Wednesday, June 9, 2010

மனஸ்தாபம் .

சினன சினன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் கொண்டு பேச்சை நிறுத்தி விடுவது நண்பர்கள் மத்தியிலும் , கணவன் மனைவியிடையேயும் பழக்கமாக இருக்கிறது . இது தேவையில்லாதது . இப்படித்தான் ஒரு குடும்பத்தில் கணவன் -- மனைவி சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நின்று போனது . ஆனாலும் , வாழ்ந்தாக வேண்டுமே !
அதனால் கணவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அதைத் தாளில் எழுதி மனைவியிடம் காட்டுவார் . அந்தம்மா எதுவும் கேட்க நினைத்தால் தானும் அது போலவே தாளில் எழுதி அவரிடம் அதற்கான பதிலைக் கேட்பார் .
" காலையில் என்ன டிபன் செய்யட்டும் ?" - இது அந்தம்மா .
" பொங்கல் -- சாம்பார் செய்யவும் " -- இது அவர் .
" மாலையில் எப்போ வீட்டுக்கு வருவீங்க ?"
" ஆறு மணிக்குமேல் ஆகும் ."
" மளிகைச் சாமான்கள் வாங்கப் பணம் வேண்டும் ."
" கைப்பையில் இருக்கிறது . எடுத்துக் கொள் ."
இப்படியே நடந்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் பிரச்னை பெரிதாகி விட்டது . " நான் நாளை அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து ரயிலைப் பிடிக்க வேண்டும் . நான்கு மணிக்கு என்னை எழுப்பி விடவும் " என்று எழுதி மேஜை மேல் வைத்து விட்டுப் படுத்து விட்டார், கணவர் . ஆனால் காலை ஆறு மணிவரை தூங்கி விட்டார் . எழுந்ததும் " ஏன் என்னை எழுப்பி விடவில்லை ?" என்று மனைவியைப் பார்த்துக் கத்தினார் .
" சும்மா கத்தாதீங்க . ' மணி நான்காகி விட்டது . எழுந்திருக்கவும் என்று எழுதி உங்க தலையணைக்கு அடியில் வைச்சிருக்கேன் " -- இது அந்தம்மாவோட பதில் . இது எப்படி ?
-- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . டிசம்பர் 2009 .

2 comments:

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..நல்ல விதமா சொல்லியிருக்கீங்க..

க. சந்தானம் said...

அன்பு தாராபுரத்தான் அவர்களுக்கு, வணக்கம் . ரொம்ப நன்றி !