Thursday, September 16, 2010

பிரதோஷ நேரம் ?

இரவும் பகலும் சங்திக்கின்ற நேரத்திற்கு ' உஷத்காலம் ' என்பது பெயர் . உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர் . இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவளாவாள் . அவள் பெயராலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது .
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத்காலம் எனப்படும் . சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின் அவள் பெயரால் இது " பிரத்யஷத் காலம் " என்று அழைக்கப்பட்டு இப்போது பேச்சுவழக்கில் " பிரதோஷகாலம் " என அழைக்கப்படுகிறதென்பர் .
பிரதோஷ வேளையை " ரஜ்னிமுகவேளை " எனவும் அழைப்பர் . இதற்கு இரவின் முகம் என்பது பொருளாகும் . நிகண்டுகள் பிரதோஷகாலத்தை இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன .
இந்தப்பொழுது சாயும்நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்குச் " சாயா '" என்பது ஒரு பெயராகும் . இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரஷிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் " சாயரட்சை " எனவும் அழைக்கப்படுகிறது என்பர் .
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள் ; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது . எனவே குற்ரமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று பிரதோஷ வேளைக்குப் பண்டிதர்கள் விளக்கம் கூறுவர் .
--- தினமலர் , இணைப்பு . மார்ச் 25 , 2010 .

No comments: