Monday, July 19, 2010

தேவை !

கவனம் தேவை !
காலை உணவில் கவனம் தேவை .
சாதாரணமாக ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவை காலையில் சாப்பிடிவது உடல்நலத்துக்கு நல்லது என்று கண்டுபிடித்திருக்கிறது, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆய்வுக்குழு .
' இந்த வகையிலான உணவை சாப்பிட்டால் , இடையில் வேறு ஐட்டங்களை விழுங்க வேண்டிய அவசியம் இருக்காது மதியச் சாப்பாடு மற்றும் இரவு சாப்பாட்டின் அளவு தானாகக் குறையும் . இதனால், உடல் பெருத்து நோய்களை வரவழைக்கும் அவதியைத் தவிர்க்கலாம் ' என்பது இவர்களின் அட்வைஸ் !
" அரிசி, உளூந்து கலந்த தோசைக்குப் பதில் , பருப்புவகைகளால் தோசை தயாரித்து சாப்பிடலாம் . சாதரண இட்லிக்குப் பதில் வெஜிடபிள் இட்லிக்கு மாறலாம் " என்கிறார் , இந்தியாவின் பிரபல டயட்டீஷியன் பத்மா விஜய் .
ஒரு ' நினைவூட்டல் ' : ' நோயற்ற வாழ்வு வேண்டுமா ? காலையில் ராஜா போல் சத்தான உணவும் , மதியத்தில் நோயாளி போல் குறைவான உணவும், இரவில் பிச்சைக்காரர் போல் மிகமிகக் குறைவான உணவும் சாப்பிடுங்க ! ' என்பது நமது மருத்துவ பாரம்பரிய அறிவுரை . இதைத்தான் இங்கிலாந்து பல்கலை, குழு ஆய்வும் உறுதிசெய்திருக்கிறது !
--- தினமலர். பிப்ரவரி . 14 . 2010.

No comments: