Thursday, March 11, 2010

போலீஸ் நாய் !

பொதுவாகவே நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் . அதே நேரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதனின் செல்லப் பிராணியாய் அவன் கூடவே வசித்து வருவதால் நாய்களுக்கு மனிதனின் வாழ்க்கை பற்றியும் நன்கு தெரியும் . அதனால் நாய்களைப் பழக்குவது என்பது எளிதான விஷயம் .
நாய்களில் தனி வகைகளான டாபர்மேன் , பிஞ்சர் , ஜெர்மன் ஷெப்பர்ட் , லாபரேட்டர்ரெட்ரீவர் போன்றவை போலீஸ் டிரெயினிங்கிற்கு மிக உகந்தவை . இவை மூன்று மாத குட்டியாக இருக்கும் போதே கென்ன்ல்கிளப் எனப்படும் நாய்களுக்கான அமைப்பில் இருந்து போலீஸ் வாங்கும் .
உடனே பயிற்சிகள் ஆரம்பித்து விடும் . சொல்வதைக் கேட்பது , மோப்பம் பிடிப்பது இதுதான் முதல்கட்டப் பயிற்சி . அதில் தேர்ச்சி பெற்றதும் ஆயுதங்கள் , வெடிகுண்டுகள் , குற்றவாளிகளின் வாசனை போன்றவற்றை மோப்பம் பிடிக்க பிரத்யேகப் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் .ஒரு வகையில் இந்த நாய்களுக்கு ராஜயோகம்தான் . மின்விசிறி உள்ள அறையில்தான் இவை தூங்கும் . எனர்ஜி டானிக்குகள் , அவித்த முட்டை , பால் , மாட்டுக்கறி , பிரியாணி , ரொட்டித் துண்டுகள் போன்றவற்றை வெளுத்துவாங்கும் . போலீஸ் நாய்களில் அதிகம் வேவு பார்ப்பது பெண் நாய்களே . ஆண் நாய்களைவிட அவற்றுக்குத் திறமை அதிகமாம் . அதிக பட்சம் ஒரு நாய் போலீஸில் பத்து ஆண்டுகள் பணிபுரியும் . அதற்குப் பிறகு சல்யூட் அடித்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் . ரிடையர்மெண்ட் பணம் எல்லாம் கிடையாது . பாவம் !
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009 .

No comments: