Sunday, June 6, 2010

மனிதா.... மனிதா !

தூக்கத்தை தொலைத்தவன்
பணக்காரன்
தூங்க மறந்தவன் படைப்பாளி
தூங்க பயந்தவன் பகையாளி
தூங்கியும் வாழ்பவன் பண்பாளி .
நினைவை இழந்தவன் மனநோயாளி
நினைக்க மறந்தவன் குற்றவாளி
நினைக்க பயந்தவன் கடனாளி
நினைப்பில் வாழ்பவன் தொழிலாளி .
விழிப்பை இழந்தவன் குருடன்
விழிக்க மறந்தவன் படிக்காதவன்
விழிக்க பயந்தவன் சோம்பேறி
விழிப்போடு வாழ்பவன் அறிவாளி .
--- தி, சண்முகப்பிரியா . அவள் விகடன் . 1 . 1 . 2010.

No comments: