Sunday, December 12, 2010

' சுகர் பிரீ ' மாம்பழம் .

வந்து விட்டது ' சுகர் பிரீ ' மாம்பழங்கள் !
உத்தரபிரதேச மாநிலம் மலிகாபாத்தில் உள்ள அந்த மாநில தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வண்ணம் புதிய மா வகையை கண்டறிந்துள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சத்து மிக்க அதே சமயம் குறைந்த சர்க்கரை கொண்ட மாம்பழ வகையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சாதாரண மாம்பழங்களில் உள்ள சர்க்கரையளவில் 25 % மட்டுமே இதில் கலந்துள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி இதனை உட்கொள்ள முடியும். சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டும் இந்த மாம்பழங்களில் குறைவாக உள்ளது. மாறாக மாம்பழத்தில் உள்ள மினரல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
--- தினமலர், 04. 07. 2010.

No comments: