Friday, August 6, 2010

ஒரு நாய் !

ஒரு சிக்கனுக்கு ஒரு நாய் !
சங்கரன் பிள்ளை , அசைவ விடுதி ஒன்றை நடத்திக்கொண்டு இருந்தார் . மெனுவில் , சிக்கன் கட்லெட்டும் ஒன்று . அதில் நாய்க்கறியும் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன . நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் சங்கரன் பிள்ளை .
நீதிபதி : " என்ன இது, சிக்கன் கட்லெட்டில் நாய்க் கறியைக் கலக்குகிறீர்களாமே ? அதுவும் அதிக அளவில் !"
சங்கரன் பிள்ளை : " கலப்பது உண்மைதான் யுவர் ஹானர் . ஆனால், சரிக்குச் சரியாக மட்டுமே ( 50 : 50 ) கலக்கிறேன் !"
நீதிபதி : " பெரிய அளவில் கலப்படம் செய்வதால் , உனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்போகிறேன் !"
சங்கரன் பிள்ளை : " ஆனால் நீதிபதி அவர்களே , நான்தான் அதிகமாகக் கலப்பதில்லையே . சரிக்குச் சரியான அளவுதானே கலக்கிறேன் !"
. நீதிபதி : " அப்படி என்றால் ?"
சங்கரன் பிள்ளை : " ஒரு சிக்கனுக்கு ஒரு நாய் , அவ்வளவுதான் !"
இப்படித்தான் நிறைய பேர் தங்கள் நோக்கத்தில் மட்டும் கவனமாக இருந்து , மற்றவர்கள் நலனை உதரிவிடுகிறார்கள் !
---சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஈஷா காட்டுப்பூ . செப்டம்பர் 2008 .

No comments: