Sunday, August 8, 2010

மூன்றாம் கை !

கைகள் .....
இந்த ஒற்றைச் சொல்லில் இரண்டு அடங்கியிருக்கிறது . ஆம் . பிறக்கும்போதே ஒவ்வொருவரும் இரண்டு கைகளோடு தான் பிறக்கின்றோம் . பிறக்கின்ற எல்லோரும் வாகை சூடி வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றிருக்கிறார்களா ?
இல்லையே .... சிலர் மட்டும் சிகரங்களைத் தொட்டு இருக்கிறார்கள் . காரணம் , அவர்களிடம் மூன்றாவது கை முளைத்திருக்கும் .அது வெளியில் தெரியாத கை . உள்ளுக்குள் இருக்கும் உன்னதக் கை .
இது என்ன ? புரியாத புதிராக இருக்கிறது என்கிறீர்களா ? ஆம், அந்த மூன்றாவது கைதான் நம்பிக்கை .இதைத்தான் கவிஞர் மு. மேத்தா ,
" இரண்டு கை மனிதரால்
இயலாதது -- ஆனால்
மூன்றாவது கை மனிதரால்
முடியும்
அவர்களுக்கு
வானமும் வசப்படும்
கடலும் தனது
கதவு திறந்து
முத்தெடுத்துக் கொடுக்கும்
முத்தமும் கொடுக்கும்
இரு கை மனிதர்களுக்கு
இணையற்ற அந்த
மூன்றாம் கை எது ?
நானறிந்த வரை
நம்பிக்கை " -- என்பார் .
---.பேராசிரியர் க. ராமச்சந்திரன் . தினத்தந்தி இணைப்பு . 27 - 02 - 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

No comments: