Sunday, September 12, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

ஃரான்ஸ் மியூஸியத்தில் இருந்த மோனோலிசா ஓவியம் 1911- ம் ஆண்டு ஆகஸ்ட் 21 -ம் தேதி காணாமல்போனது . நாடே பரபரக்க , ஓவியம் இல்லாத வெறும் ஃப்ரேமைப் பார்க்க மக்கள் குவிந்தார்கள் . 60 பேர் அடங்கிய குழு விசாரணையில் இறங்கியது . எந்தத் தகவலும் இல்லை . இரண்டு வருடங்கள் கழித்து, 1913 -ல் திருடிய ஓவியத்தை விற்க முயன்றபோது சிக்கினான் திருடன் .வின்சிரோ பெருஜியா என்ற பெயருள்ள அவன் மியூஸியம் ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவன் . ' நான் இத்தாலியில்வைத்து அழகு பார்க்கவே திருடினேன் ' என்று வாக்குமூலம் கொடுத்தான் . கைப்பற்றபட்ட ஓவியம் மறுபடியும் அதே இடத்தில் வைக்கப்பட்டது .
--- ஸ்ம்ருதி, இர. ப்ரீத்தி .களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

No comments: