Tuesday, March 16, 2010

நமஸ்காரம் .

நமஸ்காரம் செய்யும்போது மூன்று தடவையாவது 5, 7 , 12 தடவையாவது நமஸ்காரம் செய்ய வேண்டும் . ஒரு முறையோ இரண்டு முறையோ செய்யலாகாது . ஆண்கள் விழுந்து வணங்கும் போது தலை , இரண்டு காதுகள் , இரண்டு கைகள் , இரண்டு கால்கள் , முகம் ஆகியவை பூமியில் படுமாறு பதித்து வணங்க வேண்டும் . இதனை அஷ்டாங்க நமஸ்காரம் அல்லது சர்வாங்க நமஸ்காரம் என்பார்கள் .
பெண்கள் நமஸ்கரிக்கும் போது தலை , இரண்டு கைகள் , இரு முழந்தால்கள் ஆக ஐந்து அங்கங்கள் பூமியில் நன்கு படும்படி வணங்க வேண்டும் . இதை பஞ்சாங்க நமஸ்காரம் என்பார்கள் .
கொடி மரத்தை தாண்டியபின் வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் கூடாது .
தெய்வத்தை கையெடுத்து வணங்க சில முறைகள் உண்டு . தலையால் மட்டும் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் . தலையின் மேல் வலக்கரம் குவித்து வணங்குதல் த்விதாங்க நமஸ்காரம் . தலையின் மேல் இரு கைகளையும் குவித்து வணங்குதல் த்ரிவிதாங்க நமஸ்காரம் . ஆண்கள் இம்முன்று வகையிலும் வணங்கலாம் . பெண்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவே வைத்து வணங்கவேண்டும் .
--- தினமலர் . பக்தி மலர் . அக்டோபர் 29 . 2009 .

No comments: