Saturday, April 3, 2010

ஆனந்தம் !

வீடு ஆனந்தம் !
எல்லோரும் தத்தமது வீடுகளில் அவசியம் வளர்க்க வேண்டிய 5 வகையான பச்சிலைகள் உண்டு . அவை மருத்துவச் செலவைக் குறைத்து , ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துபவை .
வெட்டுக்காயப் பச்சிலை :
உடம்பில் ஏற்படும் காயத்தின் மீது இந்த இலையின் சாறைப் பிழிந்துவிட்டால் , ஓரிரு நாட்களில் காயம் இருந்த இடம் தையல்போட்டது போல ஒட்டிக்கொள்ளும் .
அம்மான் பச்சரிசிப் பச்சிலை :
வயிற்று வலிக்கு மிகச் சிறந்த மருந்து . பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் , சாதாரண வயிற்று வலிக்கும் இந்தப் பச்சிலைச் சாறு உடனடி நிவாரணத்தைத் தரும் .
ஆவாரம்பூ :
' ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ' என்பது சித்தர் பாட்டு . ஆவாரம் பூவை தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு ஓடிவிடும் . இதன் பூவை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சர்க்கரை போட்டுக் குடித்தால் வயிறு தொடர்பான நோய்கள் விலகிவிடும் .
கீழா நெல்லி :
மஞ்சள் காமாலைக்கு இதைவிடச் சிறந்த மருந்து இல்லை .
கார்த்திகைப் பூ :
வேரோடு பிடுங்கிக் காயவைத்து கஷாயம் வைத்துக் குடித்தால் , சிறுநீரகக் கல் கரைந்தோடி விடும் . ' லட்ச ரூபாய் செடி ' என்பது இதன் செல்லப் பெயர் . ' வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு !'
--- பாரதி தம்பி . ஆனந்தவிகடன் , 04 . 11 . 2009 .

No comments: