Tuesday, April 20, 2010

ஆதிசங்கரர் .

ஆதிசங்கரருடைய பெற்றோர் நீண்டகாலமாகப் பிள்ளை இல்லையே என்று விரதம் இருந்தார்கள் . ஒரேநாள் ஒரேசமயம் இருவர் கனவிலும் இறைவன் தோன்றி , ' நீண்ட நாள் வாழும் மோசமான பிள்ளை உனக்கு வேண்டுமா.... கொஞ்சநாள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா ?' என்று கேட்டார் . ஆச்சர்யம் பாருங்கள்... " அதெப்படி நானே முடிவு செய்ய முடியும் ? என் மனைவியைக் கேட்டு சொல்கிறேன் " என்றபடி கணவர் எழுந்தார் . அதேகணம் , " கணவரைக் கேட்டுச் சொல்கிறேன் " என்று மனைவி கண்விழித்தாள் . இந்த அகங்காரமற்ற தம்பதி வயிற்றில் தான் ஆதிசங்கரர் பிறக்க முடியும் ! இருவருமே சேர்ந்து , " நாங்கள் யார் முடிவு செய்ய ? நீயே முடிவு செய் " என்று அகங்காரமற்று கடவுளிடம் முடிவை விட்டனர் .
மண்டைக் கனம் உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டார்கள் . மன வருத்தத்தோடுதான் வாழ்வைக் கழிப்பாரகள் . தீப்பெட்டியில் தீக்குச்சி உரசுகிறது . பெட்டி எரிவதில்லை . குச்சி எரிந்து கருகுகிறது . ஏன் ? குச்சிக்கு மண்டைக் கனம் ஜாஸ்தி !
--- சுகி. சிவம் . தினகரன் . இணைப்பு . 30. 01. 2010 .

No comments: