Sunday, August 1, 2010

ராசி தோசை !

ராசிகளுடன் நமக்கிருக்கும் பிணைப்பைப் பயன்படுத்தி ஒரு புதுமையை வார்த்திருக்கிறார்கள் மதுரை , டெம்பிள் சிட்டி ஓட்டல்காரர்கள் . ராசிக்கேற்ற உணவு வகைகள் என்ற பெயரில் அவர்கள் வழங்கும் ராசி தோசை மக்களை அதிகமாகவே ஈர்த்திருக்கிறது .
வாதம், பித்தம், சிலேத்துமம் என நாடிகளை மூன்றாகப் பிரித்து நோய்களை இனம் கண்டு குணப்படுத்தும் நடைமுறை சித்த மருத்துவத்தில் உள்ளது . இதை அடிப்படையாகக் கொண்டு ராசிநாதனுக்கு உரிய கிரகங்களுக்கு உரிய தானியங்களையும் நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர் .
குரு, புதன் ஆகிய கிரகங்களுக்கு கொண்டை கடலை , சனி பகவானுக்கு எள் , சூரியன் , செவ்வாய் மற்றும் ராகுவுக்கு உளுந்து , கேது பகவானுக்கு கொள்ளு , சுக்கிரன் மற்றும் சந்திரனுக்கு மொச்சை , என தானியங்களை வகைப்படுத்தியுள்ளனர் .இதே போல் ஒவ்வொரு கிரகத்துக்கு உகந்த சுவையும் உண்டு . சூரியனுக்கு காரம், சந்திரனுக்கு இனிப்பு, செவ்வாய்க்கு துவர்ப்பு, புதனுக்கு உப்பு, குரு மற்றும் சுக்கிரனுக்கு தித்திப்பு, ராகு மற்றும் கேதுவுக்கு புளிப்பு என்பது ராசிநாதனுக்குரிய சுவை பட்டியல் .
மேஷ ராசிக்காரர்களுக்கு துவரம் பருப்புடன் கூடிய சாம்பார், ரிஷபத்துக்கு மொச்சை பயறு மசாலாவுடன் கூடிய தோசை, மிதுனத்துக்கு பச்சை பயறு வகையுடன் கூடிய தோசை, சிம்மத்துக்கு காரசார சைடுடிஷ்களுடன் கூடிய கோதுமை தோசை, கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சைப் பட்டாணி மசாலா தோசை, துலாம் ராசிக்கு சென்னா மசாலா தோசை, விருச்சிகத்துக்கு நவரச தோசை , தனுசுக்கு வெங்காய ஊத்தப்பம், மகரத்துக்கு வெங்காயத்துடன் கூடிய எள்ளு தோசை, கும்பத்துக்கு உருளைக் கிழங்கு மசாலா, எள்ளு தோசை, மீனத்துக்கு கொண்டை கடலை மசாலா தோசை என்று அந்தந்த ராசிகளுக்குரிய தானியங்கள் மற்றும் சுவைகளை அடிப்படையாக வைத்து தோசை வார்த்து வழங்குகிறார்கள் .
மேலும் ராசி தோசை என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சாதாரண தோசைகளுக்கான கட்டணமே வசூலிக்கப்படுகிறது .
---ஜோதி , தினமலர் . பிப்ரவரி 21 , 2010 .

No comments: