Friday, July 30, 2010

கஜூரோஹா கோயில்கள் !

மத்தியப்பிரதேசத்தின் சாதர்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன , கஜூரோஹா கோயில்கள்... கஜூர் என்றால் பேரீச்சை . கஜூரோஹா என்றால் பேரீச்சை மரங்கள் அதிகம் உள்ள பகுதி . இதன் வரலாறு ?
ஹேமவதி என்ற பிராமணப் பெண்ணை காந்தர்வ மணம் புரிந்தான் சந்திரன் . சந்திரவர்மன் என்ற மகன் பிறந்தான் .கொந்தளித்த சமூகம், ஹேமவதியை ஊர்விலக்கு செய்து காட்டுக்குள் விரட்டியது . காட்டுக்குள் துணிவோடு வாழ்ந்த ஹேமவதி , மகன் சந்திரவர்மனை வீராதிவீரனாக வளர்த்தபின் விண்ணுலகம் சேர்ந்தாள் . சந்திரவர்மன் மாமன்னனாகி, சந்தால அரச வம்சத்தைத் தோற்றுவித்தான் .
அவன் முன் தெய்வீக உருவில் வந்த ஹேமவதி , ' காமம் வெறும் மாயை என்பதை உணர்த்தும் கோயில்களைக் கட்டு ' என்று உத்தரவிட்டாள் . அதன்படி கஜூரோஹாவின் முதல் கோயிலை கி. பி. 950ல் கட்டினான் சந்திரவர்மன் . அவனது வம்சத்தினரும் இதே ரீதியான கோயில்களைக் கட்டினர்.. நூறு ஆண்டுகளாக - கி. பி. 1050 வரை மொத்தம் 85 கோயில்கள் ! இப்போது எஞ்சியிருப்பவை 22 !
இங்கு கண்டரிய மகாதேவ், மாதங்கேஸ்வரர், ஜகதாம்பிகா, 64 யோகினியர், விஸ்வநாத், சதுர்புஜர், வாமனர் , வராஹர், சித்ரகுப்தர், சூரியன், லஷ்மனர் உள்ளீட்ட இந்து கோயில்களோடு ஜைனமதக் கோயில்களும் ( பார்ஸ்வநாத் ) உள்ளன . மாதங்கேஸ்வரர் கோயில் போன்ற ஒரு சில கோயில்களில் வழிபாடு தொடர்கிறது .
--- தினமலர் இனைப்பு . பிப்ரவரி 21 . 2010 .

No comments: