுத அவள் அப்பா தயாரித்து வைத்திருந்த காகிதம் ஒன்றை எடுத்து மரத்தின் அந்தப் பகுதியை மூடுகிறாள் . அதன் மீது பனி படுகிறது . அடுத்த நாள் அங்கே வந்த ஜெனியின் அப்பா மரத்தில் செதுக்கிய பெயர் , தாளில் பதிந்திருப்பதைக் கண்டு , அதை பத்திரப்படுத்துகிறார் . பின்னாளில் அந்தத் தாளைக் கண்ட கூட்டன்பர்க் அச்சு முரையைக் கண்டுபிடித்தார் !
* காட்டுக்குள் மனித நடமாட்டம் இருந்தால் , ஆள் காட்டிக் குருவி என்கிற ஒரு குருவி கூவி மற்ற விலங்குகள் , பறவைகளை எச்சரிக்கும் . தேடுதல் வேட்டைக்காக போலீஸ் நுழையும்போதெல்லாம் இதைத் துப்பாக வைத்துக் கண்டுபிடித்து இடத்தைக் காலி செய்துகொண்டு இருந்தான் வீரப்பன் !
* இயற்கைப் பேரழிவு ஏற்படுவதற்கு முன் விலங்குகள் மனிதர்களுக்குத் துப்புக் கொடுக்கும் . நாய்கள் சம்பந்தமே இல்லாமல் கூட்டமாகக் குரைக்கும் . பறவைகள் ஒரு குழுவாக ,இரைச்சலோடு பறந்து செல்லும் . துறவி நண்டு என்கிற ஒருவகை நண்டு பின்பக்கமாக நடக்கும் . இதெல்லாம் நடந்தால் பூகம்பமோ , சுனாமியோ வரப் போகிறது என்று அர்த்தம் .மனிதனுக்குத் தெரியாத இந்த க்ளூக்கள் உயிரினங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்பது பிரபஞ்ச ரகசியம் !
--- க்ளூ விகடன் இதழுடன் இணைப்பு . 16 . 06. 2010. .

No comments: