Sunday, July 25, 2010

மோப்ப சக்தி !

மோப்ப உணர்வு செல்களின் எண்ணிக்கை, மனிதர்களிடம் 50 லட்சம் ; நாய்களிடம் 22 கோடி ! இதனால், நாய்களின் மோப்பசக்தி மனிதர்களின் மோப்பசக்தியைவிட மிக அதிகமாக இருக்கிறது .
கடலுக்குள் 40 அடிக்குள் கிடக்கும் உடல்களைக்கூட மோப்பசக்தியால் நாய்கள் கண்டுபிடித்துவிடும் . மனித மூச்சுக்காற்றை மோப்பம் பிடித்தே நுரையீரல் புற்றுநோய் இருக்கிறதா , இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் சக்தியும் நாய்க்கு இருக்கிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் .
நாய் பற்றி 2 வரலாற்று சுவாரஸ்யங்கள் : கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டர் , தனது செல்லநாயின் நினைவாக ' பெரிடாஸ் ' என்ற நகரையே உருவாக்கினார் ; மங்கோலியப் பேரரசர் குப்ளாய் கான் , தனது அரண்மனையில் 5 ஆயிரம் நாய்களை வளர்த்து வந்தான் .
--- தினமலர் . பிப்ரவரி , 19 . 2010 .

No comments: