Monday, September 20, 2010

அண்ணா .

* தலை சீவ மாட்டார் . கண்ணாடி பார்க்க மாட்டார் . மோதிரம் அணிந்ததில்லை . கைக்கடிகாரம் அணிய மாட்டார் . " என்னை காலண்டர் பார்க்கவைத்து, சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி " என்று சொல்லிக்கொண்டார் !
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் . மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தது .
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு . ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார் . " காலமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்களுக்கோ நித்திரை ... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை " என்பதே அந்தப் பேச்சு !
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது . சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது . தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியது ... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள் !
* ' எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ', ' கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ', ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ', ' கடமை -- கண்ணியம் -- கட்டுப்பாடு ', ' எங்கிருந்தாலும் வாழ்க ', ' மறப்போம் மன்னிப்போம் ', ' வாழ்க வசவாளர்கள் ', ' மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ', ' சட்டம் ஒரு இருட்டறை ', ' மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை !
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம் . 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன் , 1907 எகிப்து குடியரசுத் தலவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ் !
--- ஆனந்தவிகடன் , 17. 03. 2010 .

No comments: