Tuesday, August 31, 2010

ஒரு மாதம் டிராபிக் ஜாம் !

100 கி. மீ., நீளத்துக்கு வாகனங்கள் !
பிசியான சாலையில் டூ வீலரில் போகிறோம் . ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது . 2 நிமிடம் நிற்பதற்கே வெறுத்து போய் விடுகிறது . யார் யாரையோ சபிக்கிறோம் . இதற்கே இவ்வளவு டென்ஷனாகும் நம்மவர்கள் சீனாவில் நடக்கும் கூத்தை கேட்டால் ரொம்பவே ஆறுதல் அடைவார்கள் .
சீன தலைநகர் பெய்ஜிங் -- ஜாங்கியாகூ நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 14ம் தேதி தொடங்கியது . சரியான மாற்றுவழி ஏற்பாடு செய்யாததால் வாகனங்கள் இரு புறமும் குவிய தொடங்கின . எப்போதும் பரபரப்பான சாலை என்பதால் வாகன வரிசை கிலோமீட்டர் கணக்கில் நீண்டது . நாளுக்கு நாள் இந்த வரிசை வளர்ந்து இப்போது, அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் நிற்கின்றனவாம் . ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற அளவில்தான் வாகனங்கள் முன்னேற முடிகிறது .
இதுபற்றி பேசிய ஜாங்கியாகூ நகர டிராபிக் கமிஷனர் ஜாங் மிங் ஹே, ' கடந்த ஆகஸ்ட் 14ல் டிராபிக் ஜாம் தொடங்கியது . இன்னும் நீடிக்கிறது . எப்போது இது சரியாகும் என்று தெரியவில்லை . குறைந்தது 2 வாரமாவது ஆகும் ' என்று அலுத்துக்கொள்கிறார் .டிராபிக் ஜாம் சீன அரசுக்கு கவலை தந்தாலும் இதனால் ஒரு விதத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் . நீண்ட காலம் நீடித்த டிராபிக் ஜாம் என்ற வகையில் இது ஒரு உலக சாதனையாம் .
சாலை பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில் : செப்டம்பர் 17 க்கு முன்னர் வேலை முடிய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர் . எல்லாம் சரி, டிராபிக் ஜாமில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்க முடிகிறதா ? சாப்பாடு, தூக்கம், அரட்டை, சீட்டாட்டம், செஸ் என பொழுது போகிறதாம் .
நம்மூரில் நடப்பது போல டிராபிக் ஜாமை பயன்படுத்தி வியாபாரத்தை தொடங்கிவிட்டனர் உள்ளூர் மக்கள் . ஒரு டம்ளர் சுடுநீரை 14 ரூபாய்க்கு விறபதை தாங்கவே முடியலை என பொங்குகிறார் ஒரு டிரவர் .
சீனா என்றால் எல்லாவற்ரிலும் பிரமாண்டம்தான் . அதற்காக டிராபிக் ஜாமிலுமா ?
--- தினமலர் . 26. 8. 2010.

No comments: