Monday, September 13, 2010

கடல் கொள்ளையர்கள் !

கிரேக்க நாட்டில் லெம்னோஸ் என்ற தீவு , கடற் கொள்ளையர்கள் மட்டுமே வாழக்கூடிய ஒரு தீவாக இருந்திருக்கிறது . ஒரு முறை ரோமானிய மாமன்னர் ஜூலியஸ் சீஸரையே கடத்திச் சென்றனர் சிசிலிய கடற்கொள்ளையர்கள் . அவரை விடுவிக்க 20 ஜாடி தங்கம் கேட்டனர் . சீஸரோ தான் 50 ஜாடி தங்கத்துக்குப் பெறுமானவன் என்று சொல்ல, பணயத் தொகை உயர்த்தப்பட்டது . சீஸர் விடுவிக்கப்பட்டதும் தன் ஒட்டுமொத்தக் கப்பல் படையோடு கொள்ளையர்களைத் தேடி பிடித்து வீழ்த்தி, அத்தனை பேரையும் கொன்றார் . 1990களுக்குப் பின்னர் நவீன காலத்தில் கடல் கொள்ளையின் கொடூரத்தை உணரவைத்தது சோமாலியர்கள்தான் .
---தீபக் . களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

No comments: