Tuesday, August 3, 2010

கப்பல் -- ஆணி !

கடலில் சிறிய இரும்பு ஆணி மூழ்குகிறது ;ஆனால் இரும்பால் ஆன பெரிய கப்பல் மிதக்கிறதே ? இது எப்படி ?
தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும் .
தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் .
கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் தாராளமாக உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது .
சிறிய இரும்பு ஆணி மற்றும் இரும்பு பாளங்களின் வடிவமைப்பு , அவை தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன.
--- தினமலர் . பிப்ரவரி , 26 , 2010.

No comments: