Wednesday, December 8, 2010

அழகா... அலகா ?

காலங்காலமாக பெண்கள் காதில், மூக்கில், துளையிட்டு அணிகலன் அணிந்து வருகின்றனர். இது மரபு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்ததாகவே இன்றும் உள்ளது. இந்தப் பழக்கம் ஃபேஷன் என்ற போர்வையில் தொப்புள், புருவம் போன்ற இடங்களில் அணியும்விதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.ஆண்களும் காது குத்திக் கடுக்கன் போடுகிறார்கள். புருவத்தில் சின்னஞ் சிறு ஆணி போன்ற அணிகலன் அணிகிறார்கள். இப்படி உறுப்புகளில் அணிகலன் அணிவதற்கு Body piercing என்று பெயர்.பழங்காலத்தில் உலோகம், எலும்புத் துண்டு, சோழி, தந்தம், கண்ணாடி போன்றவற்றால் ஆன நகைகளை அணிந்தார்கள். முன்பு எகிப்திய மன்னர்கள் Symbol of Royality என்பதன் அடையாளமாகத் தொப்புளில் வளையம் அணிந்தனர். ரோம் நகர் ஆண்களிடம் மார்பக நுனியில் வளையம் அணியும் பழக்கம் இருந்தது. மாயன்ஸ் என்கிற இனத்தினரிடம் நாக்கில் துவாரம் இட்டு அதில் நகை அணியும் வழக்கம் இருந்தது. அப்படி அணிந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.விக்டோரியா மாகாராணி காலத்தில் இங்கிலாந்தில் வளையம் அணிந்த ஆணுடன் உறவு கொண்டால் பெண்ணுக்கு நிறைய இன்பம் கிடைக்கும் என்று நம்பிக்கை. எகிப்தில் பெண்கள் தங்கள் பிறப்பு உறுப்பில் வளையம் அணிந்தார்கள். நம் நாட்டில் உறுப்புகளில் அணிகலன் அணிவது பற்றி வாத்சாயனரும் குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியம், பிரார்த்தனை போன்ற அடிப்படையில்தான் இவை அணியப்பட்டன.தேவையற்ற இடங்களில் அணிகலன் அணிவதால் செக்ஸ் செயல்பாடோ, சுகமோ ஒரு டீஸ்பூன் அளவுகூட அதிகரிக்காது என்பதே நிஜம். அவஸ்தைதான் மிஞ்சும். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இதுபோன்று அணிவது எல்லோரையும் வசீகரிக்காது என்பதை மனதில்வையுங்கள்.--- டாக்டர் டி. நாராயண ரெட்டி. ஆனந்தவிகடன், 30. 06. 2010.

No comments: