Tuesday, August 17, 2010

' கோ துவாதசி '

கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் துவாதசி ' கோ துவாதசி ' எனப்படும் . அன்று கன்றுடன் கூடிய பசுவை பூஜித்து வணங்க வேண்டும் . உலகத்தில் உத்தமமமான பிராமணர் , பசுக்கள் இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் .இருவரும் ' அமுல்யம் ' அதாவது விலை மதிக்க முடியாதவர்கள் . உலகம் செழிப்பதற்காகப் பிரம்மதேவர் யக்ஞத்தைப்படைத்தார் . அந்த யக்ஞத்திற்கு மந்திரங்களும் ஹவிஸும் மிக முக்கியம் . மந்திரங்கள் உத்தமமான பிராம்மணர்களிடத்தில் இருக்கின்றன . ஹவிஸ் எனும் நெய் பசுக்களிடம் இருக்கிறது .இந்த உலகத்தில் பசுக்களுக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை .
--- பத்மா நாராயணன் , தாராபுரம் . பெண்மனி . டிசம்பர் , 2008 . இதழ் உதவி : K . மகேஷ் , திருநள்ளாறு .

No comments: