Friday, November 26, 2010

தொலைத்தது போதும் !

மானிடனே !
உன்னுடைய
கணக்குப் போடும் திறமையை
கால்குலேட்டரிடம் தொலைத்தாய்...
நினைவாற்றலை
கம்யூட்டரிடம் தொலைத்தாய்...
உழைப்பாற்றலை
எந்திரங்களீடம் தொலைத்தாய்...
வெப்பம் தாங்கும் சக்தியை
குளிர்சாதனக் கருவியிடம் தொலைத்தாய்...
உன் ஆரோக்கியத்தை
ரசாயன உணவுகளிடம் அடகு வைத்தாய்...
எல்லா சக்திகளையும்
இயந்திரங்களிடம் இழந்துவிட்டு
சக்கையாய் நிற்கிறாய்...
இழந்ததெல்லாம் போதாதென்று
மணல்திருடி, காடுகளை அழித்து
நீராதாரங்களை ஆக்ரமித்து
விளைநிலங்களை
' விலை ' நிலங்களாக்கி
பூமியையும் பொசுக்குகிறாய்...
உன் உயிரயும் தொலைக்க
உனக்கென்ன அவ்வளவு ஆசை ?
-- வேலூர் காந்திமதி கிருஷ்ணன், தினமலர் . ஏப்ரல் . 3 2010.

No comments: