Friday, April 30, 2010

அப்படியா !

* சர். சி. வி . ராமன் அவர்களுக்கும் , மதர் தெரஸாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . இருவரும் உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் விருதையும் , இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதையும் பெற்றவர்கள் .
* இந்தியாவின் மிகப் பழமையான அணைக்கட்டு தமிழகத்தில் உள்ள திருச்சி கல்லணைதான் . இலங்கையிலிருந்து பிடித்து வரப்பட்ட கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது இந்த அணை என்பது குறிப்பிடத்தக்கது .
* யானைகளின் காதுகளில் ஏராளமான ரத்தக் குழாய்கள் உள்ளன . யானை தன் காதுகளை சில தடவைகள் முன்னும் பின்னும் அசைத்தாலே போதும் , அவற்றின் உடல் வெப்பம் குறைந்து ரத்தமும் குளிர்ச்சி அடையும் . யானைகள் இதனால்தான் தன் காதுகளை ஆட்டிக் கொண்டே இருக்கின்றனவாம் .
* மழை நீரில் 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஓடி கடலை அடைகிறது . மீதி 72 சதவீதம் ஆவியாகி காற்று மண்டலத்தை மீண்டும் அடைகிறது .
* கிரேக்க நாட்டிலே யூரல் மலைப்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நகரம் உள்ளது . இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது . இந்த நகரின் பெயராலேயே கல் நாருக்கு ஆஸ்பெஸ்டாஸ் என்ற பெயர் வந்தது . கிரேக்க மொழியில் ஆஸ்பெஸ்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று அர்த்தம் .
--- பாக்யா . டிசம்பர் 4 -- 10 ; 2009 .

No comments: