Monday, June 28, 2010

விபத்து !

சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார் . ஒரு திருப்பத்தில் , எதிரில் வந்த காருடன் அவருடைய கார் மிக மோசமாக மோதியது . இரண்டு கார்களும் கவிழ்ந்தன . சங்கரன் பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார் . மோதிய காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து வந்தாள் .
அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன் பிள்ளை நினைத்திருக்க , அவள் புன்னகைத்தாள் . " நாம் சந்தித்து இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்த விபத்து இது . இல்லை என்றால், கார்கள் தகரமாக நசுங்கிய பின்னும், நாம் இருவர் மட்டும் அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம் ?" என்றாள் .
அவளுடைய அழகு, சங்கரன் பிள்ளையை அசத்தியது .
" உண்மைதான் " என்று இளித்தார் .
" இதைப் போன்ற சந்திப்புகளை கொண்டாடுவதற்காகவே இதை என் பையில் வைத்திருப்பேன் " என்று அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள் . திறந்தாள் . சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள் .
" உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை எனக்குத் தாருங்கள் " என்றாள் .
சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை . பாதி பாட்டிலுக்கு மேல் காலி செய்துவிட்டு , அவளிடம் நீட்டினார் .
அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல் செய்தாள் .
" யாருக்கு போன் ?" என்றார் சங்கரன் பிள்ளை .
" போலீஸுக்கு !"
" எதற்கு ?"
" குடித்துவிட்டு வந்து என் கார் மீது மோதிய உங்களை விசாரிப்பதற்கு " என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின் பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள் . விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த அந்தப் பெண் எங்கே ?
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆ. விகடன் , 13. 01. 2010 .

2 comments:

Azhagan said...

This is a comedy scene from the film "priyamaana thozhi". Ramesh khanna has acted in this comedy. Now did vikraman take a piece of Jakki's cake or is it the other way around?. Probably Jakki has taken it from the film since his article has appeared in 2010.

க. சந்தானம் said...

Dear azhagan, Thank you for your information .