Tuesday, December 21, 2010

சூப்பர் டிப்ஸ் .

* இட்லி மாவு புளித்து , புளிப்பு வாசனை முகத்தைச் சுளிக்க வைக்கிறதா ? அதைப் போக்க ஒரு சுலபமான வழி , மாவில் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கலக்கி வைத்தால் , சிறிது நேரத்தில் நீர் மேலே தேங்கி நிற்கும் . அதை வடித்துவிட்டு இட்லி வார்த்துப் பாருங்கள் . இட்லி புளிப்பில்லாமல் இருக்கும் .
* உங்கள் வீட்டு வாண்டு சூயிங்கம் மென்று விட்டு , அது தெரியாமல் தலைமுடியில் ஒட்டிக் கொண்டு விட்டதா ? கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்து , சூயிங்கம் பட்ட இடத்தில் நன்றாகத் தேய்த்து விட்டால் , சூயிங்கம் உருண்டு வந்துவிடும் .
* பழைய லெதர் பேக் என்றாலும் கூட , கிழியவில்லை எனில் , தூக்கிப் போட யாருக்கும் மனசே வராது . கவலையை விடுங்கள் . கொஞ்சம் தேன் மெழுகை பெகின் மீது நன்றாகத் தடவி , பின் துடையுங்கள் . பழைய பேக் புதுசு போல் பளிச்சிடும் .
* சுலபமாக திறந்து மூட முடியாமல் உங்கள் ஹேண்ட்பேகின் ' ஜிப்' புகள் சண்டித்தனம் செய்கிறதா ? சிறிதளவு வாசலின் அல்லது தலைவலி தைலத்தை ஜிப்பின் மேல் தடவிப் பாருங்கள் . ஜிப் சொன்னப் பேச்சைக் கேட்கும் .
* சுலபமாகத் துடைக்க முடியாத ஜன்னல் இடுக்குகளில் நிரம்பியிருக்கும் தூசுகளைத் துடைக்க , இதோ ஒரு சுலப டிப்ஸ்... வீட்டிலுள்ள பழைய காலுறையை உங்கள் கைகளில் மாட்டிக் கொண்டு , விரல்களால் துடைத்தால் , இடுக்குகளிலுள்ள அழுக்குகள் போயே போச் ! இதனால் மர வேலைப்பாடுகளில் உள்ள சிலாம்புகள் கையில் குத்தாமலும் இருக்கும் குடையின் சிறிய ஓட்டையில் மழை கசிந்து உங்கள் மேல் ஊற்றுகிறதா ? வீட்டைவிட்டுக் கிளம்பும் முன் அந்த இடத்தில் நிறமற்ற நெயில் பாலீஷைத் தடவினால் , அவசரத்துக்கு ஓட்டை அடைந்து விடும் . மறு ஏற்பாடு செய்யும்வரை இது உதவும் !
--- குமுதம் சினேகிதி . டிசம்பர் 1 . 2006

No comments: