Saturday, December 4, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

* ' மழையில் நடந்து செல்வதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் என் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது.' என்பார் சார்லி சாப்ளின். புன்னகையின் மூலம் வலிகள் கடந்து செல்வதுதான் அவரது மாயவித்தை. துன்பங்களை கணக்கில் வைக்காமல் சிரிப்பைக் கண்களில் வைத்தவர் சாப்ளின். அதுதான் சாப்ளீனின் வெற்றி ரகசியம்.
* மூளை இல்லாமல் இருப்பதுகூடப் பிரச்னை இல்லை. இதயமே இல்லாமல் இருப்பது பெரும் குற்றம்.
* ' வாழும் இந்த நொடியில் முழு உயிர்ப்புடன் வாழ். நமது கடமை நல்லதை மட்டுமே செய்வதுதான் ' என்றார் புத்தர்.. சலனமற்று வாழத் தெரிந்தால், சோதனைகள் சீண்டாது.
* சமீபத்தில் ஒரு சலூனில் ரசித்த பொன்மொழி : -- இன்றைய ( அ ) லட்சியம் , நாளைய ( ஏ ) மாற்றம் !
* ' சொந்தப் பணத்தைச் செலவு செய்யும்போது சிக்கனமாக இரு. பொது பணத்தை செலவு செய்யும்போது கஞ்சனாக இரு ' என்பது பொது வாழ்க்கையின் இலக்கணங்களில் ஒன்று.
* ' எதிரியை மன்னித்துவிடு, ஆனால், அவர் பெயரை மறக்காதே ! ' என்று ஓர் அரேபிய பழமொழி உண்டு .
* மற்றவர்களிடம் கலகல்வெனெச் சிரித்துப் பேசும் குணம் கொண்டவர்களை ' எக்ஸ்ட்ரோவர்ட்ஸ் ' ( extroverts ) என்பார்கள். அவர்கள் ஆண், பெண், அறிந்தவர், தெரிந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார்கள். இதற்கு நேர்மறையாக, கூச்சசுபாவம் நிரம்பியவர்களை நாம் ' இன்ட்ரோவர்ட்ஸ் ' ( introverts )
என்போம் .
* பொதுவாக, மனிதர்களை ஸ்கில்டு ( skilled ) , செமி - ஸ்கில்டு ( semi - skilled ) , அன் - ஸ்கில்டு ( un - skilled ) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் .
* வாழையையும் மூங்கிலையும் மரம்னு சொன்னாலும் அவை மரங்கள் இல்லை . வாழை , ஒரு பெரிய செடி ! மூங்கில் , ஒரு பெரிய புல் ! .
* விதவிதமான உணவுகள் கிடைத்தாலும் , விண்வெளி வீரர்கள் பாவம்தான் ... விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால் , அவர்களால் உணவின் வாசத்தை நுகரமுடியாது ; ருசியையும் முழு அளவில் உணரமுடியாது . பசியைத் தீர்க்க ஏதாவது விழுங்கியாக வேண்டுமே என்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும் !
* பாலின் நிறம் வெண்மையாக இருப்பதர்கு 3 காரணங்கள் உள்ளன . பாலில் உள்ள ' கேஸின் ' என்ற புரதமும் , பால் நுரையின் தன்மையும்தான் அதற்கு வெண்மை நிறத்தை அளிக்கிறது . மூன்றாவது காரணம் , கேஸின் மற்றும் பால் நுரையை உருவாக்கும் பொருட்கள் , வெண்மை நிறத்தை அதிகமாகப் பிரதிபலிப்பது .
* கேஸின் , கொழுப்புச்சத்து , நுரை அதிகமாகக் கொண்ட பால் ' பளிச் ' வெண்ணிறத்தில் இருக்கும் . இவை குறைவாகக் கொண்ட பால் , வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
* ஒரு கட்டிடம் அது அமைந்திருக்கும் இடத்துக்குள்ளேயே இடிந்து விழுமாறு செய்வது ' இம்ப்ளோசன் ' எனப்படுகிறது . இதற்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

No comments: