Friday, March 19, 2010

கண்ணன் கானம் !

கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் என்று இலக்கிய கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தார் கண்ணதாசன் . முன் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து , ' கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல்கூட பட்டமரம் தானே ? கண்ணபிரான் கைகளில் இருந்தும் அதுமட்டும் ஏன் தளிர்க்கவில்லை ' என்று கேட்டார் . உடனே கண்ணதாசன் , ' கண்ணன் கானத்தை கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் . ஆனால் , புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக்கொண்டிருக்கிறது . பெருமானின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது . நேராக மோட்சம்தான் . அதனால்தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை ' என்று பளிச் பதில் கூறினார் .
--- தினமலர் . சண்டே ஸ்பெஷல் , நவம்பர் 1 , 2009 .

No comments: