Thursday, March 25, 2010

ஆகா , அது .

சிவ பக்தரான வணிகரொருவர் , சிவனடியார் ஒருவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் .
அவர் மனைவி , " காய்கறி எதுவும் இல்லையே ? நம் வீட்டுக் கொல்லையில் கீரை நிறைய பயிராகியிருக்கிறது . போய்ப் பறித்து வாருங்கள் ," என்றாள் . வணிகர் தோட்டத்துக்கு ஓடினார் . சிவனடியாரும் வணிகருடன் சேர்ந்து கீரை பறித்தார் .
வணிகரின் மனைவி இருவர் பறித்து வந்த கீரையையும் தனித்தனியாக நறுக்கி , தனித்தனிப் பாத்திரத்தில் சமைத்தாள் .
பிறகு சிவனடியார் பறித்து வந்த பாத்திரத்தை மட்டிலும் சுவாமி படத்திற்கு முன் வைத்து நிவேதனம் செய்தாள் . தான் பெரிய மகான் என்பதால் தன் கீரையை மட்டும் நிவேதனத்துக்கு உகந்ததாக எண்ணிச் செய்திருக்கிறாள் என்று வந்திருந்தவர் பெருமையுடன் நினைத்துக்கொண்டார் . வணிகரின் மனைவியிடமும் அப்படியே கூறினார் .
அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே சொன்னாள் : " அப்படி இல்லை , சுவாமி . நீங்கள் இருவரும் கீரை பறித்துக் கொண்டிருக்கும்போது , என் கணவர் சிவ நாமத்தைத் தன் வாயால் சொல்லிக் கொண்டே பறித்தார் . ஆகவே அவர் பறித்த கீரை அப்போதே இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது . தாங்கள் வெறுமே கீரையைப் பறித்ததால் தங்கள் கீரையைத் தனியாகச் சமைத்துத் தனியாக நிவேதனமும் செய்தென் ."
--- திரு , ஹரிதாஸ் சுவாமிகள் கூறக் கேட்டது .

No comments: