Wednesday, August 11, 2010

அற்புத காட்சி !

விண்ணில் ஓர் அற்புத காட்சி .
சனி , செவ்வாய் , வெள்ளி கிரகங்களை அருகருகே பார்க்கலாம் !
செவ்வாய், வெள்ளி, சனிக்கிரகங்கள் முக்கோண வடிவில் அருகருகே தெரியும் அற்புத காட்சியை விரைவில் மாலை நேரத்தில் வானத்தில் பார்க்கலாம் .
வானில் விரைவில் அதிசய காட்சி ஒன்று அரங்கேறப்போகிறது . செவ்வாய், வெள்ளி, சனிக் கிரகங்கள் முக்கோண வடிவத்தில் காட்சியளிக்கும் . இதை , 15 நாட்களுக்கு தினமும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு திசையில் பார்க்கலாம் .
இந்த கிரகங்கள் அருகருகே இருப்பதுபோல் காட்சியளித்தாலும், அவை நீண்ட தொலைவில் உள்ளன . பூமியில் இருந்து, வெள்ளி கிரகம் 11.38 கோடி கி. மீ. தூரத்திலும், செவ்வாய் 30.6 கோடி கி. மீ. தூரத்திலும், சனிக் கிரகம் 153 கோடி கி. மீ. தூரத்திலும் இருக்கின்றன . இதில், மற்ற கிரகங்களை விட வெள்ளி கிரகம் பூமிக்கு அருகில் இருப்பதால் பிரகாசமாக தெரியும் . 3 கோள்களுக்கு அருகிலேயே நாளை மறுதினம் பிறை சந்திரன் காட்சி அளிக்கும் .
இந்த அற்புத காட்சிகளை பைனாகுலர் உதவியுடன் தெளிவாக பார்க்கலாம் என்று கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் டி. பி. தாரி கூறினார் .
---- தினகரன் , செவ்வாய் , ஆகஸ்ட் 10 , 2010 .

No comments: