Monday, August 30, 2010

பைசா கோபுரம் !

பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினர் . கி.பி. 1173 ஆகஸ்ட் 9ம் தேதி கட்டுமானப்பணி தொடங்கியது . போர்கள் மற்றும் கட்டுமானப் பிரச்னைகளால் கி.பி. 1372ம் ஆண்டுவரை இதை உருவாக்கும் பணி தொடர்ந்தது .
இதை சாதாரணக் கட்டடம் போல செங்குத்தாகவே கட்டினர் . அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் கி.பி , 1272 ல் கோபுரம் தென்மேற்கு பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது . இதன்பின் அடித்தளத்தை சிறிது சரிசெய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர் . ஆனாலும் சாய்வு நிற்கவில்லை . 1920ம் ஆண்டில் , அடித்தளத்தை நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்தனர் . இதனால் , 5.5 டிகிரியாக இருந்த சாய்மான அளவு 3.99 டிகிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது .
பைசா சாய்வுகோபுரத்தின் உயரம் 55.86 மீட்டர் . எடை , 14 ஆயிரத்து 700 டன் . இதன் மாடிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சுழல்படிக்கட்டில் 296 படிகள் உள்ளன !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 12 , 2010 .

No comments: