Tuesday, August 10, 2010

சிவாஜி கோட்டை !

இந்திய வரலாற்றில் கம்பீர சக்ரவர்த்தியாக ஜொலிக்கும் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த இடம் , ராய்காட் மலைக்கோட்டை .
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி. மீ. தொலைவில் , சஹாயத்ரி மலைப்பகுதியில் , ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்காட் கோட்டை .
ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டுவந்த இந்த பகுதியை கி.பி. 1656ல் கைப்பற்றிய சிவாஜி ராய்காட் என்று புதுப்பெயர் சூட்டினார் . ' நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும் , எதிரிகள் நுழைய முடியாதபடியும் கோட்டையை அமைக்க வேண்டும் ' என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜி சோந்தேவும் ஹிரோஜி இந்துல்கரும் , ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார் .
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி. 1674ல் இங்குதான் நடந்தது . இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார் . சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர் . பின்னர் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர் .
கோட்டைப் பகுதியில் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியனை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன .
இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜாகிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது . கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது .கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம் : சிவாஜியின் செல்ல நாயான வாக்யாவின் சமாதி , சிலை !
--- தினமலர். பிப்ரவரி 28 2010 .

No comments: