Tuesday, August 24, 2010

கருப்பு பணம் பற்றிய தகவல் !

சுவிஸ் வங்கிகள் சங்கம் அறிவிப்பு . கருப்பு பணம் பற்றிய தகவல் அளிக்க 4 முக்கிய நிபர்ந்தனை. " எல்லா விவரமும் தர முடியாது '
உலகம் மூழுவதும் வரி கட்டாத, கணக்கில் வராத கருப்பு பணத்தை டெபாசிட் செய்து வைக்கும் சொர்க்கபூமியாக சுவிட்சர்லாந்து வங்கிகள் இருப்பதாக இந்தியா உட்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன . எனவே, கருப்பு பண டெபாசிட் பற்றி விவரங்களை அளித்து உதவுமாறு வலியுறுத்தி வருகின்றன .
எனினும், தங்கள் நாட்டில் பணத்தை டெபாசிட் செய்து வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளிநாடுகளுக்கு தெரிவிக்க சுவிஸ் மறுத்துவந்தது .
இந்நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பதில் நான்கு முக்கிய நிபர்ந்தனைகளை நிறைவு செய்தால் மட்டுமே தகவல் அளிக்க முடியும் என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் ( எஸ்பிஏ ) திடீரென அறிவித்துள்ளது .
வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விவரத்தை கேட்கும் நாடு, சந்தேகத்துக்குரிய நபரின் அடையாளம், அவர் மீது சுமத்தப்படும் குற்றம், சந்தேகம் எழுவதற்கான காரணங்கள், அவர் கணக்கு வைத்துள்ள வங்கி ஆகியவற்றை அந்தந்த நாட்டின் வருமான வரித் துறை மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கையாக அளிக்க வேண்டும் .
அப்படி பெறப்படும் குறிப்பிட்ட கணக்குகள் பற்றிய விவரங்களை மட்டுமே அளிக்க முடியும் என்று எஸ்பிஏ தெரிவித்துள்ளது
--- தினகரன் , ஆகஸ்ட் 23 . 2010..

No comments: