Monday, August 23, 2010

பந்தும் , குழலும் !

ஒருமுறை கால்பந்து இறைவனிடம் போய் முறையிட்டதாம் . ' நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துதான் இயங்குகிறோம் . புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள் . ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள் . இறைவா ! உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு ? ' என்று ஆதங்கத்தோடு கேட்டதாம் கால்பந்து .
அதற்கு இறைவன், ' புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது . ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாய் . அதனால்தான், உன்னை எல்லோரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள் ' என்று சொன்னாராம் .
இந்த கதை சொல்லும் கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும் . ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை, வரலாறு தன் குறிப்பேட்டில் பதித்து வைத்து கொள்ளும்; புகழ்ந்து மகிழும் என்பதுதான் .
--- இப்தார் விருந்தில் செல்வி . ஜெயலலிதா பேச்சு . தினகரன் & தினமலர் . ஆகஸ்ட் 19 . 2010 .

No comments: