Monday, December 13, 2010

' ப்யூல் சேவர் '

பெட்ரோலை சேமிக்க ' ப்யூல் சேவர் ' கருவி . விவசாயி கண்டுபிடிப்பு .
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு. விவசாயி. காரில் பெட்ரோலை மிச்சப்படுத்தும், ' ப்யூல் சேவர் ' என்ற மின்னணு கருவியை கண்டுபிடித்துள்ளார். கருவி காரில் பொருத்தப்பட்டால் மைலேஜில் 6 கி. மீ. அதிகம் கிடைக்கிறது.
நேரு கூறியதாவது : ' ப்யூல் சேவர் ' என்ற கருவி, பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் எளிய முறையில் பொருத்திக்கொள்ள ஏதுவாக ' எம்பெடட் டெக்னாலஜி சிஸ்டம் ' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட கார்களில் இக்கருவி பொருத்தப்பட்டு பரிசோதனை செய்ததில், உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு 15 % மேலாக பெட்ரோல் செலவு மீதமாவதாகவும், 20% மேலாக அதிக மைலேஜ் தருவதாகவும் சோதனை முடிவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர். புனேவில் செயல்பட்டுவரும் ஆட்டோமொட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா ( ஏஆர்ஏஐ ) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டு அதன் மூலம் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மூலம் இதை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இக்கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
--- தினகரன் , 5 ஜூலை . 2010.

No comments: