Thursday, August 19, 2010

தேடு .

உன்னைத் தேடு .
அன்பில் அமைதியைத் தேடு
இளமையில் கல்வியைத் தேடு
ஒற்றுமையில் பலத்தைத் தேடு
கோபத்தில் பொறுமையைத் தேடு !
பயணத்தில் விவேகத்தைத் தேடு
சிந்தனையில் அறிவைத் தேடு
சிரிப்பில் ஆரோக்கியத்தைத் தேடு
தோல்வியில் முயற்சியைத் தேடு !
நட்பில் நம்பிக்கையைத் தேடு'
கற்பனையில் கவிதையைத் தேடு
வேதனையில் உறுதியைத் தேடு
வாழ்க்கையில் நீ உன்னைத் தேடு !
--- எஸ். உதயபாலா , கீரனூர் . தினத்தந்தி , இணைப்பு 06.03. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

No comments: