Sunday, April 18, 2010

போர்த் துளிகள் ...

* ஆரம்பத்தில் போர் விமானங்கள் பொருட்களைக் கொண்டுசெல்ல மட்டுமே பயன்பட்டன . 1911-ல் துருக்கியப் போரின்போது குண்டுகளை எடுத்துச் சென்ற இத்தாலிய விமானி ஒருவர் , ' நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லையே ' என்ற ஆதங்கத்தில் , இரண்டு குண்டுகளைக் கையில் எடுத்து வீசினார் . இப்படித்தான் விமானத்தில் இருந்து குண்டு வீசும் முறை உருவானது .
* ஹிட்லர் பெர்சனலாகப் பயன்படுத்திய ரயிலுக்குப் பெயர் ' அமெரிக்கா '.
* ஜெர்மனி வீழ்த்தப்பட்டதும் , ரைன் நதியின் மீது கூட்டணிப் படைவீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று சிறு நீர் கழித்தனர் . போர்க் காலங்களில் இது சர்வசாதாரணம் . கடைநிலைப் போர் வீரனில் இருந்து சர்ச்சில் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல .
--- யுத்தம் விகடன் . 25 . 11 . 2009 . இதழுடன் இணைப்பு .

No comments: