Thursday, August 5, 2010

' சூரிய சுனாமி '

சூரிய ' சுனாமி ' அலைகள் பூமியை இன்று தாக்கும் . வெளிவட்டத்தில் திடீர் வெடிப்பு !
வெப்பத்தில் தகிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 01 . 08 . 2010 ) அடுத்தடுத்து இரண்டு ஒளிக்கீற்றுகள் வெளியானதை அமெரிக்க விண்வெளி நிலையத்தின் ( நாசா ) லேட்டஸ்ட் செயற்கைக் கோள் பதிவு செய்தது . அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர் . வெப்பத்தை இதுவரை இல்லாத அதிக அளவில் ஓரிடத்தில் இருந்து வெளியேற்றியதாகக் கூறினர் .
வாண வேடிக்கை போல நடந்த இந்த ஒளி வீச்சு , பூமியை விட பெரியது என்றும் , வெளியேற்றப்பட்ட வெப்ப அலைகள் பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .மணிக்கு 9.3 கோடி மைல்கள் வேகத்தில் வரும் பூமியை நோக்கி வரும் ' சூரிய சுனாமி ' அலைகள் , இன்று காலையில் பூமி வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது . அவை பூமியைக் காக்கும் இயற்கை காந்த பரப்பை கடுமையாக தாக்கும் . அதனால் , பிரிட்டன் உட்பட சில நாடுகளில் தகவல் தொடர்பு பாதிக்கப்படக்கூடும் .விண்வெளியில் செயற்கைக் கோள்கள் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .
சூரியனில் இருந்து பூமியை நோக்கி மிகப் பெரிய அளவில் வெப்ப அலைகள் வெளியாவது இதுவே முதல்முறை . சூரியனிடம் இருந்து பூமியை நோக்கி வெப்ப அலைகள் வெளிப்பட்டுள்ளதால் , வளிமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் வானிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .
--- தினகரன் & தினமலர் . 4 ஆகஸ்ட் , 2010 .

No comments: