Saturday, November 13, 2010

தற்கொலை !

உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள பல செய்திகள் கவனத்துக்குரியவை , மனிதனுக்கு வாழ்வதற்கான ஆசை இருப்பதைப் போலவே சாவதற்கான ஆசையும் உள்ளேயே இருக்கிறதாம் . ' வாழ்நாளில் தற்கொலை செய்துகொண்டு விடுவோமே என்ற நினைப்பு வராதவர்களே உலகில் இல்லை ' என்கிறார்கள். ஒரு வட்டம் என்பது வரையப்படும்போது எங்கே தொடங்கியதோ அங்கே வந்து முடிவடைவதைப்போல, வாழும் ஆசையில் தொடங்கி அது நின்றதும் சாகும் விருப்பம் உருவாகி வாழ்க்கை வட்டம் நிறைவு செய்யப்படுகிறது என்கிறார்கள்.
ஒரு பள்ளியில், ஒரு குழுவில், ஒரு கூட்டத்தில், ஒருவரைப் பிடித்து ஆட்டுகிற தற்கொலை உணர்வு அந்தப் பள்ளி, குழு, கூட்டம், குடும்பம் முழுவதையும் பேயாக ஆட்டுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். சுருங்கச் சொன்னால் மனதிலிருந்து மனதுக்குப் பாயும் தொற்று நோய் இந்தத் தற்கொலை உணர்வு. இந்த நோய்க்கான எதிர்ப்புசக்தி, வாழும் ஆசை, வாழ்தலின் மீது மரியாதை உணர்வு, தன் மீது தானே வைத்திருக்கும் மதிப்பு, இது வளர வேண்டும் .
--- சுகி. சிவம், தினகரன் . 12. 06. 2010.

No comments: