Monday, January 3, 2011

செல்போன் !

* 1973 -ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர் . ' மேரி கிறிஸ்துமஸ் ' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி . அனுப்பியவர் ,நீல்டேப்வொர்த் ( டிசம்பர் 1992 )
* செல்போன்களை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தால் உயிரணுக்களில் பாதிப்பை உண்டாக்கி ஆண்களை மலடாக்கும் என்பது உண்மையா ?இதில் உண்மை இல்லாமல் இல்லை . பொதுவாகவே , உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் குறைவான வெப்ப நிலையில்தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும் . ஆன் செய்யப்பட்ட
செல்போன்களில் இருந்து எப்போதும் கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் . அந்த நிலையில் போன்களை பேன்ட் பாக்கெட்டில் நீண்ட நேரம் வைத்திருந்தால் நிச்சயமாக உயிரணுக்கள் பாதிக்கக்கூடும் !
* எப்போது யாருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று எப்படிக் கணிப்பது ? அதற்குக் கை கொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ. சி. ஜி. மிஷின் பொருத்தப்பட்ட செல்போன் . உங்கள் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல் , உங்கள் இதயத் துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும் . ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மோபைலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் டாக்டருக்கு தகவல் அனுப்பிவிடும் , இந்த மொபைல் . உடனே , மருத்துவர்கள் நோயாளியையோ , உறவினர்களையோ தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியும் . அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் அட்வான்ஸ் கம்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன் சி செஞ் , ' அவ்வளவு பெரிய ஈ. சி. ஜி. இயந்திரத்தைக் கையடக்கத்தில் கொண்டு வந்ததுதான் உண்மையான சாதனை ' என்கிறார் . ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் , இந்தத் தொழில் நுட்பத்தையும் சாஃட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது இந்தத் திட்டத்துக்கு நிதிஉதவி அளித்து வரும் மைக்ரோசாஃட்ப்ட் நிறுவனம் !
---செல்போன் விகடன் இணைப்பு , 26 .05. 2010.

No comments: