Saturday, August 21, 2010

தெரியுமா ? தெரியுமே !

* 1968 -ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் கென்னடியைச் சுட்டுக் கொன்றான் சர் ஹான் பிஷாரா என்பவன் . அவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது . ஆனால், தன் சகோதரனைக் கொன்றவனுக்காக நீதிமன்றத்தில் போராடி ஆயுள் தண்டனையாக குறைத்தார் கென்னடியின் சகோதரர் டெட் கென்னடி .
* ஆண் யானைகள் உறவுக்கு ரெடியாகும்போது அதன் நெற்றியில் மஸ்து என்கிற ஒரு திரவம் சுரக்கும் . அப்போது அவை ஆக்ரோஷமான மனனிலையில் இருக்கும் . பெண் யானைக்கு ஏற்பாடு செய்ய முடியாததால் , ஆண் யானையின் பாகன்கள் அதன்மேல் தண்ணீர் ஊற்றி கூல் பண்ண முயற்சி செய்வார்கள் . ' தேவை கிடைக்காத கோபத்தால் யானைகள் பாகன்களைப் பந்தாடுகின்றன . இதற்கு பெயர்தான் மதம் பிடிப்பது !
* இயேசுவைக் காட்டிக்கொடுக்க 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான் யூதாஸ் . இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் குற்ற உணர்வு தாளாமல் காசுகளைத் திருப்பிக் கொடுத்தபோது , ' இதை மறுபடியும் கஜானாவில் வைக்க முடியாது , ஏனெனில் ,இது ரத்தத்துக்குக் கிடைத்த விலை ' என்றார்களாம் . இதில் இருந்துதான் ' ப்ளட் மணி ' என்ற வார்த்தை தோன்றியது அதாவது , ரத்தத்துக்கு ஈடாகக் கொடுக்கும் பணம் .
--- ரிவெஞ்ச் விகடன் . 10. 03. 2010 .

No comments: