Sunday, December 5, 2010

எரிபொருள் ஏற்று !

ஒவ்வொரு நாளுக்கும் எரிபொருள் ஏற்றுங்கள் !
1969 - ல் முதன்முதலில் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ விண்கல வீரர்கள் அதன் பிறகான சில மாதங்களுக்குக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ' நிலவிலேயே கால் பதித்துவிட்டோம். இனி, பூமியில் சாதிக்க என்ன இருக்கிறது ! ' என்ற எண்ணம் அவர்களை எந்தச் செயலிலும் கவனம் செலுத்தவிடாமல் மனச் சிதைவுக்கு ஆளாக்கி இருக்கிறது. எதை இலக்காக நிர்ணயித்துக் கொள்வது என்பதில் ஏற்பட்ட குழப்பமே அது. தங்களது முந்தைய சாதனைப் பெருமிதத்தை மனதில் இருந்து நீக்கிக்கொள்ளாமல், அதிலேயே திளைத்துக் கிடப்பதன் விளைவு என்றும் சொல்லலாம். ' நீங்களும் சராசரியானவர்தான். பல நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் இல்லாவிட்டால் உங்களால் நிலவில் கால்வைத்திருக்க முடியாது. பல்லாண்டு கால இடைவிடாத முயற்சிகளை உங்கள் மூலமாக உலகம் தெரிந்துகொள்ள முடிந்தது ! ' என்றெல்லாம் அவர்களுக்குப் பலவிதமாக கவுன்சிலிங் கொடுத்து இயல்பு நிலைக்குத் திருப்பினார்கள்.
--- கி.கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 30. 06. 2010.

No comments: