Tuesday, November 9, 2010

விவேகானந்தர் .

* விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத்தான்
அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார் . அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது , கேத்திரி மன்னர் தான் ' விவேகானந்தர் ' என்ற பெயரைச் சூட்டினார் !
*தாஜ்மாஹால் அவரது மனம் கவர்ந்த இடம் . அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார் .
*'' எழுமின்... விழுமின்...குறிக்கோளை அடையக் குன்றாமல் உழைமின் ' என்ற வார்த்தையை முதன் முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம் .
* ' பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும் ' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான் !
* விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு . ' சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும் !
--- ப. திருமாவேலன் , ஆ. விகடன் . 31. 03. 2010.

No comments: