Thursday, September 30, 2010

சோதனைகள் ?

மூன்று வாசல் சோதனைகள் ?
புத்த பிட்சுக்கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள் . அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் . ' அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா ?' என்பது முதல் வாசல் கேள்வி . இந்தக் கேள்விக்குப் பதில் ' ஆம் ' என்றால்தான் , அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும் . இரண்டாவது வாசலில் , ' இந்த வார்த்தைகள் அவசியம் தானா ? ' என்பது கேள்வி . அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு ' அந்த வார்த்தைகள் கனிவானவையா ? ' என்பது மூன்றாவது வாசல் கேள்வி . இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள் . நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும் , கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல்கள் வழி அனுப்பலாமே !
---- கி. கார்த்திகேயன். ஆ. விகடன் , 14. 04. 2010..

No comments: