Saturday, December 31, 2011

அரசுப் பள்ளி பாழல்ல....

அரசுப் பள்ளி பாழல்ல....அன்னைத் தமிழும் பாழல்ல !
மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய்க் கற்றது கோவையில் தான
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
அகிலம் பார்த்து மெச்சியது
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
நானிலமெல்லாம் அதைச் சொன்னேன்
அந்தோ இன்று எனதூரில்
அங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனைப் பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகி செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன் .
ஏழ்மை என்பது பணத்தாலா ?
அறியா மனதின் நிலையாலா ?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை
அனைவரும் உணரும் வகையாக
விகடன் வழியாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம் !
--- கவிதை : மயில்சாமி அண்ணாதுரை ,
--- ஆனந்த விகடன் , 8 . 6 . 2011 .

Friday, December 30, 2011

மருந்து கம்பெனிகள் !

ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக ரூ .3,600 கோடி வரை செலவாகிறது . இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை . புதிதாக உருவாக்கப்படும் மருந்து மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்கவேண்டும் .
வளர்ந்த நாடுகளில், இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு . தவிர, நோயாளிகளின் பாதுபாப்புக்கான செலவும் அதிகம் . மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சதவிகிதம் வரை குறையும் . மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள் .
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன . இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன . இதனால், மருந்து நிறுவனங்களால் சட்டத்தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது . ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்று நோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர் . அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழ்ங்குடியினர் . அவர்களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதே தெரியாது . இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ( எய்ம்ஸ் ) இப்படி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது . சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள் .
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு . இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள் !
எத்தகைய அற உனர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழி நடத்துகிறது !
--- சமஸ் , ஆனந்த விகடன் . 29 . 6 . 2011 .

Thursday, December 29, 2011

ஈஸி பெருக்கல் 50 .

மூன்று இலக்க எண்களை 50 -ஆல் பெருக்க ஈஸியான வழி :
* பெருக்க வேண்டிய எண் ஒற்றைப்படை எண் என்று வைத்துக்கொள்ளுங்கள் . உதாரணம் : 323 .
1 . இதை 2 -ஆல் வகுக்க வேண்டும் . 323 வகுத்தல் 2 = 161 ; மீதி 1 .
2 . மீதியை விட்டுவிட்டு, வகுத்து வரும் விடையுடன் 50 -ஐ சேருங்கள் . அதுதான் விடை ! 323 பெருக்கல் 50 = 16150 .
* பெருக்க வேண்டிய எண் இரட்டைப்படை எண் என்று வைத்துக்கொள்ளுங்கள் . உதாரணம் ; 128 .
1 .இதை 2 - ஆல் வகுக்க வேண்டும் . 128 வகுத்தல் 2 = 64 .
2 . இப்படி வகுத்து வரும் விடையுடன் இரண்டு பூஜ்யங்களைச் சேருங்கள் = 6400 . அதுதான் விடை ! 128 பெருக்கல் 50 = 6400 .
---தினமலர் இணைப்பு , 10 . 6 . 2011 .

Wednesday, December 28, 2011

டயாலிசிஸ் ?

கிட்னி ஃபெயிலியரில் அக்யூட், கிரானிக்கில் என்று இரண்டு வகை . இதில் முதல் வகையை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விட முடியும் . குறிப்பிட்ட காலத்திற்கு டயாலிசிஸ் செய்தால் போதும் . ஆனால் கிரானிக்கில் அப்படி அல்ல . குணப்படுத்த முடியாது . மாறாக வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சையை தொடரவேண்டும் .
உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்த்ம் வேலையை கனக்கச்சிதமாகச் செய்வது கிட்னிதான் . அடிவயிற்றின் ஆழத்தில் அவரை விதைகள் போல் இருக்கும் இந்த உறுப்புகள் செயலிழந்து போக நிறைய காரணங்கள் உண்டு . அப்போது செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யப்படுவதுதான் ' டயாலிசிஸ் '. சுருக்கமாக ' கிட்னி' யின் வேலையை, இயந்திரம் செய்வதுதான் டயாலிசிஸ் .
டயாலிசிஸ் இரண்டு வகை . ஒன்று... ' பெரிடோனியல் டயாலிசிஸ் '. சுருக்கமாக ( பி.டி . ) ' ஹீமோ டயாலிசிஸ் ' மற்றொன்று .
முதல் வகையில் வயிற்றுக்குள் இருக்கும் ஒருவித சவ்வினை ( மெம்ப்ரேன் ) பயன்படுத்துவார்கள் . அதன்படி, ரத்தத்தை செறிவு குறைந்த திரவ நிலையில் வெளியே எடுத்து, சவ்வூடு பரவல் முறையில் ( ஆஸ்மாசிஸ் ) சுத்தம் செய்து திருப்பி உள்ளே அனுப்புவார்கள் .
இரண்டாவது வகை சற்று சிரமமானது . அதன்படி, நோயாளியின் உடலிலிருந்து குழாய் மூலம் ரத்தத்தை முழுவதும் ( 5 லிட்டர் ) வேகமாக வெளியே எடுப்பார்கள் . பின்னர் அதே வேகத்தில் உடலுக்குள் செலுத்துவார்கள் .
இந்த இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கும்போது நோயாளி சற்று துவண்டு போவது உண்டு . ஆனால் அதனைச் சமாளிக்க மருந்துகளும் நடைமுறையில் இருக்கு .
--- எஸ். அன்வர் , குமுதம் 15 . 6 .2011 .

Tuesday, December 27, 2011

கம்ப்யூட்டரில்...

ரூபாய், காசு புள்ளியுடன் எழுத .
எக்சல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவொம் . ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் காசுக்கும் இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும் . இதனை எக்சல் புரோகிராமே அமைக்கும்படி செட்செய்திடலாம் .
உதாரனமாக, நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் காசு இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும் . உதாரணமாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக்கொள்வோம் . நீங்கள் கீழ்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும் . நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை :
1 . Tools மெனு கிளிக் செய்து அதில் Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும் .
2 . இனி கிடைக்கும் Options என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபில் கிளிக் செய்திடவும் . இதில் Fixed decimal என்னும் பிரிவில் செக் செய்திடவும் . இப்போது Places என்னும் இடத்தின் முன்னால் 2 என அமைத்திடவும் . பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும் . இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும் . இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் Fixed decimal என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும் .
--- தினமலர் , 21 . 6. 2011 .

Monday, December 26, 2011

ஓவனில் ஒரு சிக்கல் .

சமையலை விரைவுபடுத்தும் என்றாலும் மைக்ரோவேவ் ஓவனில் ஒரு ஆபத்தான சிக்கல் உண்டு . மைக்ரோஓவனைப் பயன்படுத்தி சமைக்கும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது . அவ்வாறு செய்தால் பிளாஸ்டிக் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் டையாக்சின் வெளியாகும் . அவை கேன்சர் நோயை உண்டாக்கும் .
தீர்வு : மைக்ரோவேவ் ஓவனில் கண்ணாடி அல்லது செராமிக் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் . ப்ரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைக்கக் கூடாது . அதிக குளிர்ச்சியிலும் டையாக்சின் வெளியாகும் .
--- ராஜி வெங்கடேஷ் .
--- தினமலர் இணைப்பு , 18 . 6 . 2011 .

Sunday, December 25, 2011

தெரியுமா ? தெரியுமே !

பாலைவனம் !
' எந்த இடத்தில் ஒரு சில சிறப்புத் தாவரங்களைத் தவிர பொதுவான தாவரங்கள் வளர முடியாத வகையில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கிறதோ, அந்த இடம்தான் பாலவனம் ' -- இதுதான், ' பாலைவனம் ' என்ற வார்த்தைக்கான அறிவியல் வரையறை . இந்த வரையறைப்படி, குளிர்நிறைந்த ஆர்க்டிக் துருவப்பகுதியும் பாலைவனம்தான் !
டி.பி. நோய் !
" Mycobacterium tuberculosis என்னும் பாக்டீரியா உடலில் இருந்தால்தான், பரிசோதனையில் டி.பி. பாசிட்டிவ் என்று ரிசல்ட் காண்பிக்கும் . உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு டி.பி. தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் "
பேப்பர் கப் !
அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் லுலன் என்ற வழக்கறிஞர்தான் 1907 -ல் ஆண்டில் பேப்பர் கப்களைக் கண்டுபிடித்தார் . " ஒரே கப்பைப் பலரும் பயன்படுத்தும்போது கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு . அதைத் தடுக்கவே இதைக் கண்டுபிடித்தேன் " என்று குறிப்பிட்ட அவர், தனது கண்டுபிடிப்புக்கு ' ஹெல்த் கப் ' என்று பெயர் சூட்டினார் .
கொலாஜ் ஓவியம் !
காகிதங்கள் அல்லது மரத்துண்டுகளை வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் ஓவியத்தைத்தான் கொலாஜ் ஓவியம் என்கிறார்கள் . கொலே என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ' பசை ' என்று அர்த்தம் . காகிதத் துண்டு அல்லது மரத்துண்டுகளை பசையால் ஒட்டி உருவாக்கும் ஓவியம் என்பதால்தான் ' கொலாஜ் ' என்ற பெயர் வந்தது .
பாப்கார்ன் !
சோளத்தில் இருந்துதான் சோளப்பொரி ( பாப்கார்ன் ) தயாரிக்கப்படுகிறது . சோளத்தைக் கவனியுங்கள் . அதன் மத்தியில் ஈரப்பதமும், அதைச் சுற்றிலும் கடினமான மாவுச்சத்தும் இருக்கிறது . சோளப்பொரியைத் தயாரிக்க, சோளத்தைச் சூடாக்குவார்கள் . அப்போது, அதன் மத்தியில் உள்ள ஈரப்பதம் விரைவில் வெப்பமடையும் . இதனால் உருவாகும் நீராவி, கடினமான மாவுச்சத்து பகுதியில் ஊடுருவி வெளியேறும் . இதன் விளைவாக, கடினமான மாவுச்சத்து வெந்து மென்மையாக மாறும் . நீராவி வளைந்து நெளிந்து வெளியேறும் என்பதால், அதற்கு ஏற்றபடி மாவுச்சத்து பகுதியும் வளைந்து நெளியும் . இந்த செயல்பாடுதான், சோளப்பொரியை பூ போல் விரிய வைக்கிறது .
யானை !
யானையின் பற்கள் விசித்திரமானவை . பிறந்த யானைக்குட்டிக்கு நான்கு பற்கள் இருக்கும் . அவை பலமிழந்து விழுந்ததும் மீண்டும் நான்கு பற்கள் முளைக்கும் . இப்படி யானையின் ஆயுளில் அதிகபட்சமாக 7 முறை பற்கள் முளைக்கும் . அதாவது, ஒரு யானையின் ஆயுளில் அதற்கு மொத்தம் 28 பற்கள் இருக்க வாய்ப்பு உண்டு . சராசரியாக, ஒரு பல்லின் எடை 4 கிலோ அளவில் இருக்கும் !
----தினமலர் பல இணைப்புகளிலிருந்து .

Saturday, December 24, 2011

' சந்தேகக் கோடு '

சந்தோஷம் எப்போது வரும் ?
பயம் இல்லாத வேளையில் !
பயம் எப்போது இல்லாமல் போகும் ?
சந்தேகம் இல்லாத வேளையில் !
சந்தேகம் எப்போது இல்லாமல் போகும் ?
ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத் தன்மை இருக்கும் வேளையில் !
இதனால்தான்
' சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு ' என்கிறார்கள் !
--- தினமலர் இணைப்பு . 18 . 6 . 2011 .

Friday, December 23, 2011

ஈஸி 101 பெருக்கல் !

இரண்டு மற்றும் மூன்று இலக்க எண்களை 101 -ஆல் பெருக்கும் ஈஸி டெக்னிக் .
இரண்டு இலக்க எண்ணை 101 -ஆல் பெருக்குவது ரொம்ப ரொம்ப ஈஸி . வேறு எதுவும் செய்ய வேண்டாம் . அந்த இரண்டு இலக்க எண்ணை ஒருமுறை அதன் அருகில் எழுதிவிட்டால் போதும் !
உதாரணம் : 15 x 101 = 1515 ; 30 x 30 = 3030 ; 47 x 47 = 4747 .
மூன்று இலக்க எண்ணை 101 -ஆல் பெருக்கும் ஈஸி டெக்னிக் இதோ :
456 ஐ 101 ஆல் பெருக்க வேண்டும் ...
முதலில், 456 -ன் கடைசி இரு இலக்கங்களை அப்படியே எழுதுங்கள் ; 56 . இதை ' அ ' என்று குறித்துக் கொள்ளுங்கள்.
பின்னர், 456 லிருந்து முதல் இலக்க எண்ணுடன் 456 ஐ கூட்டுங்கள் . : 4 + 456 = 460 . இதை ' ஆ ' என்று குறித்துக் கொள்ளுங்கள் .
456 x 101 = B A ! அதாவது , 456 x 101 = 46056 .
இன்னொரு உதாரணம் : 338 x 101 = ?
அ = 38.
ஆ = 3 + 338 = 341 .
338 + 101 = ஆ அ = 34138 .
--- தினமலர் இணைப்பு , 27 . 5 . 2011 .

Thursday, December 22, 2011

விமானம் !

தேங்காய் எண்ணெயில் ஓடும் விமானம் !
உலகளவில், முன்னணி விமான நிறுவனமான ' வெர்ஜின் அட்லாண்டிக் ' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது . பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரி பொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது . இதற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது .
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணை மற்றும் தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பாபாசூ எண்ணையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது .
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு, போயிங் ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது .
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது . விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன . அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது . இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை . பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே பயணம் செய்தனர் .
--- தினமலர் இணைப்பு , 29 . 1 . 2011 .

Wednesday, December 21, 2011

ஷாஜகான் எழுதிய கடிதம் !

பதவி ஆசையால், பெற்ற தந்தை என்றும் பாராமல் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜகானை சிறையில் அடைத்து தண்ணீர் கூட தராமல் கொடுமைப்படுத்தினான் ஔரங்கசீப் . அது குறித்து ஔரங்கசீப்புக்கு கடிதம் எழுதினார் ஷாஜகான் . அதில், ' ஔரங்கசீப்.... இந்துக்கள் சம்பிரதாயத்தில், தந்தை இறந்துவிட்டால், அவருடைய மகன் எள்ளையும், தண்ணீரையும் வழங்கி இறந்த தன் தந்தையின் ஆன்மாவுடைய பசியைத் தீர்ப்பான் . ஆனால், நீ உயிருடன் இருக்கும் எனக்கு தண்ணீர் கூட தர மறுத்து தவிக்க விட்டுள்ளாய் ' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார் .
--- தினமலர் இணைப்பு , 29 . 1 . 2011 .
ஒரு புதிர் !
ஆங்கிலத்தில் 5 என்ற எண்ணுக்கு நடுவில் 4 ம் எண்ணை எப்படி எழுதுவீர்கள் ?
---
விடை : F I V E . 15 . 6. 11 .
----



---

Tuesday, December 20, 2011

ஆணா, பெண்ணா ?

செத்துப் போனவரோட மண்டை ஓட்டைப் பார்த்தே அவர் ஆணா, பெண்ணானு கண்டுபிடிக்க முடியும் !
ஆண்களின் கண் குழிவு முழுமையா, வட்டமா இருக்கும் . பெண்களோட கண் குழிவு முழு வட்டமா இருக்காது . தவிர, பெண்களோட மண்டை ஓடு சின்னதாக இருக்கும் . அதேசமயம், அவங்களோட இடுப்பு எலும்பு பகுதி பெரிசா இருக்கும் . இதையெல்லாம் கணக்கெடுத்தாலே ஒரு குறிப்பிட்ட மண்டை ஓடு ஆணுடையதா, பெண்ணுடையதானு தீர்மானிக்கலாம் .
சின்ன பசங்களோட குரல் வளர்ந்த உடனே மாறிடுதே அது ஏன் ?
குழந்தையா இருக்கும்போது நம்மளோட குரல்வளை சின்னதா இருக்கு . குரல்வளையில காத்து படும்போது, அதுல அதிர்வுகள் உண்டாகுது . அந்த அதிர்வுகள்தான் ஒலி அலைகளை ஏற்படுத்துது நாம் வளரும்போது குரல்வளைகளும் நீளமாகுது . சின்ன குரல்வளையில் காத்து சுலபமா நுழைஞ்சு வெளிவே வந்துடும் . ஆனா, நீளமான குரல்வளையால ஒலி எழுப்பணும்னா காற்றினுடைய அழுத்தத்தை அதிகமா குடுக்க வேண்டியிருக்கும் . அதனால அதிர்வுகளும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . பெண்களோட குரல்வளை நீளம்விட, ஆண்களோட குரல்வளை நீளம் அதிகம் . அதனாலதான் குரல்ல அவ்வளவு வித்தியாசம் இருக்கு .
--- தஞ்சம்மா... குஞ்சம்மா ! தொடரில் , ஜி. எஸ். எஸ் . .
---- அவள் விகடன் , டிசம்பர் 21 , 2007 .

Monday, December 19, 2011

அப்படியா சங்கதி .

பப்பாளி
வீட்டில் ஒரு பப்பாளி மரமிருந்தால் நல்ல வைத்தியர் ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்று அர்த்தம் .
வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பழம் பப்பாளி . தினமும் பப்பாளி பழம் உண்டால் கண் பார்வை தெளிவடையும் . மலச்சிக்கல் தீரும் . இப்பழத்தின் பெப்லின் என்ற திரவப் பொருள் உள்ளது . இதற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உள்ளது .
மூல நோய்
முடக்கத்தான் வேரை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாகக் கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி ஒரு மண் சட்டியில் இட்டு சிறிது நீர்விட்டு சுண்டக் காய்ச்சி சுத்தமான துணியில் வடிகட்டி, காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும் .
புழுவெட்டு நீங்க
சிலருக்கு தலையில் புழுவெட்டு காரணமாக தலைமுடி உதிர்ந்து போகும் . இவர்கள் செம்பருத்திப் பூவின் மொட்டை எடுத்து நன்கு மைபோல் அரைத்து புழுவெட்டு உள்ள பகுதிகளில் தொடர்ந்து பூசி வந்தால், புழுவெட்டு மறையும் . முடி உதிர்தல் நீங்கி, தலைமுடி அடர்த்தியாக வளரும் .
தூக்கம்
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து சாறெடுத்து சிறிது தேன் கலந்து தூங்கப்போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தினமும் கொடுத்து வந்தால் தூக்கம் நன்றாக வரும் .
பேன் தொல்லை
படுக்கும் போது தலையணையில் கருந்துளசி பரப்பி படுத்தால் பேன்கள் உதிர்ந்துவிடும் . கருந்துளசி இலையை காயவைத்து புகையிட்டு தலையைக் காட்டினாலும் பேன்கள் உதிர்ந்து விடும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . ஏப்ரல் 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107

Sunday, December 18, 2011

துணிகளில் ரத்தக் கறை !

துணிகளில் படிந்துவிட்ட ரத்தக் கறையைப் போக்குவதற்கு ஏதாவது கெமிக்கல் இருக்கிறதா ?
' ரத்தக்கறை படிந்த துணியை முதலில் தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, பின் நன்றாக பிழிந்துகொள்ளவும் . அதன்பின் கறை படிந்த புள்ளிகளில், இடங்களில் மட்டும் படும்படி ஹைட் ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலை ஒரு சிறிய பிரஷ்ஷால் தொட்டு வைக்கவும் . வைத்த சிறிது நேரத்தில் அந்தக் கரைசல் நுரைக்கத் தொடங்கும் . அது நன்றாக நுரைத்தபின் அந்த இடத்தை பிரஷ் செய்து சுத்தமாக தண்ணீர்விட்டு அலசவும் . அப்பொழுதும் லேசாக ரத்தக்கறை தென்பட்டால் அது முற்றிலும் போகும்வரை ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலால் அந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்யலாம் . எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக அந்த ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசல் துணியில் எங்கும் ஒட்டியிருக்காத அளவிற்கு நன்கு துவைத்து உலர்த்தி பயன்படுத்தவேண்டும் ."
வைரம் !
" பூமிக்கு அடியில் இருக்கும் கார்பன் படிமங்கள்தான் வைரமாக உருவாகிறது . கரியாக இருந்து வைரமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் 990,000,000 வருடங்கள் ஆகும் . இது குறைந்த பட்சம் . இதற்கு மேலும் ஆகலாம் . வைரங்களில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீல நிறத்தில் உள்ள வைரங்கள் கொஞ்சம் காஸ்ட்லியானவை . அபூர்வமானவை .
செயற்கை வைரங்கள் கிரிஸ்டல், கிளாஸ் உட்பட பல்வேறு பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது . செயற்கை வைரங்களில் கியூபிக் ஜிர்கோனியா மொஸானைட் என இரண்டுவித வைரங்கள் ஒரிஜினல் வைரங்கள் போலவே தோற்றமளிக்கும் . அதைப் பாகுபடுத்தி பார்ப்பது சிறிது கடினம்தான் ."
--- தகவல் தமயந்தி , குமுதம் . 14 . 4 . 2010 .

Saturday, December 17, 2011

கனக்கு ஐக்யூ !

8 x 473 = 3784 .
9 x 351 = 3159 .
15 x 93 = 1395 .
21 x 87 = 1287 .
27 x 81 = 2187 .
35 x 41 = 1435 .
இந்த பெருக்கல் சமன்பாடுகளில் ஒரு விசித்திர ஒற்றுமை இருக்கிறது ! அதாவது, பெருக்கப்படும் எண்களில் உள்ள எண்கள்தான் விடையிலும் உள்ளன !
--- .தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Friday, December 16, 2011

அப்படியா சங்கதி .

நெய்யும் தயிரும் ஏன் ?
உணவு உண்ணும் ஆரம்பத்தில் பருப்புடன் நெய் சேர்த்து உண்பதால் துவரம் பருப்பின் உஷ்ணம், பழைய மலபந்தம், வாததோஷம் ஆகியவை நீங்கும் . ஞாபக சக்தி அதிகரிக்கும் . மேனிக்கு வனப்பும் கண்ணுக்கு ஒளியும் உண்டாகும் . உணவின் முடிவில் தயிரும் உப்பும் சேர்த்து சாப்பிட்டால் உண்ட உணவு நன்கு ஜீரணமாகும் .மலச்சிக்கல்
மலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனங்கள் .
சர்வாங்காசனம், சிவலிங்காசனம், ஹலாசனம், ஏசபாத ஆசனம், பாத ஹஸ்தாசனம், யோக முத்ரா, நாடிசுத்தி .
வாய்ப்புண் குணமாக .
மனத்தக்காளி இலையைச் சுத்தம் செய்து வாயில் பொட்டு மென்று அதன் சாறை சிறிது நேரம் வாயில் ஊறவைத்து பின்னர் அதனை உமிழ்ந்துவிட வேண்டும் . இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்தால் வாய்ப்புண் ஆறும் .
சுவையும் முக்குற்றமும் .
புளிப்பும் துவர்ப்பும் அதிகரித்தால் வாதம் அதிகரிக்கும் .
உப்பும் கசப்பும் அதிகரித்தால் பித்தம் அதிகரிக்கும் .
காரமும் இனிப்பும் அதிகரித்தால் கபம் அதிகரிக்கும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . மே 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107 .

Thursday, December 15, 2011

கத்தரிக்காய் !

பி. டி . கத்தரிக்காய் !
பி. டி . கத்தரிக்காய் என்பது, மரபணு மாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கத்தரிக்காய் .
பேசில்லஸ் துரின்சீன்ஸிஸ் என்பதின் சுருக்கம்தான் ' பி.டி ' . இந்த ' பி.டி ' பாக்டீரியாவின் மரபணுவை கத்தரி செடியின் மரபணுவில் இணைத்து ' பி. டி' கத்தரிக்காயை உருவாக்குகின்றனர் .
--- .தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Wednesday, December 14, 2011

இனிக்கும் கணக்கு !

முதல் இலக்கம் ' 1 ' ஆக உள்ள இரு இரட்டை இலக்க எண்களை ஈஸியாகப் பெருக்கும் சூப்பர் பெருக்கல் டெக்னிக் .கீழே உள்ள இரு உதாரணங்களையும் நன்கு கவனித்து பயிற்சி செய்தால் நல்லது .
* உதாரணம் : 1 : 11 x 13 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 1 x 3 = 3 . இதுதான் விடையின் கடைசி இலக்கம் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 1 + 3 = 4 . இதுதான் விடையின் நடு இலக்கம் .
3 . பிறகு இந்த இரு இலக்கங்களுக்கு முன் ' 1' சேர்த்தால் விடை வந்துவிடும் . = 143 .
* உதாரணம் 2 : 12 x 18 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 2 x 8 = 16 . இதன் கடைசி இலக்கம்தான் 12 x 18 -ன் விடையில் கடைசி இலக்கம் = 6 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 2 + 8 = 10 .இதோடு முன்னர் எஞ்சியுள்ள 1 - ஐ கூட்டவும் = 11 ; இதில் உள்ள கடைசி எண் ' 1 ' தான் 12 x 18 -ன் விடையின் நடு இலக்கம் = 1 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
3 . முன்னர் எஞ்சியுள்ள எண் ( 1 ) உடன் ' 1 ' கூட்டினால், அதுதான் 12 x 18 - ன் விடையில் முதல் எண் ; அதாவது 1 + 1 = 2. எனவே, 12 x 18 = 216 .
---தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Tuesday, December 13, 2011

தொப்பை குறைக்கும் செல்போன் !

ஜப்பானில் அதிரடி .
பேசுவதில் இருந்து சினிமா பார்ப்பது வரை பல வசதிகளை தரும் செல்போன்கள் அடுத்து உடலை ஸ்மார்ட் ஆக வைத்துக்கொள்ளவும் உதவப்போகின்றன . புதுமை படைப்புகளை உருவாக்கி வரும் ஜப்பானியர்கள்தான் இந்த அதிசயத்துக்கும் காரணம் . சாப்பிட உள்ள உணவு பதார்த்தங்களை இந்த செல்போனில் படம் பிடிக்க வேண்டும் .அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை செல்போன் உடனடியாக காட்டிவிடும் . இதை வைத்து எதை, எவ்வளவு சாப்பிடலாம் என்பதை நாம் முடிவு செய்துகொள்ளலாம் . வரைமுறை இல்லாமல் வயிறு முட்ட சாப்பிட்டு தொப்பை விழுந்து அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த செல்போன் ஒரு வரப்பிரசாதம் . ஜப்பானின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான என் டிடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இந்த மாயாஜால போனை உருவாக்கியுள்ளது .

Monday, December 12, 2011

தாராள மனது !

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் . அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் . பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் . துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து நார்வே மறுபடியும் விபத்தில் மாட்டியது . அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் . உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வே சொன்னதாம், 'ங்கொய்யால .... உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது ! '
--- நாட்டாமை பதில்கள் . தினகரன் , இணைப்பு . 14 . 11 . 10 .

Sunday, December 11, 2011

மூளை சுறுசுறுப்பாக இருக்க .

மூளை சுறுசுறுப்பாக இருக்க மீன் எண்ணெய் சாப்பிடுங்க !.
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு மூளையில் ஏற்படும் பாதிப்பே காரணம் . மூளை பாதிக்கப்படுவதால் உடல் உறுப்புகள் செயல் இழக்கின்றன . இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார் லூசியானா பலகலைக்கழக டாக்டர் நிக்கோலஸ் பசான் . மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு மீன் எண்ணெய் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நிக்கோலஸ் .
மீன் எண்ணெயில் இருக்கும் டோகோசாக் ஷாயினிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் மூளையை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறதாம் . பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள் மீன் எண்ணெய் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்றும், 5 மணி நேரம் கழித்து மீன் எண்ணெய் சாப்பிட்டால் தாமதமாகத்தான் நிவாரணம் கிடைக்கும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
மீன் எண்ணெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலமான ஒமேகா 3, என்ற பொருளும் இதயத்தையும் மூளையையும் பாதுகாக்க உதவுகிறதாம் . குறிப்பாக ஒமேகா 3 அதிகம் சாப்பிட்டால் இதயபாதிப்பு மிகவும் குறையும் என்றும் ஆய்வுத்தகவல் சொல்கிறது .
--- தினமலர் .. நவம்பர் 12 .2010 .

Saturday, December 10, 2011

வலி மாத்திரை வேண்டாம் .

கர்ப்பிணிகளே உஷார்.... வலி மாத்திரை வேண்டாம் !
வலி நிவாரண மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், அது அவர்கள் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தைக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று லண்டனை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஆதாரத்துடன் அதிர்ச்சித் தகவலை வெளியிடுள்ளது .
உலகில் உள்ள கர்ப்பிணி பெண்களில் 50 சதவிகிதம் பேர் ' பெயின்கில்லர் '. என்று சொல்லப்படும் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், அது தாயின் கருவில் இருக்கும் ஆண் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பை செயல் இழக்கச் செய்துவிடுகிறதாம் . அதாவது அந்த ஆண் குழந்தை வாலிபனாகும்போது, விந்தணு உற்பத்தி குறைந்துவிடுமாம் . அதுபோல டெஸ்டிக்கிள் புற்றுநோய் ஏற்படவும் வலி நிவாரண மாத்திரைகள் காரணமாகிவிடுகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது .
ஒரு கர்ப்பிணி தனது கர்ப்ப காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பாதிப்பு 7 மடங்காக அதிகரிக்குமாம் . 4 முதல் 6 மாதம் வரையிலான கர்ப்பக் காலத்தில்தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமாம் . அதாவது இந்த காலக்கட்டத்தில் ஒரு வலி நிவாரண மாத்திரையை சாப்பிட்டால், அது 2 மாத்திரை சாப்பிட்டதற்கான பின்விளைவுகளை ஏற்படுத்துமாம் .
அதிலும் பாரசிட்டமால் மருந்து 2 மடங்கும், புருபென், ஆஸ்பிரின் போன்றவை 4 மடங்கும், பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வுத்தகவல் மேலும் எச்சரிக்கிறது . இதனால்தான் பெரும்பாலான டாக்டர்கள், கர்ப்பிணிகள் யாரும் வலி நிவாரண மாத்திரை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் .
--- தினமலர் .. நவம்பர் 11 .2010 .

Friday, December 9, 2011

என்ன சத்தம் இந்த நேரம் ?

இரவுகளில் காடு எப்படி இருக்கும் ?
பூமியின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதமே காடுகள் இருக்கின்றன . இந்த ஆறு சதவிகித இடத்தில்தான் உலகின் பெரும்பாலான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன . இவை நள்ளிரவில் ' குட் நைட் ' சொல்லிப் படுத்துவிடும் என்று நினைத்தால், அது தவறு . பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் பேசிக்கொள்ளும் . பேசுவது என்றால் பக்கத்தில் இருக்கும் விலங்கிடம் ரகசியம் பேசுவது அல்ல . இருட்டில் இணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது . அதனால், ' செல்லம் எங்கேடா இருக்க ? ' என்ற கேள்வியை இரவு முழுக்க ஒலிபரப்பிக்கொண்டே இருக்கும் .
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒலி ஐந்து கி.மீ. தூரத்துக்கு கேட்கும் .
காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வௌவால்களின் தொண்டையே பரிணாம வளர்ச்சியால் மார்புவரை நீண்டுவிட்டது . அந்தளவுக்கு அந்த வௌவால்கள் பரம்பரை சவுண்ட் பார்ட்டிகளாக உள்ளன .
சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றின் இணைகள் தொலைதூரத்தில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க அவைகள் காடே அதிர்கிற மாதிரி கர்ஜிக்கும் . சிங்கம் கூப்பிட, பெண் சிங்கம் பதில் சொல்ல... நடுவில் எங்காவது நீங்கள் இருந்தால் குலை நடுங்கிவிடும்.
ஆப்பிரிக்க யானைகள் எழுப்பும் ஒலி, அடர்ந்த காடுகளைக் கிழித்துக்கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும் . தன் இனை நடந்து வருகிற அதிர்வைவைத்து, எவ்வளவு தூரத்தில் இணை உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள் .
சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியைத் தட்டி காதலிகளுக்கு மெசேஜ் அனுப்பும் .
ஒரே நேரத்தில் இப்படி ஓராயிரம் ஒலிபரப்புகள் நடக்கும்போது, அமைதியான உயிரினங்கள் எப்படி தகவல் அனுப்பமுடியும் ? ஒரு சில விலங்குகள் தங்கள் உடலின் வாசனையையே தூது அனுப்பும் . புனுகுப் பூனை, கஸ்தூரி மான் துவங்கி பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்துத்தான் வம்சத்தை வளர்க்கின்றன . சிப்பாய் எறும்புகள் என்று சொல்லப்படும் கண் பார்வை இல்லாத எறும்புகள் நூல் பிடித்த மாதிரி ஒன்றையொன்று பின்பற்றி, வரிசையாகச் செல்லும் . வழிநடத்துவது வாசனைதான் . இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கியப் பங்கு தவளைகளுக்கு உண்டு . தவளைகளின் குரலைவைத்தே அந்தத் தவளையின் வயது, அளவு எல்லாவற்றையும் இணை தவளைகள் கண்டுபிடித்துவிடும் . பிடித்திருந்தால் விரும்பிப்போகும் . இல்லையென்றால் விலகிப்போகும் !
--- பி.ஆரோக்கியவேல் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

Thursday, December 8, 2011

தமாஷ் !

தமாஷ் !
* ' ரவுடிக்கு வீடு வாடகைக்கு விட்டது ரொம்பத் தப்பாப்போச்சு ! '
' ஏன், என்னாச்சு ? '
' வாடகை கேட்டேன், ' காலி ' பண்ணிடுவேன்னு மிரட்டறான் ! '

சதவீத சவால் !

' 110 ' - ஐ இரண்டு பகுதியாகப் பிரிக்க வேண்டும் . அதில் ஒரு எண்ணை விட அடுத்த எண் 150 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் ... எப்படி பிரிப்பது ? யோசித்து விடை
கண்டுபிடிங்க .
விடை : 44, 66 என்று பிரிக்க வேண்டும் . 66 என்பது 44 ஐ விட 150 சதவீதம் அதிகமான எண் !
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

Wednesday, December 7, 2011

இருட்டிலும் பார்க்க முடியும் !

நமது கருவிழியில் ' ப்யூபில் ' என்ற சிறு துவாரம் உள்ளது . வெளிப்புற வெளிச்சத்துக்கு ஏற்றபடி இந்த துவாரம் பெரிதாகவோ, சிறியதாகவோ மாறும் . அதிக வெளிச்சம் இருந்தால், இந்த துவாரம் மிகமிகச் சிறிய அளவில் சுருங்கிவிடும் . இதனால்தான், அதிக வெளிச்சத்தில் நமக்கு கண் 'கூசும் '.
மங்கல் ஒளி, இருட்டு போன்ற குறைவான வெளிச்சத்தின் போது, இந்த துவாரம் பெரிதாக விரியும் . சாதாரண வேளையில் ப்யூபில் துவாரம் இருக்கும் அளவைவிட, இருட்டு வேளையில் அதன் அளவு 16 மடங்கு பெரிதாக மாறும் . இப்படி விரிவடைந்த துவாரத்தின் வழியாக சில காட்சிகள் கண்ணுக்குள் நுழையும் . இதனால்தான் இருட்டிலும் நம்மால் கொஞ்சம் பார்க்க முடிகிறது .
இருட்டிலும் அதிக வெளிச்சத்திலும் கண்விழித்துப் பார்ப்பது பார்வையைப் பாதிக்கும் . எனவே இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டும் .
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

Tuesday, December 6, 2011

தெரியுமா ? தெரியுமே !

* 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ஆண்டு ஒன்றுக்கு 5.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . 10 லட்ச ரூபாய் மதிப்புக்கூணவைத் தருகிறது . உலகில் மிக அதிகக் காலம் வாழக்கூடிய உயிரினம் மரம்தான் . ஸ்வீடனில் இருக்கும் ஊசியிலை மரத்தின் வயது 9,550 ஆண்டுகளுக்கும் அதிகம் .
* ஜப்பானில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்த கம்பள யானையின் ( Woolly Mammoth ) மரபணுவைச் சேகரித்து, அதை உயிரோடு உள்ள ஆப்பிரிக்க யானைக்குச் செலுத்தி மீண்டும் கம்பள ஆனையை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன !
* கிரேக்கத்தில் உள்ள லெஸ்வாஸ் தீவில் உள்ள கல் காடு தான் உலகின் மிகப் பெரிய கல் காடு, கிட்டத்தட்ட 150 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள காட்டுப் பகுதி இங்கு கல் காடாக மாறியிருக்கிறது .
* மின்னல், எரிமலை, பாறைச் சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத் தீ உருவாக முக்கிய காரணங்களாம் .
* காட்டுத் தீ அருகில் பரவும் முன்னே அந்தப் பகுதியின் காற்று 800 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாகிவிடும் .
* காட்டுத் தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றாலும் புல்வெளிகளில் 22 கி.மீ. வரை சீறும் .
* காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, அது பரவும் திசைக்கு எதிர்த் திசையில் தீ வைப்பதுதான் தீர்வு .
* 2030 -ம் ஆண்டுக்குள் அமேசான் காடுகளில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் காட்டுத் தீயினால் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறதாம் .
* ஜப்பானில் குப்பைகளுக்குப் பஞ்சமே இல்லை . மொத்தக் குப்பைகளையும் கடலில் கொட்டி செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதில் மண்னைக்கொட்டி மரம் வளர்ப்பது என்பதுதான் திட்டம் . இதனால், குப்பைகளும் காலியாகும்; சுற்றுச்சூழலும் பாதிக்கபடாது . காடும் வளர்க்கலாம்; கார்பனையும் கட்டுப்படுத்தலாம் .
* காடுகள் நோய் தீர்க்கும் ஓர் அற்புத மருத்துவன் . இப்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளை அளித்தது எல்லாமே தாவரங்கள்தான்
* காடுகள்தான் நீரின் ஆதாரம் . ஆனால், ஆச்சர்யமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன . இரண்டு வகை நீர்க் காடுகள் இருக்கின்றன . முதல் வகை அலையாத்தி காடுகள்
இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகில் மட்டுமே வளரும் . இரண்டாவது வகை கெல்ப் காடுகள் . கடலுக்கு அடியில் வளர்ந்திருக்கும் பூஞ்சை வகைச் செடிகள் இவை .
* உலகின் மிகப் பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் ( 26 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு ) இருக்கிறது . இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் காடு ..
--- காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 ..

Monday, December 5, 2011

இசையும் வழிபாடும் !

உற்சவங்களில் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இசையைத்தான் வாசிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன ....
* உதய காலம் : பூபாளம், பவுளி, கோபிகா வசந்தம் .
* காலை நேரம் : பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
* நடுப்பகல் : ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோஹனம் .
* சந்தியா காலம் : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, பூர்விக கல்யாணி .
* இரவு : காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி .
* தீபாராதனை வேளை : மிஸ்ர மல்லாரி, தேவாரம், திருப்புகழ், அஷ்டபதி, திருப்பாவை .
* யாகசாலை வரை : மல்லாரி .
* யாகசாலை முதல் கோபுர வாசல் வரை : திரிபுடை மல்லாரி .
* கோவிலுக்குள் : துரிதகால திரிபுடை மல்லாரி .
* நிவேதன வேளை : தாளிகை மல்லாரி .
* கும்பம் எழுந்தருளல் செய்யும் போது : தீர்த்த மல்லாரி .
* ஸ்வாமி வீதியுலா வேளை : ராகம், தானம், பல்லவியுடன் கீர்த்தனைகள் .
* பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை : ஆனந்த பைரவி, கேதாரகௌளை .
* பள்ளியறைக்கு சேர்த்தபின் : நீலாம்பரி .
---- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Sunday, December 4, 2011

ஆலய வாத்தியங்கள் ..

ஆலய வாத்தியங்கள் பஞ்சபூத அடிப்படையில் ஆனவைதான் :
1 . ப்ருதிவி ( நிலம் ) வாத்யம் : மரத்தினால் செய்யப்பட்டவை .
2 . அப்பு ( நீர் ) வாத்யம் : உலோகத்தினால் செய்யப்பட்டவை .
3 . வாயு வாத்யம் : துளை உள்ள வாத்யங்கள் .
4 . ஆகாய வாத்யம் : சங்கநாதம், தாள வாத்யம் .
5 . அக்னி வாத்யம் : நரம்பு வாத்யங்கள் .
--- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Saturday, December 3, 2011

அமேசான் காடுகள் .

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . அடர்த்தியானதும் இவைதான் . அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் . நதியைச் சூழ்ந்திருக்கும் காடு, சந்தேகமே இல்லாமல் ராஜாதானே ?
பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு, 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவுகொண்டது . பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது . உலகப் பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கின்றன . உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,500 வகைப் பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன .
அமேசான் காடுகளை நான்கு தளங்களாகப் பிரிக்கலாம் . மேல் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்தத்தளத்தில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது தளத்தில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன . தரைப் பகுதி பயங்கர காட்டு விலங்குகளுக்கானது . ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).
இந்தக் காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள் . அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு, பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6.712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும் !
--- பா.முருகானந்தம், தீபக், அ.ஆதித்தியன் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

Friday, December 2, 2011

மன உளைச்சலா...

மன உளைச்சலா முக மசாஜ் போதும் !
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ நிபுணர்கள், மன உளைச்சல் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர் . மன உளைச்சலுக்கு மாத்திரை போடாமல் தீர்வு காணும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு " பேசியல் ரெப்ளக்சாலஜி " என்று பெயர் சூட்டி உள்ளனர் . இது வேறு ஒன்றும் இல்லை . முகத்தில் லேசாக மசாஜ் செய்வதுதான் .
மன உளைச்சலுக்கு ஆளானவர்களின் முகத்தில் கன்னம், தாடை, நெற்றியில் பட்டுத்துணியால் ஒற்றி எடுப்பது போல மெதுவாக குத்தியும் அழுத்தி தடவியும் மசாஜ் செய்வதுதான் பேசியல் ரெப்ளக்சாலஜி .
சீனாவின் அக்குபஞ்சர் முறையை பின்பற்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது . உடலின் அத்தனை உறுப்புகளின் நரம்புகளும் முகம் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன . எனவே இந்த நரம்புகளை தூண்டும் வகையில் இதமாக மசாஜ் செய்தால், மன உளைச்சல் போயே போய்விடும் . அழுத்தம் குறைந்து மனசு லேசாகிவிடும் . தூக்கம் கெட்டு அவதிப்படுபவர்கள் நன்றாக தூங்கமுடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .
--- தினமலர் 10 . 11 . 10 .

Thursday, December 1, 2011

ஒபாமா .

' We Can ' என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப்பிடித்தவர் பராக் உசேன் ஒபாமா ! மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர் . பூ மழை தூவி வசந்தங்கள் வாழத்த பதவிக்கு வந்தவர் . அதன் பிறகு எதிர்கொண்டது அனைத்தும் கண்டனங்களும் ஆவேசக் கோபதாபங்களும்தான் !
* அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961 - ம் ஆண்டு ஆகஸ்ட் 4 - ம் தேதி பிறந்தார் . கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் ' பராக் ' என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று பொருள் !
* ஒபாமாவின் அப்பா ஒபாமா சீனியர் ஆண்டன் ஹாமை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்தின்போதே ஒபாமா மூன்று மாதக் குழந்தையாக ஆன் வயிற்றில் இருந்தார் !
* ஒபாமா, அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான் . ஆனால், தந்தை மற்றும் தாயின் மறுமணங்களால் இவருக்கு எட்டு சகோதர, சகோதரிகள் உண்டு !
* இடது கைப் பழக்கம்கொண்ட ஒபாமா, தினமும் உடற்பயிற்சி செய்வார் . கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும்தான் உடற்பயிற்சிக்கு ஓய்வு !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் ' சிறந்த பேராசிரியர் ' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் . மலியா, சஷா என்று இரண்டு குழந்தைகள் !
* மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், சீசர் சாவேஸ் ( விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய மெக்சிக்கோ அமெரிக்கன் ) ஆகிய மூவரும்தான் தன் ரோல்மாடல் ஹீரோக்கள் என்று குறிப்பிடுவார் .
* " இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை . இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான் ! " என்று தாய்நாட்டை உயர்த்திப் பிடிக்கும் பேச்சுக்களால் கைதட்டல்களை அள்ளி வாக்குகளைக் கவர்ந்தவர் ஒபாமா !
* ' அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி ' என்று செய்தி வெளியானவுடன், இன்ப அதிர்ச்சி தாங்க முடியாத லட்சக்கணக்கான ஆஃப்ரோ -- அமெரிக்கர்கள் வீதிகளில் வாய்விட்டு அழுத காட்சிகள் அப்போது டி.ஆர்.பி ஹிட் சென்சேஷன் !
* ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனில் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள் . கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனை !
* 2009 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது . " அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி . பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிகப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது ! " என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான ' தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ' பத்திரிகை !
* உலகமே எதிர்பார்த்தபடி அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமாவால் அற்புதங்களை நிகழ்த்த்த முடியவில்லை . ' அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலையும், யதார்த்த சூழ் நிலையும் ஒபாமாவின் கனவுகளை இப்போதைக்குச் சாத்தியப்படுத்தாது ! ' என்கிறார்கள் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் !
---சார்லஸ் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

Wednesday, November 30, 2011

ஓவர் ஈட்டிங்

சமீபத்தில் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று, 97 சதவிகித பெண்கள் மற்றும் 68 சதவிகித ஆண்கள் உணவுப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது . அதில் கூறப்பட்டிருக்கும் ஒரு முக்கியச் செய்தி, உடற்பயிற்சி செய்வது அதீத உணவுப் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தவிர்க்கும் என்கிறது !
* இனிப்புகளை அதிகம் விரும்புவராக இருந்தால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறபோது 15 நிமிடங்கள் வெளியே காலார நடமாடுங்கள், அது உங்கள் எண்ணத்தை மாற்றும் !
* ஐஸ்க்ரீம், ரோட்டோர பானி பூரி வகையறாக்கள் உண்ணும் எண்ணங்களைத் தவிர்க்க ... குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு ஆகியவற்றை முயற்சித்துப் பார்க்கலாம் !
* படிக்கும்போது ' டிடிங்...டிடிங் ' என்று குறுஞ்செய்திகள் வந்தால், கவனம் சிதறத்தான் செய்யும் . அப்போது மெசேஜ் டோனை சைலன்ட் மோட் - ல் வைக்கவும் !
--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

Tuesday, November 29, 2011

மடியில் கனமிருந்தால்...

லேப்டாப், கம்ப்யூட்டரால் ஆண்கள் மலடாவதாக தகவல் வந்திருக்கிறது .
மடிக்கணினி என்கிறார்கள் தமிழில் . கால்களை ஒட்டி வைத்து லேப்டாப்பை இயக்கும்போது விரைகள் சூடாகி விந்து உற்பத்தி குறைகிறது என கண்டறிந்துள்ளனர் அவை உடலுக்கு வெளியே அமைந்திருப்பதே கூலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் . உடல் உஷ்ணத்தின் ஏற்ற இறக்கம் அவற்றை பாதிக்காமல் இருந்தால் உயிரணு உற்பத்தி சீராக நடக்கும் .
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை ஒன்றும் ஆகாது . அதற்கு மேல் சூடானால் பிரச்னை . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடுகிறது . பொதுவாக நமது ஊர் அதிகபட்ச வெப்பம் 30+ செல்சியஸ் . லேப்டாப் இயக்கினால் ஒரு மணி நேரத்தில் விரைப்பகுதியின் வெப்பம் இரண்டரை டிகிரி செல்சியஸ் ஆகிறதாம் . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடும் . மடியில் ஒரு பலகை வைத்து இயக்குபவர்கள் உண்டு . சற்று பெரிதாக இருந்தால் கால்களை விரித்து அமரலாம் . ஆனால், இதெல்லாம் பாதிப்பை தடுக்க முடியாது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது . பலகை இருந்தால் தொடையில் சூடு தெரியாது . அவ்வளவுதான் .
'1980களில் ஒரு மில்லி லிட்டர் விந்தில் 7 கோடி உயிரணுக்கள் இருந்தால் அவர் ஆரோக்கியமான ஆண் என்கிறார்கள் . இன்று 2 கோடி இருந்தால் நார்மல் என்கின்றனர் இன்னும் 30 ஆண்டுகள் போனால் ஒரு லிட்டரில் 100 அணுக்கள் இருப்பதே நார்மலாகிவிடும் போலிருக்கிறது ' என்கிறார் ஒரு டாக்டர் .
என்னதான் தீர்வு ? லேப்டாப்பை டெஸ்க்டாப்பாக பயன்படுத்துவதுதான் .
--- தினகரன் தலையங்கம் , நவம்பர் 7 , 2010 . ஞாயிற்றுக்கிழமை

Monday, November 28, 2011

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை !

தெரிந்து கொள்ள வேண்டிய துளிகள் .
* மூளைக்கு ரத்தம் செல்வது 2 நிமிடம் தடைபட்டால் மூளை செயலிழந்துவிடும் . மூளை செயலிழந்து விட்டால் மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை . இது போன்று மூளை செயலிழந்துவிட்ட நோயாளிகளிடம் இருந்து உறுப்புகளை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்துவதே உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சையாகும் .
* இதயம், இதய வால்வு, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கண்கள், கருவிழி, தோல், எலும்பு ஆகிய உறுப்புகள் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படுகின்றன .
* குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் உறுப்பு தானம் செய்யலாம் . 18 வயதுக்குள் இருப்பவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதல் பெறவேண்டும் .
* உடல் உறுப்புகளை விலைக்கு விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தின்படி 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் .
* இந்திய அரசு 1994 ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தை கொண்டு வந்தது .
--- தினமலர் , 7 . 11 . 2010

Sunday, November 27, 2011

நம்பிக்கைதான் !

நம்பிக்கைதான் -- மனிதனை நகர்த்துகிறது !
ஒவ்வொரு முறை செஞ்சுரி அடிக்கும்போதும் --
பெவிலியனுக்கு பேட் ; விசும்பிற்கு விழி; என உயர்த்திக் காட்டி நன்றி உரைப்பது, சர்ச்சிலின் சம்பிரதாயம் !
' அ ' னாவில்தான் -- படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது, அமரர் திரு. ஏவி. எம். அவர்கள் காத்து நின்ற மரபு !
அஞ்சாம் ரீல்தான், ரீ - ரிக்கார்டிங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது -- மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.வி அவர்களின் சென்டிமென்ட் !
பாடல்களின் மேல் -- ஸ்வரங்களைப் பென்சிலால்தான் குறித்துக்கொள்வார் -- வெண்கலக் குரல் வேந்து, திரு. டி.எம்.எஸ் அவர்கள் . பென்சில் சீவ ப்ளேடும் எடுத்து வருவார் !
தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத் தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பதில், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் . படங்களின் பெயர்களும் கூடிய வரையில் ஏழெழுத்தில் வருவதை விரும்புவார் . உதாரணம் -- ' நாடோடி மன்னன் '; ' அரச கட்டளை '; ' உரிமைக் குரல் '; இத்யாதி இத்யாதி !
' ம '; ' மா '; ' மு '; என்று மகர வரிசையில் நான் அவரோடு எழுதும் பாடல்கள் தொடங்கப்பெற்றால், அவை பெரிதும் ஹிட் ஆகின்றன என்பது திரு.ஏ.ஆர். ரஹ்மானின் கணிப்பு ; உதாரணங்கள் :
' மரியா ! மரியா ! '
' மாயா மச்சீந்தரா ! '
' முக்காபுலா ! '
நம்பிக்கைதான் -- மனிதனை
நகர்த்துகிறது !
--- நினைவு நாடாக்கள் ஒரு rewind , தொடரில் வாலி . ஆனந்த விகடன் .10 . 11 . 10 .

நீதி இருக்கிறது !

" ' தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா' ? "
" பல சமயங்களில் அது உண்மை . சில சமயங்களில் தாமதிக்கப்பட்டாலும், நீதி நியாயமாகவே அமைவதும் உண்டு . 1970 -ம் ஆண்டு ஆந்திராவில் போலீஸால் கொல்லப்பட்டவர் வர்கீஸ் என்ற நக்சலைட் . வர்கீஸைக் கொல்வது என்று போலீஸ் முடிவெடுத்தது . நடுக்காட்டில் வைத்து, ' யார் வர்கீஸைக் கொல்லப்போகிறீர்கள் ? ' என்று கேட்கப்பட்டது . அப்போது, அங்கே இருந்த ராமச்சந்திரன் நாயர் என்ற கான்ஸ்டபிள் மட்டும் கையை உயர்த்தவில்லை . ' சரி, வர்கீஸைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் . நாளை செய்தித்தாளில் இப்படி செய்தி வர வேண்டும் . ' போலீஸ் -- தீவிரவாதி மோதல் . வர்கீஸ் சுட்டுக் கொலை . மோதலில் ஒரு போலீஸும் மரணமடைந்தார் .' இதைக் கேட்டு பதறிப்போன ராமச்சந்திரன் நாயரும் எங்கவுன் டருக்கு உடன்பட்டார் . பிறகு, தனது மனசாட்சி உறுத்த, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ராமச்சந்திரன் நாயர் எழுதிப் புகழ்பெற்ற புத்தகம், ' நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி '. இப்போது அந்த வழக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது . நடைபெற்றது போலி மோத்ல் என்றும், வர்கீஸின் மரணம் ஒரு கொலை என்றும் தீர்ப்பு அளித்துள்ள சி. பி. ஐ நீதிமன்றம் . என்கவுன்டருக்கு உததரவிட்ட போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது . இப்போது வர்கீஸும் இல்லை . ராமச்சந்திரன் நாயரும் இல்லை . ஆனால், நீதி இருக்கிறது .
வி.கி.சுந்தர், திருப்பூர். நானே கேள்வி... நானே பதில் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

Saturday, November 26, 2011

' டை ' அடிக்கப் போறீங்களா ?

டை ( dye ) பாக்கெட்டுகளில் மருதாணியும், நெல்லிக்காயும், ஆலோவீரா படமும் போட்டிருந்தாலும், அதில் சேர்த்திருக்கும் ரசாயனத்தின் பெயர்களைமட்டும் பொடி எழுத்தில் போட்டிருப்பார்கள் . அதைப் படித்துப் பார்த்து முடிந்தவரை அதிகம் ரசாயனம் கலக்காத, சிறிது நேச்சுரலான ஹேர் டை மட்டும் வாங்கவும் .
முதன் முதலில் உபடோகிக்கும்பொது அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டபடி உபயோகித்துப் பார்க்கவும் . அலர்ஜி எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டு பூசவும் .
நன்கு ஷாம்பூ போட்டு அலசி, வாரிய முடியில் மற்றொருவரின் உதவியோடு டை போட்டு நன்கு காயவைத்து சீப்பால் வாரி பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரம் மட்டும் ஊறிக் குளிக்க வேண்டும் . டை போட்டு இரவு முழுவதும் ஊறி மறுநாள் .குளிக்கக் கூடாது . அந்த ரசாயனம் மண்டையில் இறங்கி இரத்தத்தில் கலந்து ஆபத்தாகி விடக்கூடும் .
அதே போல் குளிக்கும்போது கண்டிப்பாக உச்சந்தலையில் நீர் ஊற்றக் கூடாது . அப்படிச் செய்தால் விரைவிலேயே கண்கள் பாதிப்படையும், தலைமுடியை முன்பக்கமாகப் போட்டு தலைகுனிந்தபடியே தலைமுடியை அலச வேண்டும் .
குளித்தவுடன் இறுதியில் டீ டிக்காஷன், எலுமிச்சைச் சாறு கலந்து டை போட்ட கூந்தலில் ஊற்றி, நன்கு பரவலாகத் தேய்த்து நீ ஊற்றி அலசவும் . கூந்தல் வறண்டு போகாமல் பளபளவென நன்கு சீவ வரும் . டை போடும் நாளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் . அப்போதுதான் டையில் இருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும் .
அதே போல அடிக்கடி ' டை ' போடக் கூடாது . ' டை ' போடப் போட கூந்தல் இன்னும் அதிகமாக நரைக்க ஆரம்பித்து விடும் . விதிகளை எச்சரிக்கையுடன் பின்பற்றி, கூந்தலைப் பாராமரிக்கவும் .
--- கலைவாணி, இராசிபுரம் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

Friday, November 25, 2011

இதய கோளாறை காணும் கருவி !

தமிழக விஞ்ஞானி அறிமுகம் .
இதய கோளாறை சில நொடிகளில் துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி .
சென்னையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி அரவிந்த் தியாகராஜன் கண்டுபிடித்தார் . அது பற்றி அவர் கூறியதாவது :
பண்டைய காலங்களில் ஒலி மூலமாக உடலில் ஏற்படும் கோளாறுகளை கண்டுபிடித்து வந்தனர் . அந்த முறையில்தான் டாக்டர்கள் தற்போது உபயோகிக்கும் ஸ்டெதஸ்கோப் கருவியும் உருவாகியது . இதேபோன்று இதயத்தில் ஏற்படும் ஒலியை டிஜிட்டல் ஒலியாக மாற்றிக் காட்டும் புதிய வகை ஸ்டெதஸ்கோப் கருவியை ( போனோடாக் ) கண்டுபிடித்துள்ளேன் . இந்த கருவி மூலம் ஒருவரது இதயத்தில் இருக்கும் வால்வு கோளாறுகளை ஒரு சில நொடிகளில் கண்டுபிடிக்கமுடியும் . சாதாரணமாக லப்டப் என்று சத்தம் கேட்டால் இதயத்தில் எந்த கோளாறும் இல்லை என்று அர்த்தம் . இதயத்தின் வால்வு பகுதியில் அடைப்பு மற்றும் ஓட்டை இருந்தால், புதிய கருவியில் இருந்து வரும் டிஜிட்டல் ஒலி மூலம் எளிதாக கண்டுபிடித்து, அவருக்கு இதய கோளாறு இருப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்ய முடியும் .
தற்போது இதயகோளாறுகளை எக்கோ கார்டியோ கிராம் மூலம் கண்டுபிடிக்கமுடியும் . இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகும் . மேலும், இந்த வசதி நகரத்தில் மட்டுமே உள்ளது .டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் கிராமப்புறங்களிலும் பயன்படுத்த முடியும் என்றார் அரவிந்த் தியாகராஜன் .
--- தினகரன் , 3 நவம்பர் .2010 .

Thursday, November 24, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* மாடர்ன் கிச்சன் வைத்திருப்பவர்கள், சிம்னியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் . இல்லாவிடில் சிம்னியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு எளிதில் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு .
* தலைவலி அதிகமாக இருக்கும்போது, ஒரு பென்சிலை எடுத்து மேல்வரிசை பற்களுக்கும், கீழ் வரிசை பற்களுக்கும் இடையில் வைத்து பிடித்துக் கொண்டால், தலைவலி குறையும் , பென்சிலை அழுத்த வேண்டாம் .
* பச்சையாக இருக்கும் ஒருவகைப் பூச்சி நம்மீது பட்டாலோ, நம்மையும் அறியாமல் தொட்டாலோ அருவருக்கத்தக்க ஒரு நாற்றம் அடிக்கும் . அதைப் போக்க சிறிது விபூதியை எடுத்து தடவிக் கொண்டால் போதும் . நாற்றம் மறைந்து விடும் .
* மாவடு செய்தால், சில நாட்களிலேயே பூஞ்சை பிடித்து விடுகிறது . வடுமாங்காய் தயாரித்து ஒரு வாரம் கடந்தபின், அந்த நீரை வடிகட்டி கல் சட்டியில் விட்டு, சுண்டக் காய்ச்சி மீண்டும் ஜாடியில் ஊற்றி, வடுமாங்காய்களைப் போட்டு வைத்தால் பூஞ்சை பிடிக்காது .
* சின்ன வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு நறுக்கினால் கண்ணில் எரிச்சல் வராது .
* குளிர்க்காலத்தில் ஸ்வெட்டர்களைக் கையால் துவைக்கும்போது, ஷாம்பு போட்ட நீரில் ஊறவைத்துத் துவைத்தால் பளிச்சென்று இருப்பதுடன், கரையில்லாமல் வாசனையாகவும் இருக்கும் .
* ஃப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா ? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ஃப்ளாஸ்கில் ஊற்றி, அரைமணி நேரம் ஊறவிடவும் . பிறகு வேறு நீரால் கழுவினால் ஃப்ளாஸ்க் சுத்தமாகி பளிச்சென இருக்கும் .
* இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா ? தலையனை, மெத்தை எதுவும் இல்லாமல் உடம்பைத் தளர்வாக வைத்துக் கொண்டு தரையில் 20 நிமிடம் படுத்திருங்கள் . இதனால் இடுப்பு வலியும் வராது , கூன் முதுகும் விழாது .
* இரவில் தூக்கமில்லையா ? ஒரு வாழைப்பழத்தை உரித்து, ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தை தொட்டுக் கொண்டு இரவு சாப்பிட்டு வர ஆனந்தமான தூக்கம் வரும் .
* மிக்ஸி ஜார்களை அரைத்தவுடன் அதிக நேரம் சிங்கில் போடக் கூடாது . அரைத்ததும் ஜார்களை உடனே அலசி தனித்தனியே கவிழத்து வைத்து உலரவிட வேண்டும் . அப்படிச் செய்தால் நீண்ட நாள் உழைக்கும் .
* தேனை, மண், பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது
* இருமல் பாடாய்படுத்துகிறதா ? இலுப்பக் கரண்டியில் நெய்விட்டு உருகியவுடன் சில மிளகுகளைப் பொடி செய்து அதில் பொரித்துச் சாப்பிட்டால் இருமல் போய்விடும் .
--- மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

Tuesday, November 22, 2011

கேட்டதில் பிடித்தது !


இளைஞன் ஒருவன் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குப் போய் எண்ணெய் வாங்கினான் . வியாபாரி, வீட்டின் பின்புறம் ' செக் 'கில் எண்ணெய் ஆட்டிக்கொண்டு இருந்தார் . எண்ணெயை அளந்து விட்டுக்கொண்டே , மாட்டை ஓட்டுவது போல வாயினால் சப்தம் செய்தார் . சுற்றும் முற்றும் பார்த்த இளைஞன், " ஐயா ! மாடு எதுவும் இங்கு வரலையே, ஏன் மாட்டை விரட்டுவது போல ஒலி எழுப்புறீங்க ? " என்று வியந்து கேட்டான் .
அதற்கு அந்த வியாபாரி, " வீட்டின் பின்புறம் 'செக்கு ' ஓடிக் கொண்டிருக்கிறது . அதில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் சுற்றி வந்தால்தான் செக்கில் உள்ள பொருள் அரைபட்டு எண்ணெயாக வெளியே வரும் . மாட்டின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருக்கும் . அதனால், மாடு சுற்றி வந்தால் மணி ஓசை கேட்கும் . மாடு சுற்றாமல் நின்று விட்டதால் ஓசை கேட்கவில்லை . அதான் மாட்டை விரட்ட ஒலி எழுப்பினேன் " என்றார் .
இதைக் கேட்ட இளைஞன், " ஐயா, மாடு ஒருவேளை நின்ற இடத்திலிருந்தே கழுத்தை மட்டும் ஆட்டி ஓசை எழுப்பினால் நீங்கள் மாடு சுற்றுவதாகத்தானே நினைத்துக் கொள்வீர்கள் " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் .
அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த வியாபாரி, " நீ சொல்வது சரிதான் ... ஆனால், மாடு உங்களைப் போல பி. எ,.. எம்.எ . எல்லாம் படித்ததில்லை . அதற்கு ஏமாற்றத் தெரியாது " என்றார் .
--- சுகிசிவம் உரையிலிருந்து , கேட்டவர் : சங்கரி வெங்கட் , பெருங்களத்தூர் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Monday, November 21, 2011

ராஜராஜன் காலத்தில்...


* ராஜராஜ சோழனின் ராஜகுருவாக விளங்கியவர் ஈசான சிவ பண்டிதர் .
* தஞ்சைப் பெரிய கோயிலின் தலைமை அர்ச்சகராகத் திகழ்ந்தவர் பவணபிடாரன் .
* தஞ்சைக் கோயிலில் இன்றும் நாம் காணும் கல்வெட்டுகளை வெட்டியவர் பாளூர் கிழவன் .
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி, வீர சோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன் . அவரது உதவியாளர்கள் : மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் .
* ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் .
* மற்ற மன்னர்கள்போல் தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதித்து பெருமை கொண்டாடாமல், தனக்கு உதவிய அத்தனை பேரின் பெயரையும் பொறித்தது தமிழ்மன்னன் ராஜராஜனின் பெருந்தன்மை .
--' மாண்புமிகு மகான்கள் ' தொடரில், ப்ரியா கல்யாணராமன் . குமுதம் 3 . 11 . 10 ..

Sunday, November 20, 2011

வெனிஸ் நகரம்.


வெனிஸ் நகரம் ரொம்ப பழமையான நகரம் . வண்ண வண்னமான வீடுக்ள் . மிக அழகான பாரம்பரியம் மிக்க தேவாலயங்கள் என பிரமாதமான நகரம் .
அங்கே வீட்டு வாசலில் கார்கள் நிற்பதற்குப் பதில் படகுகள் நிற்கின்றன . ஏனென்றால் நகரம் முழுக்க நதியும் நீரோடைகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன . பக்கத்துத் தெருவுக்குப் போவதென்றால்கூட ஓடத்தில்தான் போகிறார்கள் . அந்தப் படகை ' கண்டோலா ' என்று அழைக்கிறார்கள் . வீடுகளுக்கெல்லாம் வினோதமாக வித வித வண்னங்களைப் பூசுகிறார்கள் . அதனால், நகரமே வண்ணமயமாக இருக்கிறது . ஆனால், பிரமாண்ட கட்டடங்கள் அந்த நகரில் கிடையாது . நவீனமான கட்டடங்களைக் கட்டினால் அந்த நகரத்தின் பழைமையான தோற்றம் போய்விடும் என்று கட்டுவதில்லையாம் . பழைமையை மிகுந்த சிரத்தையோடு பராமரிக்கிறார்கள் பழைமையான கட்டடங்களை புதுப்பிக்கும் போது அந்த கட்டடத்தின் பழைமை மாறாமல் பார்த்துக் கொள்கிறார்கள் .
முடிவா, வெனிஸ்ல எங்கேயும் பப்ளிக் டாய்லெட் கிடையாது . ஒரு அவசரம்னா பக்கத்துல இருக்குற ஏதாவது ஓட்டல் இல்லைனா கடைக்குத்தான் ஓடனும் . அங்கேயும் சும்மா போக முடியாது . ஏதாவது வாங்கினாதான் அனுமதிப்பாங்க . ஓட்டல்ல சாதாரணமா ஒரு காபி இருநூறு ரூபாய் . ஸோ, ஒரு தடவை பாத்ரூம் போகனும்னா இருநூறு ரூபாய் செலவழிக்கணும் .
இதுக்கெல்லாம் நம்ம ஊருதான் வசதி . ஹிஹி .
--- டால்மென் .' படப்பிடிப்பு பயணம் ' கட்டுரையில் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் .குமுதம் தீபாவளி மலர் , 3 . 11 . 2010 .

Saturday, November 19, 2011

குறைந்த செலவில் காற்றாலை


அதிக மின் உற்பத்தி செய்ய .குறைந்த செலவில் காற்றாலை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையைச் சேர்ந்த காளியாப்பிள்ளை மகன் சத்தியமூர்த்தி ( 42 ) , ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர், ஒரு எளிய முறை காற்றாலையை வடிவமைதுள்ளார் .
ஆண்டு முழுவதும் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், புதிய காற்றாலையை வடிவமைதுள்ளார் . பாய்மரம் போன்ற வடிவமைப்பில் ஆறு இறக்கைகள் இந்த காற்றாலையில் உள்ளது . மரம், கம்பி, காடா துணியைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . காற்றுவீசும் திசைக்கேற்ப காற்றாடியை திருப்பி வைத்துக்கொள்ளும் வகையில் சுழலும் அடிப்பகுதியுடன் இந்தக் காற்றாலையை வடிவமைத்துள்ளார் . குறைவான விசிறிகள், லேசான காற்றுக்கே வேகமாக சுழல்வதால் அதிக மின்சாரம் உற்பத்தி செய்வது என்பதே இவரது கண்டுபிடிப்பின் சிறப்பம்சம் .
இதனால் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறமுடியும் என்று கூறும் சத்தியமூர்த்தி, தற்போது டென்மார்க் நாட்டின் கண்டுபிடிப்பான 90 அடி விட்டமுடைய 3 இறக்கைகள் கொண்ட விசிறியே காற்றாலைகளில் பயன்படுத்தப்படுகிறது . இறக்கைகளின் அடிப்பகுதி அகன்றும் நுனிப்பகுதி குறுகியும் உள்ள இந்த அமைப்பினால் மணிக்கு 11 கிலோவாட் மின்சாரம் கிடைக்கிறது . அப்படியில்லாமல் நான் உருவாகியுள்ளபடி அடிப்பகுதி குறுகலான, நுனிப்பகுதி அகன்ற பாய்மரக் கப்பல் போன்று உள்வாங்கிய வகையில் விசிறிகளை அமைக்க வேண்டும் . அப்போதுதான் குறைந்த காற்று வீசும்பொது கூட வேகமாக சுழன்று அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் .
டென்மார்க் முறைப்படி தமிழ்நாட்டில் செயல்படும் காற்றாலை அமைக்க குறைந்தது ரூ. 10 கோடி செலவாகும் . ஆனால், எனது கண்டுபிடிப்பைப் போல் காற்றாலை அமைக்க ரூ. 2 முதல் 3 கோடி போதுமானது என்று கூறினார் .
--- தினமலர் . 1 நவம்பர் . 2010 .

Friday, November 18, 2011

' பறை ' -- ' தப்பு ' தமிழனின் பெருமை !


குறிஞ்சிப் பறை, நெய்தல் பறை, மருதம் பறை என ஐவகைத் திணைகளுக்கும் ஐந்து வகையான பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் குறிபிடுகிறது . பக்தி இலக்கியத்திலும் பறை ஒலிக்கிறது . வேறு எந்த இசைக் கருவிக்கும் நேராத அநீதி, பறைக்கு நேர்ந்தது . ' பறை ' என்ற சொல் நேரடியாக சாதியைக் குறிப்பதால், அதற்கு ' தப்பு ' என்ற பெயர் மாற்ற வேண்டி வந்தது . மிக உன்னதமாகப் போற்றப்பட்ட ஒரு கலை காலப்போக்கில் இழிவானதாக மாற்றப்பட்டதுதான் காலப்பிழை .
' தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டுன்னு இதில் நிறைய வகைகள் இருக்கு . நாற்பதுக்கும் அதிகமான அடவுகள் இருக்கு . சோழமலை, கண்டம், திசரம்னு தாள முறைகளிலும் பல வகைகள் இருக்கு . தப்புதல்னா அடித்தல்னு அர்த்தம் . அடித்தலும் ஆட்டமும் சேர்ந்து இருகுறதுனாலதான் இதைத் தப்பாட்டம்னு சொல்றோம் . வேற எந்தக் கலைக்கும் இல்லாத சிறப்பு என்னன்னா, இதில் மட்டும்தான் ஒரே நேரத்தில் ஆடிக்கிட்டே இசைக்கணும் . கலைஞனே இசைக் கருவியை உருவாக்குறதும் இதுலதான் .
--- கு. ராமகிருஷ்ணன் , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Thursday, November 17, 2011

எச்சில் துப்பும் பழக்கம் !


ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் ( Digestion ) துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற ' என்ஸைம் ' எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான் !
இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு . பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணிஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக ( தர்மசங்கடமாக ! ) விளக்குகிறார் . ' வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து... இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா ? மாட்டீர்கள் ! வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை ( Renounced its citizenship ! ) ' இழந்துவிடுகிறது .
இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 -ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் ( Spittoons ) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ' மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ' என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ' கலாசாரத்தை' ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ' அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ! ' என்றார் . இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை .
--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Wednesday, November 16, 2011

அதிக சுகத்தைத் தர வல்லவன் !


நீளமான தந்தத்தைக்கொண்ட ஆண் யானையை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண் யானைகள் கூடும் . இதனாலேயே ஆண் யானைகளுக்குள் தந்தத்தின் அளவைவைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது . அதேபோலத்தான் மயில் . மிக நீளமான தோகை கொண்ட ஆண் மயிலோடுதான் பெண் மயில் சேர விரும்பும் . இதனால் ஆண் மயில்களுக்குள் ' யாருக்கு நீண்ட தோகை ' என்பதில் போட்டி . இப்படி உலகின் எல்லா ஜீவராசிகளிலும் பெண்ணைக் கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாக வெளிப்படுத்துவதைப் போலவே, மனித ஆண்களும் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஒரு வீரிய விளம்பரமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள் .
இதனால், மனித ஆண் உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது . இன்றுள்ள வானர இனங்ககளிலேயே மனித ஆணின் உறுப்புதான் மிகவும் நீளமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது . இத்தனைக்கும் மனிதப் பெண்ணின் ஜனனக் குழாய் நீளம் என்னவோ எல்லோருக்கும் 10 செ.மீதான் . இதனுள் சென்றடைய அதே 10 செ.மீ நீளம் உள்ள கருவி இருந்தாலே போதும் . ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும் !
--- உயிர்மொழி தொடரில் டாக்டர் ஷாலினி , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

Tuesday, November 15, 2011

இனிக்கும் கணக்கு .


ஒரு காகிதத்தில் ' 9 ' என்று எழுதி மடித்து உங்கள் நண்பரிடம் கொடுங்கள் . " நான் ஒரு சின்னக் கணக்கு சொல்வேன், நீ என்னிடம் எதுவுமே கூறவேண்டாம் . அந்தக் கணக்கின் விடையை இதில் எழுதியிருக்கிறேன் . கணக்கு செய்து முடித்தபின் திறந்துபார் ! " என்று ' பில்டெப் ' கொடுத்துவிட்டு இப்படி சொல்லுங்கள் :
1 . எத்தனை இலக்க எண் வேண்டுமானாலும் எழுதிக்கொள் .
2 . அந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டு .
3 . இந்தக் கூட்டுத்தொகையை முதலில் எழுதிய எண்ணில் இருந்து கழித்துக் கொள் .
4 . வரும் விடையில் உள்ள இலக்கங்களைக் கூட்டு . விடை இரண்டு இலக்க எண்ணாக வந்தால், அந்த இரு எண்களையும் கூட்டி ஒற்றை இலக்கமாக மாற்று... இனி நான் தந்த
காகிதத்தைப் பிரித்துப் பார் ! அதே விடை இருக்கும் !
காகிதத்தைப் பிரித்துப் பார்க்கும் நண்பர், ' அடடே ! ' என்று அசந்துபோவார் !
ஒரு உதாரணம் :
நண்பர் எழுதிய எண் 123456 . இதன் இலக்கங்களின் கூட்டுத் தொகை 21 .( 1 + 2 + 3 + 4 + 5 + 6 ). இதை 123456 -ல் இருந்து கழித்தால் 123435 . இதன் கூட்டுத்தொகை ( 1 + 2 + 3 + 4 + 3 + 5 )
18 ; இதில் 1 மற்றும் 8 ஐக் கூட்டினால் 9 . எத்தனை இலக்க எண் என்றாலும், எப்போதுமே இதில் 9 -தான் விடையாக வரும் !
-- தினமலர் ,அக்டோபர் 29 , 2010 .

Monday, November 14, 2011

தானே இயங்கும் கார் !


டிரைவர் இன்றி செல், கம்ப்யூட்டரால் இயக்கலாம். நாகை வாலிபர் கண்டுபிடித்து அசத்தினார் .
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த கார்த்திக் ( 20 ) என்பவர் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் செயற்கைக்கோள் மூலம் வீட்டில் இருந்தபடியே இயக்கக்கூடிய குட்டிக் காரை உருவாக்கியுள்ளார் .
கம்ப்யூட்டர், செல்போன் உதவியுடன் இயங்கும் இந்த கார், பேட்டரி மூலம் ஓடக்கூடியது . இரவு நேரங்களில் இந்த காரை ரோட்டில் விட்டுவிட்டு அதில் ஒரு கேமராவை பொருத்திவிட்டால் போலீசார் கண்காணிப்புப் பணிகளை தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் .
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு டிரைவர் இல்லாமலேயே சரக்குகளை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைக்க முடியும் . வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தபடியே அந்த வாகனத்தை இயக்கி எந்த இடத்துக்கும் சென்று, திரும்பி வர வைக்க முடியும் . தனியாக டிரைவர் தேவையில்லை .
மேலும், இந்த வாகனத்தை ராணுவத்திலும் பயன்படுத்த முடியும் . குறிப்பாக தீவிரவாதிகள் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்கலாம் . அதேபோல காடுகளில் அபாயகரமான விலங்குகளை அருகில் சென்று படமெடுக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறார் கார்த்திக் .
---- தினமலர் ,அக்டோபர் 30 , 2010 .

Sunday, November 13, 2011

கறுப்பு மனிதர் !


அவர் பிறந்தது மிக சாதாரணமான குடும்பத்தில் . திருமணமான சில மாதங்களீலேயே பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு போகிறார் . அங்கே விடா முயற்சி , கடின உழைப்பு . கொஞ்சம் பணம் சேர்கிறது . அவர்கள் குடும்பத்தில் யாரும் கார் வாங்கியதில்லை . ' அங்கே அவர் வாங்குகிறார் . தன்னுடன் வசிக்க மனைவியை அந்த நாட்டுக்கு அழைக்கிறார் . அந்த அழைப்புக் கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் . ' உன்னை அழைத்துப் போக ஒரு கார் வாங்கியிருக்கிறேன் . காரின் நிறம் என்ன தெரியுமா ? கறுப்பு, என்னைப் போல '. இந்த கறுப்பு மனிதர் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த திருபாய் அம்பானி !
--- அரசு பதில்கள் , குமுதம் தீபாவளி மலர் . 3 . 11 . 2010 .

Saturday, November 12, 2011

வெப்பம் அளவு . .


20 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவும் 68 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அளவும் சரிசமம் ; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு சமமான பாரன்ஹீட் வெப்ப அளவு எவ்வளவு ?
விடை : மைனஸ் 68 டிகிரி பாரன்ஹீட் என்பது ' அவசர 'த்தில் வரும் தவறு ! மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட் என்பதே சரி ! செல்சியஸ் அளவை பாரன்ஹீட்டாக மாற்ற 1.8 -ஆல் பெருக்கி 32ஐக் கூட்ட வேண்டும் !
3 -- டி படம் !
சாதாரணமான படங்களுக்கும், 3 -டி படங்களுக்கும் உள்ள வித்தியாசம், சாதாரண படங்களை கண்ணாடி போடாமல் பார்க்கலாம் , ஆனால், 3 -டி படங்களை ஸ்பெஷல் கண்னாடி போட்டுகிட்டு பார்க்கவேண்டும் . 3 -டி படத்தைப் பார்க்கறப்போ, காட்சிகள்லாம் நேரில் பார்க்கற மாதிரி இருக்கும் .
அப்படி நேரடியாகப் பார்க்கற காட்சிகளை முப்பரிமாணக் காட்சின்னு சொல்வார்கள் . ஆங்கிலத்தில் ' த்ரீ டைமன்ஷன் ', அதோட சுருக்கம்தான் ' 3 -டி '. இதோட இன்னொரு பெயர் ஸ்டீரியோகிராபி ! முதல் 3 - டி படம் லாஸ் ஏஞ்சலில் உள்ள அம்பாசடர் ஓட்டல் தியேட்டரில் 1922 ம் ஆண்டு செப்டம்பர் 22 ல் திரையிடப்பட்டது .
-- தினமலர் ,அக்டோபர் 29 , 2010 .

Friday, November 11, 2011

நியூட்ரான் நட்சத்திரம் !


சூரியனை போல இருமடங்கு நட்சத்திரம் கண்டுபிடிப்பு .
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் ( மின் இயக்கமற்ற ) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது .
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது :
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது . இது ஆச்சரியமாக உள்ளது . உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது . அணுக்கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது . இந்த நட்சத்திரத்தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும் . இது விண்வெளிக் கோளத்தில் சுற்றிவரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும் . இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார் .
--- தினகரன் , 29 அக்டோபர் 2010 .

Thursday, November 10, 2011

ஹை டெக் தேசம் !


ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானுக்கே முதல் இடம் . உலகில் அதிக அளவு பயன்படுத்தப்படும் போக்குவரத்துச் சாதனங்கள் இங்கு தயாரானவையே . உலகத்தின் முக்கிய 15 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன . 60 வருடங்களுக்கு முன்பு அணு ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட இந்தக் குட்டி நாட்டின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இரண்டு தான் . ஒன்று, கடின உழைப்பு . மற்றது, உறவு . ஆம், ஜப்பானின் நிறுவன முதலாளி -- தொழிலாளி உறவு ஒரு குடும்பம் போலவே இருக்கிறது . விஞ்ஞானியோ, கடைநிலை ஊழியரோ பணிபுரியும் நிறுவனத்தை குடும்பமாகவே மதிக்கின்றனர் . இந்த நேசிப்புதான் ஜப்பானின் வெற்றியைச் சாத்தியப்படுத்தி உள்ளது !
-- கார்த்திகா ,
குளித்துக்கொண்டே படம் பார் !
டாய்லெட்டில் ஹைடெக் உண்டா ? தன்னையும் மனிதனையும் சுத்தப்படுத்தும் தானியங்கி பாத்ரூம் டாய்லெட் வந்துவிட்டது . கண்டுபிடித்திருப்பவர்கள் ஜ்ப்பானியர்களேதான் !
' வெந்நீர் ரெடியா ? ' என்று எகிறவேண்டாம் . ரிமோட் அழுத்தினாலேபோதும் . தேவையான சூட்டில் உடல் நனையுமாறு எட்டுதிக்கில் இருந்தும் தண்ணீர் கொட்டும் . கூடுதலாக பாடல்களும் ஒலிபரப்பாகும் . டவரில் குளித்தால், இன்னும் சூப்பர் . குளித்துக்கொண்டே படமும் பார்க்கலாம் .
நம்முடைய உடல் வெப்பநிலைக்கு ஏற்ப, தண்ணீரின் வெப்பநிலையும் மாறிக்கொள்ளும் . கழிவுகள் வெளியேறியதும் டாய்லெட் தானாகவே தண்ணீரின் அளவைத் தீர்மானித்து தன்னையும், நம்மையும் சுத்தப்படுத்தும் . அதற்கடுத்து சூடான காற்றால் காயவைக்கும் .
ம் ஹூம்... எதுக்கெல்லாம் டெக்னாலஜியை யூஸ் பண்றாங்க !
--- யா. நபீசா , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Wednesday, November 9, 2011

வண்ணம் உங்கள் கையில் !


ஒரு வண்ணத்துப் பூச்சியை கையில் பிடிக்கிறீர்கள் . அதை அப்படியே படம் வரைய ஆசை . அதன் இறகில் உங்களிடம் இல்லாத புது வண்ணம் இருக்கிறது . அதற்கு எங்கே போவது ?
கொரியாவின் பேனா டிசைனர் ஜின்கன் பார் என்பவர் கண்டுபிடித்து இருக்கும் இந்த புதிய பேனா உங்கள் பிரச்னையை நொடியில் தீர்த்துவிடும் . எந்த நிறமாக இருந்தாலும் அதை ஸ்கேன் செய்து, அந்த கலர் மையை உடனே தயாரிக்கும் . பேனாவை வைத்து வரைய ஆரம்பிக்க வேண்டியதுதான் !
வண்ணங்கள் கொட்டிக்கிடக்கும் துலிப் மலரோ, ஜப்பானில் வருடத்துக்கு ஒரு முறையே பூக்கும் சகுரா மர இலையோ, எந்த வித்தியாசமான வண்ணத்தையும் நொடியில் தயாரிக்கும் இந்த பேனா, ஆப்பிளை வரைய வேண்டும் என்றால் சிவப்பு வண்ணத்தைத் தண்ணீரில் கலந்து ஆப்பிளின் நிறம் வரும்வரை மல்லுக்கட்ட வேண்டியது இல்லை . ஒரு ஸ்கேனில் வேலை முடிந்துவிடும் . ஆப்பிள் ரெடி !
--- இரா. கோகுல் ரமணன் , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Tuesday, November 8, 2011

ஹோட்டல் !


உலகைச் சுற்றும் ஹோட்டல் !
விண்வெளி டெக்னாலஜியில் மனிதனின் அடுத்த சாதனை விண்வெளி ஹோட்டல் ! பார்சிலோனாவைச் சேர்ந்த ' தி கேலக்டிக் ஷூட் ஸ்பேஸ் ரிசார்ட் ' என்ற நிறுவனம் விண்வெளியில் 450 கி.மீ உயரத்தில் ஹோட்டல் கட்டும் முயற்சியில் இருக்கிறது . 2012 - ம் வருடம் ரிப்பன் வெட்டி இந்த ஹோட்டலைத் திறந்துவைக்க இருக்கிறார்கள் . பூமியில் இருந்து கிளம்பினால், ஒன்றரை நாளில் இந்த ஹோட்டலை அடையலாம் . ஒரு கண்டிஷன், அங்கே செல்வதற்கு சுமார் ஆறு மாத காலம் பயிற்சி பெறவேண்டும் . ஏழு மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடி அறையில் தங்கலாம் . இந்த ஹோட்டலில் தங்கி இருந்தால், ஒரு நாளைக்கு 15 முறை சூரிய உதயம் காணலாம் .
அங்கே மூன்று இரவுகள் தங்குவதற்கு ஒருவருக்கு 19 கோடியே 80 லட்சம் ரூபாய் கட்டணம் . ஒரு ட்ரிப்புக்குக் குறைந்தது நான்கு சுற்றுலா பயணிகளும், இரண்டு பைலட்டுகளும் மட்டுமே இருக்க முடியும் . இப்போதுவரை ஹோட்டலில் தங்க 200 பேர் ரிசர்வ் செய்திருக்கிறார்கள் . ஒண்ணு மட்டும் நிச்சயம்... அங்கே கொடுக்கிற காபியில் நிச்சயம் ஈ மிதக்காது !
--- செ. கார்த்திகேயன் , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Monday, November 7, 2011

கார் பற... பற...


காதலியை உடனே சந்திக்க வேண்டும் . ஆனால், போகிற வழியில் ட்ராஃபிக் என்று எஃப்.எம் தகவல் சொல்கிறதா ? உங்களுக்கே உங்களுக்காக வந்து விட்டது பறக்கும் கார் .
Terrafugia என்கிற அமெரிக்க நிறுவனம் முதல்முறையாக பறக்கும் காரை வடிவமைத்து இருக்கிறது . இந்த பறக்கும் காரில் றெக்கைகள் பக்கவாட்டில் மடித்து வைக்கப்பட்டு இருக்கும் .
ஸீட்டுக்குப் பின்னால் ஒரு புரபெல்லர் இருக்கும் . மற்ற கார்களைப்போலவே பெட்ரோல் போட்டுக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் ஓட்டிச் செல்லலாம் . நோ பார்க்கிங்கில் பார்க் பண்ணி போலீஸுக்கு லஞ்சம் கொடுக்கலாம் . ரோட்டில் கார் ஓட்ட போரடிக்கிறதா...? றெக்கைகளை விரித்து, புரபெல்லரை ஆன் பண்ணினால், 30 விநாடிகளில் விமானம் ரெடி . அப்படியே டேக் ஆஃப் ஆகி 115 கி.மீ வேகத்தில் பறக்கும் . 725 கி.மீ தூரம் வரை இறங்காமல் பறக்க முடியும் . ஒரு வேளை பெட்ரோல் போட மறந்துவிட்டால் பதறாதீர்கள், முதுகுக்கு பின்னால் பாராசூட் இணைக்கப்பட்டிருக்கும் . காரில் இருந்து எகிறிக் குதித்துவிடலாம் . ரோட்டில் போகும்போது யாராவது உரசினால் அதை காட்டிக் கொடுக்கும் அலாரம் இதில் இணைக்கப்பட்டிருக்கும் . கண்ணாடியில் கீறல் இருந்தாலும் எச்சரிக்கை மணி அலற ஆரம்பித்துவிடும் . அதிக பட்சம் இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பறக்க முடியும் .
---எம்.ஜி.பாஸ்கரராஜன் . ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

Sunday, November 6, 2011

தூங்காமல் தடுக்கும் கருவி !


டிரைவர் தூங்காமல் தடுக்கும் கருவி !
ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . டிரைவர் தூங்காமல் புதிய கருவி தடுக்கும் .
ஜெர்மனியில் இல்மெனா என்ற இடத்தில் உள்ளது டிஜிட்டல் மீடியா டெக்னாலஜிக்கான பிரான்ஹோபர் நிறுவனம் . இந்த நிறுவன விஞ்ஞானிகள், ' ஐ டிரேக்கர் ' எனப்படும் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர் . இக்கருவியை காரினுள் எந்த பகுதியிலும் பொருத்திக் கொள்ளலாம் . இக்கருவிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, டிரைவரின் கண் அசைவுகளை நோட்டமிட்டு கொண்டே இருக்கும் . டிரைவர் சிறிது அசந்தாலும், கருவி பலத்த சத்தம் ஏற்படுத்தி எழுப்பிவிடும் . .இதற்கு கம்யூட்டர் அல்லது லேப்டாப் தேவையில்லை . டிரைவரின் தலை இடது, வலது என எந்த பக்கம் திரும்பினாலும், ஒரு நிமிடத்துக்கு 200 பிரதிபலிப்புகளை கேமரா வெளிப்படுத்தும் . வேண்டுமானால், கேமராவில் இருந்து காரில் இருக்கும் சிறிய கம்யூட்டருக்கு இணைப்பு கொடுத்துக் கொள்ளலாம் .
இக்கருவி தீப்பெட்டி அளவில் பாதி அளவாக இருக்கும் . காரினுள் பொருத்தினால்கூட தெரியாது . அந்த அளவுக்கு சிறிய கருவி . இதில் இருக்கும் லென்ஸ் 4 மி.மீ விட்டம் கொண்டது . கண் பார்வை குறைபாடுகள் கண்டறியும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது .
--- தினகரன் . அக்டோபர் 28 , 2010 .

Saturday, November 5, 2011

சொந்தங்களே...


ஜப்பானில் இருக்கும் காகங்கள் டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது ஓடிச்சென்று கார் டயர்களுக்கு முன்னால் சில கொட்டைகளை வைக்கின்றன . பச்சை விளக்கு ஒளிர ஆரம்பிக்கும்போது....அவை சாலையை விட்டு சடுதியில் பறந்து விடுகின்றன . கார்கள் ஏறி உடைத்து விட்டுப் போன கொட்டையில் இருக்கும் பருப்புகளை மீண்டும் சிவப்பு விளக்கு ஒளிரும்போது அவை எடுத்துக் கொள்கின்றன .
காகங்கள் புத்திசாலிகள் என்பதை என் மகன் செயல்முறை விளக்கம் மூலமாகவே நிரூபிப்பான் . எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூடும் காகங்களுக்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அதன் பக்கத்திலேயே பாதம் பருப்புகளையும் வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு விலகி வந்து விடுவான் . பாதம் பருப்புகளை எடுக்க வரும் காகங்கள், அவற்றைத் தண்ணீரில் போட்டு சற்று ஊறவைத்துச் சாப்பிடுவதை பார்த்தால்.... ஆச்சர்யத்தில் கண்கள் விரியும் !
அடைகாக்கும்போது, ' இது பெண்ணின் வேலை ' என்று ஒதுங்கிவிடாமல் அப்பா காகம், அம்மா காகம் என்று இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும் .
காகங்கள் தங்களின் உணவுக்காக நிலத்தில் வெவ்வேறு இடத்தில் கொட்டைகளை மறைத்து வைப்பதும், மாதங்கள் கழித்தும் பனி, மண் மூடினாலும் அபார ஞாபகத்துடன் அதே இடத்திலிருந்து அந்த கொட்டைகளை எடுப்பதும் ஆச்சர்யம் . இந்தக் கொட்டைகளை வேறு பறவைகள் திருடுவதைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடம் மாற்றியும் வைப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் . காகங்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, அடுத்தவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று கணிக்கும் திறனும் இருப்பது, வியப்பு .
--- மேனகா காந்தி .அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

டிப்ஸ்...டிப்ஸ்...


* நறுக்கிய வெங்காயத்தை கடாயில் வதக்கும்போது, ஒரு நிமிடம் வெங்காயத்தை மட்டும் புரட்டிவிட்டு, தண்ணீர்ப் பசை போனதும், எண்ணெய் ஊற்றி வதக்கினால்... குறைவான எண்ணெயே தேவைப்படும் . சீக்கிரமாகவே பொன்னிறமாக வதங்கவும் செய்யும் .
* வேர்க்கடலை உருண்டை, பர்ஃபி போன்றவற்ரைத் தயாரிக்க, வறுத்த வேர்க்கடலையைத் தோல் உரித்தாக வேண்டும் . அதற்குச் சுலபமான வழி... வறுத்த கடலையை கெட்டியான துணிப் பையில் ... அல்லது துணியில் போட்டு, வாய்ப்பகுதியை இறுக்கிக் கட்டவேண்டும் . பின்னர் கைகளர்ல் கடலையை பரபரவென்று அழுத்தித் தேய்த்தால்... சுலபமாகத் தோல்
உரிந்து விடும் . ஒரு தட்டில் கொட்டி ஊதினால்... தோல் பறந்து விடும் ... .
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Friday, November 4, 2011

புதிய மனிதா... பூமிக்கு வா !


சந்திராயன் -1 விண்கல கவுன்ட் டவுனின் கடைசி நொடிகள்... 99 - வது ரன்னில் சச்சின் சந்திக்கும் செஞ்சுரி பந்து... இதுபோன்ற சின்னச் சின்னா டென்ஷனையே நம்மால் தாங்க முடியாமல் போய்விடுகிறது . ஆனால், 33 உயிர்கள் ... 2,300 அடி ஆழம்... என ஒட்டுமொத்த சிலியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க... உலகமும் அந்தப் பதைபதைப்பில் சேர்ந்து கொள்ள... அந்த 69 நாட்கள் டென்ஷனை என்னவென்று சொல்ல ?
கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் இருக்கும் காப்பர் மற்றும் தங்க சுரங்கத்தில் வழக்கம்போல வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்
திடீரென சுரங்கம் சரிந்து விழ, உள்ளே இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு சமாதி ' என முடிவுக்கு வந்தது உலகம் !
ஆனால், இருள் மட்டுமேயான நரகத்தில் மாட்டிக் கொண்டு, நம்பிக்கை இழக்காமல், அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது 17 நாட்களுக்குப் பிறகு தெரிய வந்தபோது, உலகமே அதிசயித்தது ! இப்போது, 69 நாட்களுக்குப் பிறகு, புதிய மனிதர்களாக மேலே வந்திருக்கிறார்கள் 33 பேரும் !
குடும்பத்தாரின் பதைபதைப்பு, உலகத்தின் ஒட்டுமொத்த கவனிப்பு... என அந்த நிமிடங்கள் இங்கே ' பளிச் பளிச் என பதிவாகின்றன ...!
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Thursday, November 3, 2011

' அன்ட்டிலியா....'


நீத்தா அம்பானிக்கு வீடு பற்றி ஒரு கனவு இருந்தது . ஆனால், ஒரு சராசரி பெண்ணின் கற்பனைக்குக்கூட எட்டாத காஸ்ட்லி கனவு . அதை நாற்பதாயிரம் சதுர அடியில், 4,500 கோடி ரூபாய் செலவில் நனவாக்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி . ' உலகிலேயே விலை உயர்ந்த வீடு ' என்ற பெருமையுடன் !
ஜன்னலைத் திறந்தால் கண் முன்னே அரபிக்கடல் விரியும் இந்த வீட்டுக்கு.... ' அன்ட்டிலியா ' என்று தேவதைக் கதைகளில் வரும் ஒரு தீவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது .
முகேஷ் -- நீத்தா தம்பதி, அவர்களுடைய வாரிசுகள் ஆகாஷ், ஆனந்த், ஈஷா மற்றும் முகேஷின் அம்மா கோகிலா பென் என ஆறே நபர்கள் வசிக்கப் போகும் அந்த வீடு . மும்பையில் 27 மாடிகளுடன், பிரமாண்டமாக நிற்கிறது . முதல் நான்கு மாடிகளில் கார் பார்க்கிங், வீடுக்கு மேலே ஹெலிகாப்டர் தளம், நவீன வசதிகள் கொண்ட சினிமா தியேட்டர், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளங்கள், பியூட்டி பார்லர் என்று உலகத்தரத்தில் இருக்கிறது வீடு !
" எல்லாம் உனக்காக ! " என்றபடி கடந்த விஜயதசமியன்று ( 17 . 10 . 10 . ஞாயிறு ) நீத்தாவிடம் ஒப்படைத்து பால் காய்ச்ச வைத்துவிட்டார் முகேஷ் !
ம்ம்ம் !
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாற ) கொல்லுமாங்குடி .

Tuesday, November 1, 2011

கிரெடிட் கார்டு .

கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி >
* கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செல்வினை 45 -- 50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டி எதுவும் இல்லை . அந்தக் காலத்தைத் தாண்டிவிட்டால், மாதம் 2 - 3 சதவீதம் வட்டி . அதாவது, ஆண்டுக்கு 24 -36 சதவிகிதம் !
* குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டாவிட்டால், வட்டிக்கு வட்டி கட்டுவதோடு, அபராதக் கட்டணமாக ரூ 600 - 700 செலுத்த வேண்டி இருக்கும் . நீங்கள் ரூ.500 -க்குப் பொருள் வாங்கிக் காலம் கடத்தினால்கூட , ரூ. 600 அபராதம் உஷார் !
* வெட்டி பந்தாவுக்காக கிரெடிட் கார்டு வாங்கவே வாங்காதீர்கள் . ஆண்டு முழுக்கச் சும்மா வைத்து இருந்தாலும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்று ரூ. 700 - 1,000 விதிப்பார்கள் !
* ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு .ஒரு வாரம் வரை 20 - 25 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார்கள் . அடுத்த 15 -20 நாட்களுக்குள் உங்களுக்கு போனஸ் வந்துவிடும் என்றால், தள்ளுபடி சலுகையை அனுபவிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் !
* இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், வீடுக் கடன் வாங்க மார்ஜின் பணத்துக்கு கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்தாதீர்கள் !
* பொருட்கள் வாங்கும்போது ' ஸ்டேட்மென்ட் பில் ' போடப்படும் சுழற்சியைக் கவனிப்பது அவசியம் . பில்லில் தேதி 25 என்றால், நீங்கள் 23 -ம் தேதி பொருள் வாங்கினால், இரண்டு
நாட்கள்தான் வட்டி இல்லாக் காலம் கிடைக்கும் . 26 -ம் தேதி வாங்கினால் வட்டி இல்லா சலுகையை அதிக நாட்கள் அனுபவிக்கலாம் !
* கிரெடிட் கார்டு பெறும் முன் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபர்ந்தனைகளை முழுக்கப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் . புரியவில்லை என்றால், தெளிவு படுத்திக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையோப்பம் இடுங்கள் !
* கார்டைக்கொண்டு பணம் எடுப்பதை 100 சதவிகிதம் தவிர்க்கவேண்டும் . பணம் எடுத்த உடனே வட்டி மீட்டர் ஓடத் தொடங்கிவிடும் . மேலும், பணம் எடுத்ததற்கான பறிமாற்றக்
கட்டணம் சுமார் ரூ. 250 என்பதையும் மறக்காதீர்கள் !
---சி. சரவணன் ,ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .

Monday, October 31, 2011

' NOTABLEPERSONS '


NOTABLEPERSONS ' என சிலர் விளம்பரப்படுத்தப்படுகிறார்கள் . அவர்களில் பெரும்பாலோனோர் உருப்படியானவர்களாக இருக்கமாட்டார்கள் ! இந்த வாசகத்தை சிறிது மாற்றி அமைத்தாலே போதும் ; இந்த உண்மை விளங்கிவிடும் . எப்படி மாற்றவேண்டும் ? இதோ , இப்படித்தான் :
NOT ABLE PERSONS !
--- ' உலக சரித்திர நூலில் ' ஜவஹர்லால் நேரு .
கண நேரம் என்பது ...
நூறு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றினூடே ஊசியைச் செலுத்தினால் அவ்வூசி முனை ஓரிதழுக்கும் மற்றோரிதழுக்கும் இடையே கடந்து செல்லும் கால அளவுதான் கண நேரம் என்பது .
--- ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .

Sunday, October 30, 2011

தர்ப்பணம் .


தர்ப்பணம் : சில குறிப்புகள்..
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது .
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது .
* குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது .
* சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது . அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம் .
* தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணை தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது .
* அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது .
* தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது .
* பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது . அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது .
* நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது ; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது .
--- தினமலர் இணைப்பு . ஜனவரி 6,. 2011 .

சூரியனின் பெருமைகள் !


பொன் வண்ணத்தேரில் மத்தியில் அமையும் பத்மாசனத்தில் இரண்டு மனைவியருடன், ஒளிமயமாக எழுந்தருளியிருப்பவன் சூரியன் .
சூரியதேவன் தேருக்கு ஏழு குதிரைகள் . காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்தி என்னும் ஏழு வகையான சப்த வஸ்ஸுக்கள் ஏழு பச்சைக் குதிரைகளாக அவனது பொன்வண்ணத் தேரை அலங்க்கரிக்கின்றன .
பொதுவாக தேர் என்றால் இரண்டு சக்கரங்கள்தானே இருக்கும் . ஆனால், சூரியதேவன் தேருக்கோ ஒரேஒரு சக்கரம்தான் உண்டு . கருடனுக்கு ஒரு சகோதரன் உண்டு . அவன் பெயர் அருணன் . அவன்தான் சூரியனுடைய தேரை ஓட்டக்கூடிய சாரதி .
அதிகாலை சூரியன் ரிக்வேத சொரூபமாக இருக்கிறார் . உச்சி காலத்தில் யஜுர் சொரூபமாகிறான் . மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாக இருக்கிறான் என்கிறார்கள் .
இப்படி பல பெருமைகள் படைத்த சூரியதேவன் தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு மூர்த்தியின் பெயரால் வணங்கப்படுகிறார் . சித்திரை மாதத்தில் விஷ்ணுவாகவும், வைகாசி மாதத்தில் அரியமா என்றும் . ஆனியில் விவஸ்வான் என்றும், ஆடியில் அம்சுமான் என்றும், ஆவணியில் பிரசன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் விஸ்வான் என்றும், தையில் பூஷ்வா என்றும், மாசியில் பகன் என்றும், பங்குனியில் துவஷ்டா என்றும் பெயர் பெறுகிறார் .
பருவங்களுக்கு சூரியனே காரணம் . ஆண்டினை ஆறு பருவங்ககளாகப் பிரிப்பார்கள் . கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் என்பவை ஆறு பருவங்களாகும் . இரண்டு இரண்டு மாதங்களை ஒரு பருவமாக சொல்வார்கள் . பருவத்தை ' ருது ' என்று வடமொழியில் சொல்வார்கள் . வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷருது, சரத்ருது, ஹேமந்தருது சிசிரருது என்பன ருதுக்கள் . சூரியன் ஒவ்வொரு ருதுவிலும் ஒவ்வொரு வர்ணத்தில் இருப்பாராம் .
உதயகிரி எனப்படும் மலையில் தோன்றுகிறார் சூரியன் . அவர் தோன்றும் போது தென்திசையில் இலங்கை நோக்கி துயில்கொள்ளும் த்ருமாலின் காலை பார்த்துக்கொண்டே உதயமாகிறாராம் . எனவேதான் அவர் உதயமாகும் நேரத்துக்கு காலை என்று பெயர் வைத்தார்களாம் . அதுபோலவே மறையும் நேரத்தில் சூரியன் திருமாலின் முழு உருவத்தையும் தரிசிப்பதால் மாலை என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்வார்கள் .
--- தினமலர் இனைப்பு . ஜனவரி 13 . 2011 .

Saturday, October 29, 2011

சிமென்ட்.


ஒளி ஊடுருவும் சிமென்ட்.
இத்தாலியை சேர்ந்த ' இத்தாலியன் சிமென்ட் குரூப் ' என்ற நிறுவனம் ஒளி ஊடுருவும் சிமின்டை கண்டுபிடித்துள்ளது . நிறமற்ற பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிமென்ட் கலவையை கொண்டு கட்டடம் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையிலான இடைவெளி மூலம் வெளிச்சம் ஊடுருவும் . இதனால், சுவருக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எளிதாக பார்க்கலாம் .
ஒளி ஊடுருவும் வகையில் டிரான்ஸ்பிரன்ட் சிமென்ட் கலவை, நிறமற்ற பிளாஸ்டிக் கலவையால் ஆனது . இந்த கலவையை கொண்டு சுவர் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவை இருப்பதே தெரியாது . தொலைவில் இருந்து பார்ப்பதற்கு இரண்டு கற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதுபோல் தெரியும் . ஒளி ஊடுருவும், நிறமற்ற கண்ணாடி போன்ற இந்த கலவையால் கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து அறைக்குள் ஒளி ஊடுருவும். இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது . இதனால் கணிசமான அளவு மின்சாரம் சேமிக்கமுடியும் .
--- தினமலர் .ஜனவரி 9 , 2011 .

Friday, October 28, 2011

37 ஸ்பெஷல் !


37 என்ற எண்ணை 3 -ன் மடங்குகளால் பெருக்கினால் இப்படி ' மேஜிக் ' எண்கள் வரும் ! நண்பர்களிடம் சொல்லி அசத்துங்கள் !
37 x 3 = 111
37 x 6 = 222
37 x 9 = 333
37 x 12 = 444
37 x 15 = 555
37 x 16 = 666
37 x 21 = 777
37 x 24 = 888
37 x 27 = 999 .
--- தினமலர் , இணைப்பு . 14 . 1. 2011 .

Thursday, October 27, 2011

வீடுகளுக்கு கதவில்லை !


வீடுகளுக்கு கதவில்லை, வங்கிக்கு பூட்டு கிடையாது !
மாகாராஷ்டிரம் மாநிலம் அகமது நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகான சிற்றூர் ஷானி சிங்னாப்பூர் . உலகப் புகழ் பெற்ற ஷானி கோயில் இங்கு உள்ளது . இதை சூரியன் கோயில் என்றும் சொல்கிறார்கள் . தங்கள் ஊரை கடவுளே காவல் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர் .
இதனால், இந்த ஊரில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது . எல்லா வீடுகளும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது . ஆனால் கதவு மட்டும் இல்லை . நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் . அவர்கள் தங்குவதற்கு அழகான குடில்கள் உள்ளன . அவற்றுக்கும் கதவு இல்லை . எந்த பொருளும் திருடு போனதில்லை . திருடுபவர்களை கடவுள் ஷானி தண்டித்துவிடுவார் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர் .
இந்த கிராமத்தில் யூகோ வங்கி கிளை திறந்துள்ளது . வங்கியை பாதுகாப்பாக பூட்டி வைக்கவும் சேப்டி லாக்கர் அமைக்கவும் நிர்வாகம் முயன்றது . ஊர்மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . அப்புறம் என்ன, பகலும் இரவும் வங்கி திறந்தே இருக்கிறது . இந்த வங்கியில் கலெக்ஷன் ஆகும் பணத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமாவது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அருகில் உள்ள வங்கிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . எந்த வங்கியும் முன்வரவில்லை . இதனால் யூகோ வங்கியின் சேவை திறந்த பெட்டகமாகத்தான் இருக்கிறது .
--- தினமலர் 12 . 1. 2011 .
--- பின்குறிப்பு : நான் எங்கள் குடும்பத்துடன், அங்கு சென்று , ஒரு நாள் தங்கியபோது , அங்குள்ள விடுதிகளிலும் அறைகளிலும் இருக்கும் , குளியல் மற்றும் கழிவறைகளில் கூட கதவு இல்லை என்பதுதான் வேடிக்கை சுற்றுலாவில் சென்றதால் வேறு வழியின்றி தங்க நேரிட்டது . என்பதும் வேறு கதை .

Wednesday, October 26, 2011

டிப்ஸ் .


* தேங்காய் துருவுவதற்கு முன், தேங்காய் மூடியைத் தண்ணீரில் நனைத்துவிட்டுத் துருவினால், மூடியில் உள்ள நார், தேங்காய்த் துருவலில் விழாது .
* ரவா தோசை வார்க்கும் போது, ரவையை வறுத்துக் கொண்டு தோசை மாவில் கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும் .
* சன்னா மசாலா, பைங்கன் பர்தா போன்ற வட மாநில ரெசபிகள் செய்யும்போது கொஞ்சம் பதம் தப்பினாலும் கிரேவி நீர்த்துப்போய்விடும் . அப்போது சிறிதளவு வேர்க்கடலையைப் பொடித்து போடுங்கள் . கிரேவி ' திக் 'காகி விடும் .
* இழைக் கோலம் போட திடீரென்று மாவு தேவைப்படும்போது இந்த ஈஸி வழி உங்களுக்கு கை கொடுக்கும் . ஒரு டம்ளர் அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக மிக்க்ஸியில் அரைத்து ஓர் தட்டில் ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும் . நன்றாக காய்ந்ததும் அதை பொடி செய்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், இழைக் கோலம் போடும்போது தேவையான மாவை தண்ணீரில் கரைத்து இழைக் கோலம் போடலாம் .
* முட்டை உபயோகிக்கும் வீடுகளில் முட்டையை உடைத்து ஊற்றியபின், அதை அப்படியே முழு ஓட்டுடன் தூக்கி எறியக்கூடாது . முட்டையில் ஓட்டை ஒட்டி உள்ள பகுதியில் வெண்மையாக ஒரு திசு ஒட்டிக் கொண்டிருக்கும் . இந்த திசுவின் வாசனை, பாம்புகளுக்கும், எலிகளுக்கும் ரொம்பப் பிடிக்கும் . அதை சாப்பிட அவைகள் முட்டை ஓடுகளைத் தேடி வரும் . எனவே, முட்டை ஓடுகளை முழுவதுமாக தூக்கி எறியாமல் தூளாக உடைத்து, ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அப்புறப்படுத்த வேண்டும் .
--- குமுதம் சிநேகிதி , ஜனவரி 16 - 31 , 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி

Tuesday, October 25, 2011

பாசத் தீ .


ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா '.
எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை
ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு !
--- ஆர்.சி.மதிராஜ் , ஆனந்த விகடன் 22 . 11 . 2010 .

Monday, October 24, 2011

ஆண் விலங்குகள் !


பொதுவாக, ஆண் விலங்குகள் அனைத்துக்கும், இனப்பெருக்க உறுப்புக்குள் பாக்குலம் ( baculum ) என்ற ஓர் எலும்பு இருக்கும் . இந்த எலும்புதான் விறைப்புத் தன்மையை நீட்டிக்க உதவுகிறது . சிம்பன்சி மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது . ஆனால், மனித ஆண்களுக்கு மட்டும் பாக்குலம் இல்லை . ஏன் ? பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக மனிதப் பெண், பாக்குலம் இல்லாத ஆண்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததில்.... கடைசியில் மனித ஆண், பாக்குலம் இல்லாதவனாகவே போய்விட்டான் . எலும்பின் உபயத்தால் விறைப்பு ஏற்படுவதைவிட, எலும்பே இல்லாதபோதும் விறைப்புடன் இயங்குவதுதான் நிஜ வீரியத்தின் வெளிப்பாடு . அதனால் மனிதப் பெண்கள் எல்லோரும் எலும்பு இல்லாத ஆண்களுடன்கூடி, அவர்களின் தரத்தை வித்தியாசப்படுத்த ஆரம்பித்தனர் . ஆணும் காலப்போக்கில் அது இல்லாமலேயே விறைப்புடன் தன்மையைப் பெற்றான் .
---' உயிர்மொழி ' .தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 17 . 11 . 2010 .

Sunday, October 23, 2011

பேட்டை .கடி .


ரீடர்ஸ் பேட்டை .கடி .
* மயிலுக்கும் கிளிக்கும் உள்ள வித்தியாசம் ....?
யோசிங்க... யோசிங்க....
மயில் தெசியப் பறவை
கிளி ஜோசியப் பறவை !
* சிவன் கோயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்...
அங்கே நந்தி இருக்கும் ;
இங்கே தொந்தி இருக்கும் !
--- லதானந்த் , குங்குமம் , 1 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு .

Saturday, October 22, 2011

வெப்ப அளவு !


வெப்ப அளவு மாற்றும் ஈஸி வழி !
வெப்ப அளவை ' சென்டிகிரேடு ', 'கெல்வின் ', ' பாரஹீட் ', என மூன்று விதமான அலகுகளால் குறிப்பிடுகிறோம் . ஒரு அலகில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும் ஈஸி வழி இது :
* சென்டிகிரேடை பாரன்ஹீட்டாக மாற்ற 9 ஆல் பெருக்கி, 5 ஆல் வகுத்து, 32 ஐ கூட்ட வேண்டும் .
* பாரன்ஹீட்டை சென்டிகிரேடாக மாற்ற 32 ஐ கழித்து, 5 ஆல் பெருக்கி, 9 ஆல் வகுக்க வேண்டும் .
* சென்டிகிரேடை கெல்வினாக மாற்ற, 273.15 ஐ கூட்டவேண்டும் .
* கெல்வினை சென்டிகிரேடாக மாற்ற, 273.15 ஐ கழிக்க வேண்டும் .
--- தினமலர் , இணைப்பு ஜனவரி 7 , 2011 .

Thursday, October 20, 2011

தகுதி !


பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest '. எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும் . தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும் . அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம் ! ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்
------ லதானந்த் , குங்குமம் , 29 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு .

Wednesday, October 19, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...


* ' தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ' என்று நமக்குத் தெரியும் . ஆனால், உபயோகிப்பதற்கு எடுக்கும்போது அது இறுகாமல் இருக்க வேண்டுமே..! முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியை வெறுமனே நன்கு சூடாக்கி, அடுப்பை அணத்துவிடுங்கள் . துருவலை அதில் பொட்டு, நாலைந்து முரை புரட்டி, ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வையுங்கள் . எடுக்கும்போது உதிர் உதிராக இருக்கும் . கெட்டியாக இருந்தாலும் ஸ்பூனால் லேசாக சுரண்டும்போதே பூப்பூவாக உதிரும் !
* மட்டர் பனீர், சன்னா சுண்டல் முதலியன செய்ய திடீர் ஐடியா தோன்றுகிறது . ஆனால், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றை முன்கூட்டியே ஊறவைக்கவில்லை கவலையை விடுங்கள் . வெறும் வாணலியில் அவற்றைப்போட்டு, ஐந்தாறு நிமிடங்கள் நன்கு வறுக்கவும் . பின்னர், இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடா போட்டு, உப்பு சேர்க்காமல் குக்கரில் ஐந்தாறு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால்... நன்கு வெந்திருக்கும் . அதிகப்படி தண்ணீரைக் கொட்டிவிடாமல் தாளிப்புடன் சுண்ட விடவும் .
--- அவள் விகடன் . 14 . 1. 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி .

Tuesday, October 18, 2011

ஜோக்ஸ் !

* " சார் பில்...."
" இந்தாங்க ...."
" என்ன சார் ரேஷன் கார்டைத் தர்றீங்க ..? "
" நீங்கதானே ஹோட்டல் வாசல்ல ' ஆல் கார்ட்ஸ் அக்சப்டட்'னு போர்டு வெச்சிருக்க்கீங்க...?!
* " ஹலோ... யார் பேசறது ? "
" நான் செல்லம்மா பேசறேன் .."
" நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்...? யாருனு சொல்லும்மா ! "
* " கார் ஓட்ட தெரியலன்னா என்ன பண்ணனும் > "
" கார்ல இன்னும் கொஞ்சம் பெரிய ஓட்ட போடணும் ! "
--- அவள் விகடன் . 14 . 1. 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி .

Monday, October 17, 2011

ரோமம் !


ஒரு நாளைக்கு 75 - லிருந்து 150 வரை முடி உதிர்வது சகஜம் . ஒருவர் தலையில் 90,000 லிருந்து 1 லட்சத்து 40,000 வரை முடிகள் இருக்கும் . வெதுவெதுப்பான க்ளைமேட்டில் முடி வளர்ச்சி கூடுதலாக இருக்கும் . கன்னத்திலும் இதர பகுதிகளிலும் இருக்கும் மெல்லிய ரோமங்களை லானுகோ என்பார்கள் /
தலைமுடியிலிருந்து எல்.சிஸ்டெய்ன் என்ற அமினோ அமிலம் பிரிக்கப்பட்டு, அது சாக்லெட்டுகள் மற்றும் பேக்கரியில் கிடைக்கும் சில உணவுப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
--- லதானந்த் , குங்குமம் , 1 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு

Sunday, October 16, 2011

பொய் மேல் பொய் .

உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிக் கடவுளிடம் புகார் செய்ய ஒருவன் சொர்க்கத்துக்குப் போனான் . ' எல்லாம் வல்ல இறைவனே ! நீங்கள் எல்லாம் அறிந்தவர் என்று எல்லோரும் கூறுகிறார்கள் . ஆனால் நீங்கள் படைத்த பூமியில் என்ன நடக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் . உண்மையைப் பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை ' என்றான் .
இதைக் கடவுள் மறுத்தார் . ' எனக்கு எல்லாம் தெரியும் . அதோ எதிரே உள்ள பலகையைப் பார் , ஒருவர் பொய் சொல்லும் போதெல்லாம் ஒரு சிவப்பு ஒளி பளிச்சிடும் . பொய் சொல்வது யார் என்பதை தெரிந்து கொள்வேன் .'
பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏராளமான சிவப்பு விளக்குகள் இடைவிடாது பளிச்சிட்டன . ' ஒரே சயத்தில் எல்லா விளக்குகளும் ஏன் பளிச்சிடுகின்றன ? ' என்று கேட்டான் அப்பாவி மனிதன் .
கடவுள் சொன்னார் , " ஓ அதுவா ? இப்போது ஆல் இந்தியா ரேடியோவில், தூர்தர்ஷன் செய்திகளைக் கேட்டிக் கொண்டிருக்கிறோம் ."
--- ' குஷ்வந்தசிங் ஜோக்ஸ் ' புத்தகத்தில் இருந்து ஆர். ஆர். பூபதி .
--- தினமணிகதிர் , மார்ச் 21 , 1993 .

Saturday, October 15, 2011

உயரம் கண்டுபிடிக்க....

கட்டிடத்தின் உயரம் கண்டுபிடிக்க....
கட்டிடத்தின் உயரம் கண்டுபிடிக்க ஒரு வழி !
ஒரு உயரமான கட்டிடத்தின் உயரம் என்ன என்பதை ஒரு மாடிப்படி கூட ஏறாமல் கண்டுபிடிக்க முடியுமா > முடியும் என்று கூறினார் வானிலை அறிஞர் தேலீஸ் .
தம் கையில் இருந்த கோல் ஒன்றை செங்குத்தாக மணலில் நட்டார் . கட்டிடத்தின் உயரம் காணவேண்டிய கட்டிடத்தின் நிழலை செங்குத்தாக நட்ட அந்த கோலின் நிழலோடு ஒப்பிட்டார் . நாலடி நீளமுள்ள கோல் ஒன்று பகல் வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரண்டடி நீளமுள்ள நிழலை விழச்செய்கிறது என்றால், 40 அடி நிழலை விழச்செய்யும் கட்டிடத்தின் உயரம் எத்தனை அடியாக இருக்கும் ? 80 அடியாகத்தானே இருக்கும் . இவ்வாறு கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்றார் தேலீஸ் .
--- ' சரித்திரத்தின் பொன்னேடுகள் ' என்ற நூலிலிருந்து , கே.ஏ. காளிமுத்து .
--- தினமலர் வாரமலர் . நவம்பர் 8 . 1992 .

அட... இப்படியா சங்கதி ? !

' அற்பனுக்கு வாழ்வு வந்தா... அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான் '
அவன் அற்பனாகவே இருக்கட்டும்... அர்த்த ராத்திரியில மழை வந்தா, குடை பிடிக்காம என்ன செய்வான் ? இல்ல... அர்த்த ராத்திரியில குடை பிடிக்கிறவனெல்லாம் அற்பன்னு சொல்லிவிட முடியுமா ? ஆனா , முன்னோருங்க சொல்லிவெச்ச விஷயமே வேற..! அதாவது மத்தவங்களுக்கு கொடுத்து வாழனுமுன்னு நினைக்கிற மனசு உள்ளவங்ககிட்ட எந்த நேரத்துல வேணும்னாலும் உதவின்னு போய் நிக்கலாம் . தாராளமா கொடை கொடுப்பாங்கறதுதான் விஷயம் . இதை, ' அர்ப்பணித்து வாழ்பவன் , அர்த்த ராத்தியியிலும்கூட கொடை கொடுப்பான் 'னு சொல்ல ஆரம்பிச்சு... கடைசியில ' அர்ப்பணிப்பு ' , ' அற்பன் ' னு மாறிடுச்சு .
' நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! '
இதைக் கேட்டதுமே... ' நல்லவங்களா இருந்தா , ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்கிற அர்த்தத்துல சொல்லியிருப்பாங்க' னு நினைப்போம் . ஆனா , கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா... ' நல்ல மாட்டுக்கு எதுக்காக சூடு வைக்கணும் ? 'னு கேட்கத் தோணும் . அதாவது...ஒரு மாடு ஆரோக்கியமா...திடகாத்திரமா இருக்குதானு கவனிக்கிறதுக்கு அதை நிலத்துல நடக்க வைப்பாங்க . அதனோட சுவடு , ஆழமா பதிஞ்சா... அது நல்ல மாடு . அதைத்தான் , ' நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு ' னு சொல்லி வெச்சாங்க ... காலப்போக்குல அதுல ' சூடு ' வெச்சுட்டாங்க .
--- மெய்யழகன் . அவள் விகடன் , ஜனவரி 16 , 2010 .

Friday, October 14, 2011

வள்ளுவரும் , வாசுகியும் .

வாசுகி இறந்த சோகம் தாளாது வள்ளுவர் பாடிய பாடல் இது :
' அடிசிற்கினியாளே
அன்புடையாளே
படிசொல் தவறாத
பாவாய் ! -- அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம்
பேதையே ! போதியோ ?
என் தூங்கும் கண் இரா .'
' இனிய உணவுகளைச் சமைத்து தந்தவளே ! அன்பு நிறைந்தவளே ! என் பேச்சைத் தட்டாதவளே ! நான் தூங்கும்வரை என் பாதங்களை வருடிக் கொடுத்து, அதன் பின் தூங்கி, நான் எழும் முன் எழுபவளே ! என்னைப் பிரிந்து சென்றுவிட்டாயே ! கொல்கிறதே வேதனை , தொலைந்ததே என் தூக்கம் ' என்றெல்லாம் சோககீதம் பாடி மனைவிக்கு அஞ்சலி செலுத்துகிறார் .
--- தினமலர் . 26 . 12 . 2010 .

Thursday, October 13, 2011

1 = 2 ...!

உங்கள் நண்பர்களிடம் , ' 1 = 2 என்று நிரூபிக்கிறேன் ' என்று சொல்லுங்கள் .
அவர்கள், ' எப்படி சாத்தியம்...' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள் .
' அல்ஜீப்ரா சமன்பாடு விதிகளைப் பயன்படுத்தி நிரூபிக்கிறேன் , பாருங்கள் ! ' என்று சொல்லிவிட்டு, நீங்கள் செய்து காட்டவேண்டிய கணக்கு முறை இதுதான் :
a = b என்று வைத்துக்கொள்வோம் .
இரண்டையும் b - ஆல் பெருக்கினால் , a x b = b x b .
இதை, ab = b 2
இருபுறத்திலும் a 2 - ஐ கழித்தால், ab - a2 = b2 - a2
இதை அல்ஜீப்ரா விதிகள்படி மாற்றி எழுதினால், a ( b -- a ) = ( b + a ) ( b -- a )
இரு புறத்திலும் பொதுவாக உள்ள ( b -- a ) - ஐ நீக்கினால், a = ( b + a )
இனி a - க்கு 1 என்று எண் கொடுப்போம் .
என்பதால் , b - ன் மதிப்பு 1 தான் .
இனி a = ( b + a ) என்ற சமன்பாட்டில் a மற்றும் b மதிப்பை இணைத்தால் , 1 = ( 1 + 1 ) ; அதாவது, 1 = 2 .
--- தினமலர் டிசம்பர் 31 , 2010 .

Tuesday, October 11, 2011

டிப்ஸ்...

* குழந்தைகளுக்கு, தங்கத்திலான தோடுகளை அணிவிக்கும்போது திருகாணியில், நகப்பூச்சு தடவி மாட்டினால் தோடு இருக்கமாக இருப்பதோடு, தொலைந்துவிடுமோ என்கிற டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் .
* விக்கலை நிறுத்த முடியவில்லையா ? ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு அது கரையும் முன்பே விழுங்கவும் . மணலாகத் தொண்டைக்குள் இறங்கும் சர்க்கரை , அங்குள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, விக்கலுக்குக் காரணமான ஃப்ரீனிக் என்னும் நரம்பை அமைதிப் படுத்துவதால் விக்கல் விரைவில் நின்றுவிடும் .
* ஸ்கெட்ச் பேனா கறையைப் போக்குவதற்கு அசிடோன் ( நகப்பூச்சு அழிக்கும் திரவம் ) தடவினால் போதும் . கறை போய்விடும் .
* மழைக்காலத்தில், பீரோவுக்குள் இருக்கும் துணிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் . இதைத் தவிர்க்க, பத்து சாக்பீஸ்களை நூலில் கட்டி உள்பகுதியில் தொங்க் விடுங்கள் . இது பீரோவின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி துணிகளைக் காக்கும் .
* அதிக நேரம் உட்கார்ந்தால் கால் மரத்துப் போகிறதா ? கால் கட்டை விரலில் நான்கைந்து முறை விரல்களால் சுண்டி விடுங்கள் . சட்டென்று விறுவிறுப்புக் குறைந்து விடும் .
* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிட்டிகை உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது .
* அரிசிமாவு, ரவை, மைதா 3 : 1 : 1/2 என்ற விகிதத்தில் இவற்றைக் கலந்து வார்த்தால் ரவா தோசை மொறுமொறுப்பாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Monday, October 10, 2011

அதிசய எண் !

142857 x 1 = 142857
142857 x 2 = 285714
142857 x 3 = 428571
142857 x 4 = 571428
142857 x 5 = 714285
142857 x 6 = 857142
அருகே உள்ள சமன்பாடுகளைக் கவனமாகப் பாருங்க... இதில் ஒரு அதிசயம் இருக்கிறது ...கண்டுபிடிங்க !
எல்லா பெருக்கலின் விடைகளிலும் 1 , 4 , 2 , 8 , 5 , 7 ஆகிய எண்களே இடம் மாறி வருகின்றன .
--- தினமலர் டிசம்பர் 31 , 2010 .

Sunday, October 9, 2011

உங்களுக்குத் தெரியுமா ?

நெட்டில் சுட்டது !
* அட்லாண்டிக் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறைதான் சூரியன் உதயமாகிறது .
* மழைத்துளியைக் கூட பார்த்திராத இடம் உலகில் உண்டு . சிலி நாட்டின் அடாகாமா பாலைவனத்தில் உள்ள காலாமா என்னும் இடம்தான் அது .
* முதன்முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தீன் மொழிதான் .
* உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூஸிலாந்து .
* உலகிலேயே மிகப் பெரிய மசூதி உள்ள இடம் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் .
* உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ .
* விமானத்தில் செல்லும்போது வானவில் தோன்றினால் அதன் முழு வட்டத்தையும் ரசிக்கலாம் .
* ஆற்று நீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கடலில் நீந்துவது சுலபமாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Saturday, October 8, 2011

தகவல் களஞ்சியம் .

* சகாரா பாலைவனம், சுமார் 36 லட்சம் சதுரமைல் பரப்பளவு கொண்டது .
* மிக மதிப்பு வாய்ந்த உலோகம், புளூட்டோனியம் .
* 13 நாடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா .
* பாலில் இரும்புச்சத்து கிடையாது .
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்தவகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது .
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது .
* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும் .
* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது .
--- தினத்தந்தி 31 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

Friday, October 7, 2011

நவவித பக்தி .

பக்தியில் 9 வகைகள் உண்டு ...
இறைவனுடைய பெருமைகளையும், குணங்களையும் கேட்டல் : சிரவணம் .
இறைவனின் குணங்களையும், நாமங்களையும் பாடுதல் : கீர்த்தனம் .
இறைவனுடைய குணங்களையும், பெருமைகளையும் மனதால் நினைத்தல் : ஸ்மரணம் .
இறைவனின் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல் : பாதஸேவனம் .
இறைவனை நீர், மலரால் வழிபடுதல் : அர்ச்சனம் .
வழிபாடு முடிந்ததும் வீழ்ந்து பணிதல் : வந்தனம் .
இறைவனை ஆண்டானாகவும், நம்மை அடிமையாகவும் எண்ணித் தொண்டு செய்தல் : தாஸ்யம் .
இறைவனை நமது தோழனாக எண்ணுதல் : ஸ்காயம் .
நமது செயல்கள் யாவையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் : ஆத்ம நிவேதனம் .
--- தினமலர் , இணைப்பு . டிசம்பர் 30 , 2010 .

Thursday, October 6, 2011

பயணம் செய்ய ஏற்ற நாள் .

பொதுவாக கிராமங்களில் உள்ளவர்கள் வெளியூருக்குச் செல்ல வேண்டுமென்றால், அன்றைய தினம் பயணம் செய்ய உகந்த நாளா ? என்று காலண்டரைப் பார்த்து, பிறகு முடிவு செய்வார்கள் . எந்த நாளில் பயணத்தை மேற்கொண்டால் அந்தப் பயணம் இனிமையாக அமையும் என்று பார்ப்போமா ...?
* அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் வரும் நாட்கள் பயணம் செய்ய ஏற்றவை .
* துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, ஆகிய திதிகள் உள்ள நாட்கள் சிறந்தவை .
* மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்ன காலங்கள் உத்தமம் .
* புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பயணம் செய்வது நல்லது .
--- தினத்தந்தி 31 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

Wednesday, October 5, 2011

பஞ்சமுக தரிசன பலன் !

கிழக்கு முகம் : ஹனுமான் . இவரது தரிசனம் நல்ல புத்தி, வெற்றியை அருளும் !
தெற்கு முகம் : நரசிம்மர் .. இவரது தரிசனம் துணிவையும் வெற்றியையும் அருளும் !
மேற்கு முகம் : கருடர் . இவரது தரிசனத்தால் விஷ பாதிப்புகள், நோய் நொடிகள், பில்லி சூனியத் தொல்லைகள் அகலும் !
வடக்கு முகம் : வராஹர் . இவரது தரிசனம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் !
ஆகாயம் பார்த்திருக்கும் முகம் : ஹயக்ரீவர் . இவரது தரிசனம் ஞானத்தையும் நல்ல வாரிசுகளையும் அருளும் !
--- தினமலர் , இணைப்பு . டிசம்பர் 30 , 2010 .

Tuesday, October 4, 2011

உயிரினங்களின் வகைகள் .

பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் உள்ளன . இவற்றை வகைப்படுத்துவது கடினம் . ஆனாலும், முன்னோர்கள் உயிரினங்களை ஆதிகாலம் முதலே பகுத்துப் பார்க்க தொடங்கினர் . நமது முன்னோர்கள் செடி, கொடிகளை 4 பிரிவாகவும், பிராணிகளை 3 பிரிவாகவும் பிரித்தனர் . இதன்படி மனிதனும், பாலூட்டிகளும் ஒரு வகுப்பு . மீன், பறவை, பாம்பு ஆகிய முட்டையிடும் பிராணிகள் 2 -வது பிரிவு . 3 -வது பிரிவு தனி ரகம் என்று பிரித்தனர் .
செடிகளில் பூ உள்ளவை ஒரு பிரிவு . பூ இல்லாதவை ஒரு பிரிவு . காய்ந்தபின் வாடி அழிந்துபோகும் செடிகள் ஒரு வகை . படரும் தண்டுகளை உடையவை 4 -வது பிரிவு என்று பகுத்தனர் . புல், பூண்டு தாவரங்களை உற்றறியும் ஓரறிவு உயிரினங்களாகவும், சிப்பி, நத்தை போன்றவை இரண்டறிவு உள்ளவையாகவும், எறும்புகள், ஈசல் போன்றவை மூன்றறிவு உள்ளவை என்றும், தும்பி, வண்டு போன்றவை நான்கறிவுள்ளவை என்றும், பறவைகள், விலங்குகள் ஐந்தறிவு உள்ளவை என்றும், மனிதன் ஆறறிவு உள்ளவன் என்றும் தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது .
ஆனால் இந்த வகைப்படுத்துதலை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை . இவை செயர்கையானவை என்று கூறிவிட்டனர் . 1707 -ம் ஆண்டில் லின்னேயஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி இயற்கையான வகைப்படுத்தும் திட்டத்தை வெளியிட்டார் . அவர் உயிகளின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார் . உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று இரு மாபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளன .
இவை இரண்டிலும் பல உட்பிரிவுகள் உள்ளன . பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன . முதல் பிரிவில் மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன . அமீபா, கடற்பஞ்சி, பவளம், மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியவை முதுகெலும்பு இல்லாத பிராணிகளின் பிரிவுகல் ஆகும் . இவற்றுக்குள் பல உப பிரிவுகள், குடும்பங்கள், உப குடும்பங்கள், வகுப்புகள், இனங்கள் அடங்கி உள்ளன . இவற்ரின் மிகச்சிறிய தொகுதியே இனமாகும் .
தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு . பூ உள்ளவை, பூ இல்லாதவை . பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என உப பிரிவு உண்டு . ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூவாத தாவர பிரிவுகள் ஆகும் .
பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை . ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை . நுரையீரல்களால் சுவாசிப்பவை . பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன . ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை . ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு லட்சணங்களும், பாகுபாடுகலும் உண்டு . ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம் . இவை பாலூட்டிகள் . இவற்றில் சைவம், அசைவம் உண்டு . என்வே நாய், பூனை, புலி இவை உறவுள்ள இனங்கள் . கழுதையும், குதிரையும் இவற்றின் தாயாதிகள் . ஆடும், மாடும் இவற்றின் உறவினர்களாகும் .
--- தினம் ஒரு தகவல் . தினத்தந்தி 30 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

மூளை வளர்கிறது !

திட்டமிடல், முடிவு எடுத்தல் என 40 வயது வரை மூளை வளர்கிறது .
மனித மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்துடன் முடிவடைவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்ப்ட்டது . ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் அந்த நம்பிக்கையில் உண்மையில்லை எனத் தெரிந்தது . மனித மூளையின் பல பகுதிகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் 30 முதல் 40 வயது வரை நீடிக்கிறது எனத் தெரிகிறது .
முடிவு எடுத்தல், திட்டமிடுதல், புரிந்து கொள்ளுதல், முறையற்ற சமூக நடத்தைக்கான எண்ணம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் ஈடுபடும் மூளையின் முன்பகுதியில் வளர்ச்சி ஏற்படுகிறது . கருவில் இருக்கும்போதே வளரத் தொடங்கும் இந்தப் பகுதி, குழந்தைப் பருவத்திலும் வளர்கிறது . வாலிப வயதில் மறுசீரமைப்பு செய்து கொள்கிறது . பிறகு, மீண்டும் வளர்ச்சியை தொடரும் அது 40 வயது வரை கூட நீடிக்கும் என்றும், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாரா ஜெய்னே பிளக்மோர் தெரிவித்தார் .
--- தினகரன் , 20 டிசம்பர் 2010 .

Monday, October 3, 2011

கொலைகாரன் சவப்பெட்டி !

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியை கொலை செய்தவனின் சவப்பெட்டி ரூ . 39 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது .
லீ ஹார்வே ஆஸ்வல்டு என்பவனால் ஜான் எப். கென்னடி கடந்த 1963 ம் ஆண்டு, நவம்பர் 22 -ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் . பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்ட லீ, 2 நாட்கள் கழித்து ஜாக் ரபி என்பவரால் கொலை செய்யப்பட்டான் . லீ இறந்த பின் அவனது உடல் டெக்சாஸ் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் லீ -ஐ அடக்கம் செய்ய பயன்படுத்திய மரத்திலான எளிய சவப்பெட்டி ஏலம் விடப்பட்டது . ஏலத்தின் போது 2 நபர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது . இறுதியில் அந்த சவப்பெட்டி ரூ. 39 லட்சத்துக்கு ஏலம் போனது .
--- தினகரன் , 20 டிசம்பர் 2010 .

Sunday, October 2, 2011

இதிஹாசம் !?

இதிஹாசம் என்றால் என்ன ?
இதிஹாசம் = இதி + ஹ + ஆஸம் .
' இதி ஆஸம் ' என்றால், ' இப்படி நடந்தது ' என்று அர்த்தம் .
' ஹா ' என்றால், ' ஸத்தியமாக ', ' நிச்சயமாக ', ' வாஸ்தவமாக ' என்று அர்த்தம் . எனவே, இதிஹாசம் என்றால் ' ஸத்தியமாக இப்படி நடந்தது ' என்று பொருள் . ராமாயணமும் மகாபரதமும் நமது இதிஹாசங்கள் .
ஸ்ரீராமர் இருந்தபோதே, ராமாயணத்தை வால்மீகி எழுதினார் . பாண்டவர்கள் இருந்தபோதே, மகாபாரதத்தை வியாசர் எழுதினார் .இந்த இரண்டிலும் உள்ள நிகழ்வுகள் நிஜம்தானா என்று சந்தேகப்படுவதற்கு இடமே இல்லை !
--- தினமலர் இணைப்பு . டிசம்பர் 16 . 2010 .

Friday, September 30, 2011

மாரடைப்பு வருமா ?

மாரடைப்பு வருமா ? ரத்தம் சொல்லிவிடும் .
எந்த நேரத்திலும் வந்து தாக்குதல் நடத்தி 5 நிமிடத்தில் ஆளை காலி செய்யும் நோய் எது என்று கேட்டால், அது மாரடைப்புத்தான் . அந்த நோய் வந்திருக்கிறதா என்பதை முங்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியாது . இப்போது, அதற்கும் வழி ஏற்பட்டுவிட்டது . ரத்த பரிசொதனைவாயிலாக, ஒருவருக்கு மாரடைப்பு வருமா ? என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கூறுகிறார்கள் .
இதயத்தில் ஒருவகை புரோட்டின் உண்டு . அந்த புரோட்டினுக்கு " டிராப்போனின் டி " என்று பெயர் . இந்த டிரோப்போனின் இதயத்தின் தசைகளிலும், இதய ரத்தக்குழாய்களிலும் இருக்குமாம் . இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும் போது, இந்த டிராப்போனின் சிதைந்து ரத்தத்தில் கலக்குமாம் . அப்படி கலந்து வரும்போது, அதை ரத்தபரிசோதனையில் அறிந்துகொள்ளலாம் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரத்தத்தில் டிராப்போனின் இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்று நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஆய்வுதகவல் தெரிவிக்கிறது .
இதுவரை 3 ஆயிரத்து 500 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்து பார்த்ததில் இந்த டிராப்போனின் சிதைவுகள் இருப்பது கண்டறியப்பட்டது .
---- தினமலர் , 14 . 12 . 2010 .

Thursday, September 29, 2011

தன்னை அறிதல் .

வேதங்கள் ' அஹம் பிரம்மாஸ்மி ' என்று சொல்கிறது . நானே பிரம்மம் . நானே இறைவன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் . தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் என்கிறார்கள் . இதுதான் உண்மையான நிலையை அறியும் முறை என்று வேத ஆகமங்கள் கூறுகின்றன .
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாடு தத்துவ ஞானத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி இருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன . அந்நாட்டில் அத்தீனியன் கோயில் வாசலில் " GNOTHE SEAVTON " அதாவது " KNOW THYSELF " -- " தன்னை அறி " என்று பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் .
சாதாரண சராசரி மனிதர்கள் ஐந்து சதவிகிதம்தான் தங்கள் மூளையின் சக்தியைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ?
உலகில் மாபெரும் அறிவாளிகள் தங்கள் மூளையின் ஆற்றலில் பதினைந்து சதவிகிதம்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா ? நாம் மனிதப் பிறவி எடுத்துவிட்டோம . ஆகவே, நமது முன்னேற்றத்துக்காக நாம் நமது மனோ சக்திகளை ஐம்பது சதவிகிதமாவது பயன்படுத்திப் பலன் அடைய வேண்டாமா ? யோசியுங்கள் .
நீங்கள் உங்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்துகொண்டு செயல்பட்டால் இப்போது கிடைப்பதைவிட 25 மடங்கு 50 மடங்கு வசதிகளை நீங்கள் பெறலாம் . ஆகவே, உங்களை உணர்ந்து செயல்பட ஆரம்பியுங்கள் .
--- என்.தம்மண்ண செட்டியார் , ' உன் உள்ளே இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் ' நூலில் .
--- நூல் உதவி : செல்லூர் கண்ணன் , செல்லூர் .