Wednesday, June 16, 2010

ஹா..ஹா ..ஹி ..ஹி.

* " ' காதலிக்கிறது ஒரு கலை 'ன்னு லவ்வர் அடிக்கடி சொல்றதோட அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுது !"
" என்னாச்சு ?"
" கலைச்சிடச் சொல்றார் !"
* " அந்தப்புரத்தில் அதிக நேரம் பொழுதைப் போக்க வேண்டாம் எனக் கூறினேனே, மன்னா?"
" அதற்கென்ன இப்போது அமைச்சரே ?"
" மக்கள் உங்களை ' அந்தப்புறம்போக்கு ' என அழைக்கிறார்கள் மன்னா !"
* " டாக்டர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரா எப்போ வருவார் ?"
" செத்த நேரத்துல வந்துடுவார் !"
* " சிவகாசிக்கும் , நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க ?"
" சிவகாசியில காசை கரியாக்கிறான், நெய்வேலியில கரியை காசாக்கறான் !"
* " கபாலி, நேத்து ஏன் மாமூல் கொண்டுவரல ?"
" காய்ச்சலு எஜமான் !"
" இன்னைக்கு ஏன் கொண்டுவரல ?"
" காய்ச்சல எஜமான் !"
* " தலைமுறை தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடறமாதிரி எங்க தாத்தா பண்ணி வெச்சுட்டுப் பொயிட்டாரு !"
" அவ்வலவு சொத்துக்களா ?"
" இல்லை...! டைனிங் டேபிள் !"
* " நான் ஒரு கேள்வி கேட்பேன் . அதுக்கு தெரியும் அல்லது தெரியாதுன்னு மட்டும் தான் பதில் சொல்லணும் ?"
" சரி கேளு "
" நீங்க ஒரு லூசுன்னு உங்க வீட்டுக்குத் தெரியுமா ?"

No comments: