Sunday, December 19, 2010

டிப்ஸ் ...

* பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
* வாழைக்காய் தோல் சீவும்போதோ , அரியும்போதோ கைகள் கறுப்பாக ஆகிவிடும் . ஒரு ஸ்பூன் பொடி உப்பைக் கைகளில் நன்றாகத் தேய்த்துக் கொண்டு , தோல் சீவினாலோ ,அரிந்தாலோ கறுக்காது .
* ஹோட்டல்களில் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்பதற்காக சுண்ணாம்பு நீரைக் கலந்து விடுகின்றனர் . அது வயிற்றைப் புண் ஆக்கிவிடும் . ஹோட்டலுக்குச் செல்லும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை , பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள் . சாதத்தைப் பரிமாறியவுடன் , சிறிதளவு சாதத்தை இலையின் ஓரத்தில் வைத்து அதனுடன் மஞ்சள் தூளைக் கலந்து பிசையுங்கள் . சாதத்தில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் சாதம் உடனடியாக சிவப்பு நிறமாக மாறிவிடும் . அதன் பிறகாவது அத்தகைய ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாமே !
* முடி அதிகமாக உதிர்ந்தால் பூண்டை இடித்து மண்டை ஓட்டில் தேயுங்கள் . அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வது குறையும் .
* சிலருக்கு மாதவிலக்கின் போது வயிற்றுவலி அதிகம் இருக்கும் . அப்போது முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு உப்புப் போட்டு வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இருக்க , குப்பைமேனி , வேப்பிலை , மஞ்சள் மூன்றையும் நைசாக அரைத்து , கை கால்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் குளித்தால் முடிகள் உதிர்ந்து விடும் . உடல் வழு வழுப்பாக மாறும் . மேனி பளபளப்புக்கு குப்பைமேனி சிறந்த மூலிகை .
* உணவு வகையைப் பார்சல் கட்டும்போது பச்சை வாழை இலையில் கட்டினால் இலை கிழிந்து விடும் . இலையை வெந்நீரில் நனைத்து எடுத்துக் கட்டினால் இலை கிழியாது .
* சமையல் வேலையெல்லாம் முடிந்து விட்டது . கேஸ் அடுப்பின் பிசுக்கையெல்லாம் எப்படி நீக்குவது என்று மலைப்பாக உள்ளதா ? ஒரு ஸ்பாஞ்சில் வினிக்கரைத் தோய்த்து ,அடுப்பைத் துடைத்தால் , எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் நீங்கி , புதிய அடுப்பு போல் பளபளக்கும் .
* தாய்ப்பால் கொடுக்கும் முன் சிறிதளவு வெந்நீர் அல்லது மிதமான சூட்டில் பால் குடித்து விட்டால் பால் அதிகமாகச் சுரக்கும் .
* கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படும் கறுப்பு மறைய , 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசவும் . முப்பது நிமிடம் கழித்து கழுவவும் . இதுபோல் தொடர்ந்து செய்து வர கருமை மறையும் .
* வெந்நீரில் குளிப்பதாக இருந்தால் காலிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் ஊற்றி பிறகு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும் . குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலைக்கு ஊற்றிய பின் பிறகு உடம்புப் பகுதிக்கு நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் . இதனால் , மூளை களைப்படையாது . சுறுசுறுப்பாக இயங்கும் .
--- மங்கையர் மலர் . மார்ச் 2007 .

No comments: